08.06.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 15.11.2005 Om Shanti Madhuban
உண்மையான இதயத்துடன் தந்தைக்கும் குடும்பத்திற்கும் அன்பானவராகி, சிரமப்படுவதில் இருந்து விடுபடுவதாகச் சத்தியம் செய்து, அந்த சத்தியத்தின் நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது மேன்மையான குழந்தைகளை, சுய இராச்சிய அதிகாரத்தின் உரிமையைக் கொண்டவர்களையும் தமது சுய மரியாதை ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களையும் பார்க்கிறார். தந்தை குழந்தைகளுக்குக் கொடுக்கும் மரியாதை, அவரை விட அதியுயர்ந்தது ஆகும். அவர் ஒவ்வொரு குழந்தையும் தனது பாதங்களில் விழுவதில் இருந்து விடுவித்து, தனது தலையின் கிரீடங்களாக ஆக்கியுள்ளார். அவர் எப்போதும் தன்னை அன்பான குழந்தைகளின் சேவகர் என்றே அழைப்பார். அவர் குழந்தைகளுக்கு இத்தகைய மகத்தான அதிகாரத்தின் மரியாதையை வழங்கியுள்ளார். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய சுயமரியாதை கொண்டவர்களாக உங்களைக் கருதுகிறீர்களா? தமது சுய மரியாதையில் ஸ்திரமாக இருக்கும் ஒருவரின் விசேடமான தகைமை என்ன? ஒருவரிடம் எந்தளவிற்கு சுயமரியாதை உள்ளதோ, அதற்கேற்ப அவர் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். ஒருவரிடம் எந்தளவிற்கு மரியாதை உள்ளதோ, அந்தளவிற்கு அவர் பணிவாக இருப்பதுடன் எல்லோராலும் நேசிக்கப்படுவதுடன் எல்லோரிடமும் அன்பாக இருப்பார். (சர்வ கா பியாரா - எல்லோரிடமும் அன்பாக இருப்பதுடன் எல்லோராலும் நேசிக்கப்படுவார்). சுயமரியாதை கொண்டிருக்கும் ஒருவரின் அடையாளம், அவர் தந்தையை நேசிப்பார், அத்துடன் எல்லோரையும் நேசிப்பார். அவர் எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையானவர்களிடம் அன்பு வைத்திருக்க மாட்டார், ஆனால் எல்லையற்றவர்களிடம் அன்பு வைத்திருப்பார். தந்தை எல்லோராலும் நேசிக்கப்படுகிறார். ஒருவர் ஒரு மாதக் குழந்தையோ அல்லது ஆதி இரத்தினமோ, ஒவ்வொருவரும், நான் ‘பாபாவினுடையவன், பாபா என்னுடையவர்’ என்றே நம்புகிறார்கள். இந்த மேன்மையான சுயமரியாதையே, எல்லோராலும் நேசிக்கப்படுவதன் அடையாளம் ஆகும். ஏனென்றால், இத்தகைய குழந்தைகளே தந்தையைப் பின்பற்றுபவர்கள். பாருங்கள், சிறு குழந்தைகளில் இருந்து வயதான, முதிர்ச்சியான குழந்தைகள் வரை தந்தை எல்லா வயதினருக்கும் மரியாதை கொடுத்துள்ளார். இளைஞர்களுக்கு அவர்களை அழிவை ஏற்படுத்துபவர்களில் இருந்து உலக உபகாரிகளாக அவர்களைப் பார்க்கும் மரியாதையை அவர் வழங்கி உள்ளார். அவர் அவர்களை மகான்கள் ஆக்கியுள்ளார். ஒரு குடும்பத்தில் வாழும் இல்லறத்தவர்களை அவர் மகாத்மாக்களையும் மகா ஜகத்குருக்களையும் (சந்நியாசிகள்) விட அதி உயர்வானவர்கள் ஆக்கியுள்ளார். அவர்கள் வீட்டில் வசித்தாலும் மகாத்மாக்களுக்குக் கடமைப்பட்டவர்களாகவும் அப்பால் இருக்கும் மனோபாவத்தைக் கொண்டவர்களாகவும் பணிந்து நடப்பவர்களாகவும் ஆக்கியுள்ளார். அவர் குமாரிகளுக்கு அவர்களின் சிவசக்தி ரூபத்தின் மரியாதையை நினைவூட்டி, அவர்களை அப்படி ஆக்கியுள்ளார். அவர் வயதான, முதிர்ந்த, அனுபவசாலிக் குழந்தைகளுக்கு தந்தை பிரம்மாவிற்குச் சமமாக இருக்கும் மரியாதையை வழங்கி உள்ளார். அதேபோல், தமது சுயமரியாதையில் ஸ்திரமாக இருக்கும் குழந்தைகள், ஒவ்வோர் ஆத்மாவையும் அந்த மரியாதையுடனேயே பார்ப்பார்கள். அவர்கள் அவர்களை அந்த முறையில் பார்ப்பது மட்டும் அன்றி, அந்த முறையில் அவர்களுடன் ஓர் உறவுமுறையை அல்லது தொடர்பைக் கொண்டிருப்பார்கள். சுய மரியாதை (சுவமான்) சரீர உணர்வை (தேக அபிமான்) முடிக்கிறது. எங்கே சுய மரியாதை உள்ளதோ, அங்கே சரீர அகங்காரம் இருக்காது. சதா உங்களின் சுய மரியாதையில் இருப்பதே, சரீர உணர்வை முடிப்பதற்கான மிகவும் இலகுவான வழிமுறை ஆகும். எப்போதும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் பாருங்கள். ஒருவர் காலாட்படையில் ஒருவராக இருந்தாலென்ன, அல்லது 16000 மாலையின் கடைசி இலக்கத்தில் இருந்தாலென்ன, நாடகத்தின்படி, இறுதி இலக்கத்தில் இருப்பவரும் தந்தையிடம் இருந்து ஏதாவதொரு சிறப்பியல்பைப் பெற்றுள்ளார். சுயமரியாதை உள்ள ஒருவர் மற்றவர்களின் சிறப்பியல்பைப் பார்த்து அவர்களுக்கு மரியாதை கொடுப்பார். ஒவ்வொருவரின் சிறப்பியல்பும் அவரின் பார்வையில், மனோபாவத்தில், செயல்களில் கலந்திருக்கும். தந்தைக்குச் சொந்தமான எவரும் ஒரு விசேடமான ஆத்மாவே ஆவார். அவர் வரிசைக்கிரமமாக இருந்தாலும் உலகிலுள்ள ஆத்மாக்களுடன் ஒப்பிடும்போது, அவரே பலமில்லியன்களில் ஒருவர் ஆவார். இந்த முறையில் நீங்கள் எல்லோரும் உங்களை விசேடமான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் உங்களின் சுய மரியாதையில் ஸ்திரமாக இருக்க வேண்டும். சரீர உணர்வில் அல்ல, ஆனால் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையிலும் ஏன் தந்தை அன்பு வைத்திருக்கிறார்? ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும் தன்னை இனங்கண்டு, தனக்குச் சொந்தமாகி உள்ளார் எனத் தந்தைக்குத் தெரியும். அவர்கள் இந்த ஒன்றுகூடலுக்கு முதல் தடவை வந்திருந்தாலும் ‘பாபா’ என அந்தக் குழந்தை கூறியுள்ளதால், தந்தையின் அன்பைப் பெறுவதற்கு அவர் தகுதி வாய்ந்தவர் ஆகுகிறார். பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். நேசிக்கப்படாதவர் என்று ஒருவரேனும் கிடையாது. ஒவ்வொருவரும் நேசிக்கப்படுகிறார்கள். பாருங்கள், ‘எனது பாபா’ எனச் சொல்கின்ற எந்தவொரு குழந்தையும் - ‘எனது’ என்ற இந்த உணர்வை எது ஏற்படுத்துகிறது? அது அன்பே ஆகும். இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் எல்லோரும் அன்பே உங்களைத் தந்தைக்குச் சொந்தம் ஆக்கியுள்ளது என்பதை உணர்கிறீர்கள். தந்தையின் அன்பு ஒரு காந்தம் போன்றது. அந்த அன்பெனும் காந்தத்தால், நீங்கள் தந்தைக்குச் சொந்தம் ஆகுவதற்கு வந்துள்ளீர்கள். அன்பு இதயபூர்வமானது. வார்த்தைகளில் மட்டும் உள்ள அன்பு அல்ல. இதயபூர்வமான அன்பே இந்த பிராமண வாழ்க்கையின் அத்திவாரம் ஆகும். நீங்கள் ஏன் பாபாவைச் சந்திக்க வருகிறீர்கள்? அன்பே உங்களை இங்கே அழைத்து வந்தது, அப்படித்தானே? இங்கே வந்து அமர்ந்துள்ள நீங்கள் எல்லோரும் ஏன் வந்துள்ளீர்கள்? அன்பே உங்களை இழுந்து வந்தது, அப்படித்தானே? உங்களிடம் எந்தளவு அன்பு உள்ளது? அது 100 சதவீதமா அல்லது அதை விடக் குறைவானதா? உங்களிடம் 100 சதவீதம் அன்பு இருக்கிறது என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் அன்பில் 100 சதவீதமா? அது சிறிதளவேனும் குறைவாக இல்லையல்லவா? அச்சா, பிராமணக் குடும்பத்திற்குள்ளும் உங்களுக்கு இடையே அதே அளவு அன்பு உள்ளதா? இதற்காக உங்களைக் கைகளை உயர்த்தும்படி பாபா கேட்கட்டுமா? இதில் சதவீதம் காணப்படுகிறது. தந்தை எல்லோரின் மீதும் அன்பு வைத்திருப்பதைப் போல், குழந்தைகளான நீங்களும் எல்லோரின் மீதும் அன்பு வைத்திருக்கிறீர்கள். அத்துடன் எல்லோராலும் நேசிக்கப்படுகிறீர்கள். மற்றவர்களின் பலவீனங்களைப் பார்க்காதீர்கள். யாராவது ஒருவர் ஒரு சம்ஸ்காரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டால், நீங்கள் யாரைப் பின்பற்ற வேண்டும்? ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களையா? நீங்கள் மனதை ஒழுங்குபடுத்தும் மந்திரத்தை, ஆதிக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும் மந்திரத்தை வழங்குபவர்கள். நீங்களே அவர்களை விடுவிப்பவர்கள், அப்படித்தானே? அல்லது, நீங்கள் மற்றவர்களைப் பார்ப்பவர்களா? அல்லது, உங்களால் அவர்களின் பலவீனங்களைப் பார்க்க முடிகிறதா? தீங்கான எதையாவது கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதைத் தொடர்ந்து பார்ப்பீர்களா அல்லது அதில் இருந்து விலகிச் செல்வீர்களா? தமது இதயங்களில் அன்பைக் கொண்டிருப்பவர்கள், தமது இதயங்களில் தந்தைக்கான அன்பைக் கொண்டிருப்பவர்கள், நிச்சயமாக எல்லோராலும் நேசிக்கப்படுவார்கள் என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். இதயபூர்வமான அன்பு, சம்பூரணமாகவும் முழமையாகவும் ஆகுவதற்கான மிக இலகுவான வழிமுறை ஆகும். சிலர் எவ்வளவு ஞானிகளாக இருந்தாலும் தமது இதயங்களில் அன்பைக் கொண்டிரா விட்டால், அவர்களுக்கு இரசிக்கத்தக்க பிராமண வாழ்க்கை இருக்காது. அது வரண்ட, உருசியற்ற வாழ்க்கையாகவே இருக்கும். இந்த ஞானப் பாதையில், அன்பில்லாமல் ஞானம் இருக்குமாயின், இந்த ஞானத்தில் கேள்விகள் எழும்: ஏன்? என்ன? எவ்வாறாயினும், இந்த ஞானத்துடன் அன்பு இருந்தால், அந்த நபர் சதா அன்பிலே திளைத்திருப்பார். அன்புடைய ஒருவர் தான் நேசிப்பவரை நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஒருவர் ஞானியாக இருந்து, ஆனால் அவரிடம் அன்பு இல்லாவிட்டால், அவர் சிரமப்பட வேண்டியிருக்கும். அவர் சிரமத்தின் பழத்தையே உண்பார். இவரோ அன்பின் பழத்தை உண்பார். இந்த ஞானமே விதை, அன்பே தண்ணீர். விதைக்கு அன்பு என்ற தண்ணீர் கிடைக்கா விட்டால், பழம் தோன்றாது.
இன்று, குழந்தைகள் எல்லோருடைய இதயங்களிலும் தந்தைக்காகவும் ஏனைய எல்லோருக்காகவும் உள்ள அன்பைச் சோதித்தார். எனவே, நீங்கள் எல்லோரும் உங்களை என்னவென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் அன்பானவர்களா? அன்பானவர்களா? உங்களின் இதயங்கள் அன்பானவை என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் எல்லோரின் மீதும் அன்பானவர்களா? எல்லோரின் மீதும் அன்பு உள்ளதா? அச்சா. உங்களின் இதயத்தில் தந்தைக்கான அன்பு உள்ளது. அத்துடன் நீங்கள் ஏனைய எல்லோரின் மீதும் அன்பு வைத்திருக்கிறீர்களா? எல்லோரின் மீதும்? இவர் எனது சகோதரன் அல்லது சகோதரி என நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறீர்களா? இவர் எனக்குச் சொந்தமானவர் என நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறீர்களா? நீங்கள் அதை நம்புகிறீர்களா? அல்லது, உங்களில் சிலர்தான் அதை நம்புகிறீர்களா? தந்தையின் மீது அன்பு வைத்திருப்பதற்கு நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துவதைப் போல், ஆம், நீங்கள் தந்தையின் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள், அதைப் போல், ஏனைய எல்லோர் மீதும் அன்பு வைத்திருக்கிறேன், ஆம், எல்லோரின் மீதும் அன்பு இருக்கிறது என நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துவீர்களா? நீங்கள் இந்தச் சான்றிதழைப் பெறுவீர்களா? பாப்தாதா முன்னரும் கூறியுள்ளார் - நீங்கள் தந்தையிடம் இருந்து மட்டும் சான்றிதழைப் பெறக்கூடாது. ஆனால் பிராமணக் குடும்பத்திடம் இருந்தும் நீங்கள் அதைப் பெற வேண்டும். ஏனென்றால், தந்தை இப்போது ஒரே நேரத்தில் தர்மத்தையும் இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறார். இராச்சியத்தில் லௌகீகத் தந்தை மட்டும் இருக்க மாட்டார், குடும்பமும் இருக்கும். தந்தையின் மீது அன்பாக இருங்கள், அத்துடன் குடும்பத்தின் மீதும் அன்பாக இருங்கள்.
நீங்கள் ஞானி ஆகியுள்ளீர்கள். அதேவேளை அன்பானவராக இருப்பதும் அவசியமாகும். உங்களின் சுய மரியாதையுடன் இருந்து மரியாதை கொடுங்கள் - இரண்டும் அத்தியாவசியமானவை. குழந்தைகளான நீங்கள் உங்களின் பிராமணப் பிறவி எடுத்த உடனேயே, தந்தை உங்களுக்கு மதிப்பு அளித்தார். இப்படித்தான் நீங்கள் மிக மேன்மையானவர்கள் ஆகினீர்கள். இந்த ஒரு பிறவியில் நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். அப்போது நீங்கள் அதன் வெகுமதியான மரியாதையை கல்பம் முழுவதிலும் பெறுவீர்கள். அரைக்கல்பத்திற்கு, இராச்சிய உரிமையைக் கொண்டிருப்பதன் மரியாதையை நீங்கள் பெறுகிறீர்கள். அரைக்கல்பத்திற்கு, பக்தி மார்க்கத்தில், நீங்கள் பக்தர்களிடம் இருந்து மரியாதையைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், இதைக் கல்பம் முழுவதும் பெறுவதற்கான அடிப்படை, இந்த ஒரு பிறவியில் மரியாதையைக் கொடுத்து, மரியாதையைப் பெற்றுக் கொள்வதே ஆகும்.
இப்போதும் பாப்தாதா வெளிநாடுகளில் எங்கும் உள்ள குழந்தைகளைப் பார்க்கிறார். சிலர் இந்தச் சந்திப்பை இரவு நேரத்தில் கொண்டாடுகிறார்கள். ஏனையோர் பகல் பொழுதில் இந்தச் சந்திப்பைக் கொண்டாடுகிறார்கள். உங்களின் சேவையின் வேகத்தை அதிகரிப்பதற்கு, உங்களுக்கு நல்லதொரு தாதியும் (தாதி ஜான்கி) இருக்கிறார். அப்படித்தானே? அவர் சிறியதொரு பலவீனத்தைக் கண்டாலும், அதற்காக வகுப்பு வகுப்பாக எடுக்கிறார். இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ யாராவதொரு குழந்தைக்கு ஏதாவது ஒரு பாடம் சிரமமாக இருந்தால், அதற்கான பிரதானமான காரணம், அவர்களின் இதயங்களில் அன்பு குறைவதே ஆகும். அன்பு என்றால் அன்பிலே திளைத்திருத்தல் என்று அர்த்தம். நீங்கள் நேசிக்கும் ஒருவரை நினைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் நேசிப்பவரை மறப்பதுதான் கடினமாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டியிருந்தால், உங்களின் இதயத்தில் உள்ள அன்பைச் சோதிப்பதே அதற்கான பரிகாரம் ஆகும். எங்கேயாவது ஒழுக்கு ஏற்படுகிறதா? ஒரு நபரின் மீது, அவரின் சிறப்பியல்பின் மீது, வசதியின் மீது அல்லது ஏதாவது சத்கதியின் மீது அல்லது மேலதிகமான சத்கதியின் மீது (சௌகரியம்/ஆதாரம்) பற்று இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து அந்த சத்கதியையே நினைப்பீர்கள். நியதிகளுக்கு ஏற்ப சத்கதி இருப்பது பரவாயில்லை, ஆனால் சிலவேளைகளில் உங்களுக்கு மேலதிக சத்கதியின் மீது அன்போ அல்லது பற்றோ ஏற்படுகிறது. நீங்கள் தொடர்ந்து அந்த சத்கதியையே நினைக்கிறீர்கள். அதன் அடையாளம் என்னவென்றால், ஏதாவது ஒழுக்கு ஏற்படும்போது, உங்களின் வாழ்க்கையில் ஏதாவதொரு காரணத்தால் நிலையான திருப்தி இருக்காது. ஏதாவதொரு காரணம் உங்களை அதிருப்தி அடையச் செய்யும். ஆனால் திருப்தி இருக்கும்போது, அதன் அடையாளம், சதா சந்தோஷம் காணப்படும். நீங்கள் சதா ஓர் ஆன்மீக ரோஜா போல் புன்னகை செய்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் முழுமையாக மலர்ந்து இருப்பீர்கள், கோணலான மனோநிலையைக் கொண்டிருக்க மாட்டீர்கள். சதா இலேசாகவும் ஒளியாகவும் இருப்பீர்கள். எனவே, உங்களுக்குப் புரிந்ததா? இப்போது உங்களைச் சிரமப்படுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளான நீங்கள் சிரமப்படுவதை பாப்தாதா விரும்புவதில்லை. நீங்கள் அரைக் கல்பமாகச் சிரமப்பட்டீர்கள். இப்போது களிப்பாக இருங்கள். அன்பிலே மூழ்கி இருங்கள். ஞானக்கடலின் அடியில் அன்பு முத்துக்களை அனுபவம் செய்யுங்கள். வெறுமனே ஒரு தடவை மூழ்கிவிட்டுக் கடலில் இருந்து வெளியே வந்து விடாதீர்கள். ஆனால் அதில் அமிழ்ந்து இருங்கள்.
நீங்கள் எல்லோரும் ஒரு சத்தியம் செய்தீர்கள்தானே, அதாவது, நீங்கள் தந்தையுடன் வாழ்ந்து, அவருடன் திரும்பி வீட்டுக்குச் செல்வீர்கள் என்ற சத்தியம்? இந்த சத்தியத்தை நீங்கள் செய்தீர்களா? நீங்கள் அவருடன் வீட்டுக்குப் போவீர்களா அல்லது அவரைப் பின்தொடர்ந்து போவீர்களா? பாபாவுடன் செல்லத் தயாராக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் தயாரா? கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னர் உங்களின் கைகளை உயர்த்துங்கள். தயாராக இருத்தல் என்றால் தந்தைக்குச் சமம் ஆகுதல் என்று அர்த்தம். யார் அவருடன் திரும்பிச் செல்வார்கள்? சமமானவர்களே அவருடன் திரும்பிச் செல்வார்கள். எனவே, நீங்கள் அவருடன் போவீர்களா? நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? முதல் வரிசையில் இருப்பவர்கள் என்றும் தயாரா? நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? நாளையே அவருடன் போக வேண்டும் என உங்களுக்கு கட்டளை இட்டால், நீங்கள் அவருடன் போவீர்களா? இல்லறத்தவர்களே நீங்கள் அவருடன் போவீர்களா? நீங்கள் உங்களின் பிள்ளைகளை நினைக்க மாட்டீர்களா? தாய்மார்களே நீங்கள் பாபாவுடன் போவீர்களா? தாய்மார்களே நீங்கள் தயாரா? நீங்கள் யாரையும் நினைக்க மாட்டீர்களா? ஆசிரியர்களே, நீங்கள் உங்களின் நிலையங்களையும் உங்களின் மாணவர்களையும் நினைப்பீர்களா? நீங்கள் அவர்களை நினைக்க மாட்டீர்களா? அச்சா. நீங்கள் எல்லோரும் பற்றில் இருந்து விடுபட்டு விட்டீர்களா? அது மிகவும் நல்லது. அப்படி என்றால் நீங்கள் சிரமப்படத் தேவை இல்லைத்தானே?
இன்று, பாப்தாதா எல்லோரையும், நீங்கள் தந்தையின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது தொலைவில் இருந்தாலும் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருந்தாலென்ன, சிரமப்படுவதில் இருந்து விடுவிக்க விரும்புகிறார். நீங்கள் அப்படி ஆகுவீர்களா? நீங்கள் கைதட்டினீர்கள். ஆனால் அப்படி ஆகுவீர்களா? நாளையில் இருந்து, எவரும் தாதிகளிடம் போக மாட்டீர்கள். அவர்கள் உங்களுக்காக முயற்சி செய்ய வைக்க மாட்டீர்கள்தானே? நீங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் சந்திப்பீர்கள். நீங்கள் பிராந்தியத் தலைவர்களிடம் செல்ல மாட்டீர்கள். நீங்கள் முறைப்பாடு செய்ய மாட்டீர்கள். நீங்கள் சம்பூரணம் அடைவீர்கள். இது ஓகேயா? இப்போது, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கவனமாக எண்ணிய பின்னர் உங்களின் கைகளை உயர்த்துங்கள். வெறுமனே அதை உயர்த்தாதீர்கள். முறைப்பாடுகள் எதுவும் இல்லை. எவரிடமும் ‘எனது’ என்ற உணர்வு இல்லை, எவரும் உங்களுக்குச் சொந்தமானவர் இல்லை. ‘நான்’ என்பதும் இருக்காது. ‘எனது’ என்பதும் இருக்காது. அவை முடிந்துவிட்டன. பாருங்கள், நீங்கள் ஒரு சத்தியம் செய்தீர்கள், அது நல்லதே. பாராட்டுக்கள்! எவ்வாறாயினும், நீங்கள் அந்தச் சத்தியத்தின் நன்மையைப் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் மிக விரைவாக ஒரு சத்தியத்தைச் செய்கிறீர்கள். ஆனால், அதன் நன்மையைப் பெற்றுக் கொள்வதற்கு, எல்லாவற்றுக்கும் முதலில், ஒவ்வொரு நாளும் அதன் புரிந்துணர்வைக் கொண்டிருங்கள். இரண்டாவதாக, அதை மீட்டல் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களின் சத்தியத்தை மீட்டல் செய்யுங்கள்: நான் என்ன சத்தியம் செய்தேன்? அமிர்த வேளையில் சந்தித்த பின்னர், இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலைக்கான அட்டவணையைச் செய்யுங்கள் - சத்தியம் (வைதா), நன்மை (பைதா). நீங்கள் என்ன சத்தியம் செய்தீர்கள்? நீங்கள் என்ன நன்மையைப் பெறுகிறீர்கள்? இதை உணர்ந்து, மீட்டல் செய்யுங்கள். சமநிலை காணப்படும்போது, அது சரியாக இருக்கும். சந்திப்புக்களைச் செய்பவர்களும் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளார்கள் என்பதை பாப்தாதா அறிவார்.
பாப்தாதா விரும்புகின்ற மிக நல்ல திட்டங்களை நீங்கள் செய்வதை பாப்தாதா பார்த்துள்ளார். பாப்தாதா எதை விரும்புகிறார்? பாப்தாதா ஒரு கூற்றையே விரும்புகிறார்: எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள். உங்களிடம் உள்ள பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் உங்களிடம் உள்ள சக்திகளை - எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களும் சக்திகளே. காலம் ஒரு பொக்கிஷம், அத்துடன் ஒரு சக்தி. நீங்கள் அவை எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அது பௌதீகச் செல்வமோ அல்லது ஆன்மீகப் பொக்கிஷங்களோ, நீங்கள் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வெற்றி சொரூபமாக இருக்கும் சான்றிதழைப் பெற வேண்டும். எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் மற்றவர்களிடம் உள்ள எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தச் செய்யுங்கள். யாராவது ஒருவர் எதையாவது தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தா விட்டால், எதையும் சொல்லாதீர்கள் அல்லது திருத்தங்களைக் கொடுக்காதீர்கள். ஆனால் அதை உங்களின் நல்லாசிகளுடனும் தூய உணர்வுகளுடனும் சதா தூய மரியாதையைக் கொடுத்தவண்ணம் செய்யுங்கள். அதனால் அவர்கள் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தச் செய்யுங்கள். வெறுமனே அவர்களைத் திருத்தாதீர்கள். நீங்கள் அவர்களைத் திருத்த வேண்டியிருந்தால், அது மன்னிப்புடன் இருக்க வேண்டும். பின்னரே அந்தத் திருத்தத்தைக் கொடுக்க வேண்டும். உங்களின் மன்னிப்பு ரூபத்தின் ஊடாகக் கற்பித்தல்களைக் கொடுங்கள். கருணைநிறைந்தவர் ஆகுங்கள். கருணைநிறைந்தவர் ஆகுங்கள். உங்களின் கருணைநிறைந்த ரூபம் நிச்சயமாகத் திருத்தத்தின் பலனைக் காட்டும். பாருங்கள், தற்காலத்தில், சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஒரு சத்திரசிகிச்சையைச் செய்யும்போது, அவர்கள் முதலில் என்ன செய்கிறார்கள்? அவர்கள் முதலில் உங்களை நித்திரை(மயக்கம் அடையச் செய்தல்) ஆக்கிப் பின்னரே உங்களுக்குச் சத்திரசிகிச்சை செய்கிறார்கள். அதற்கு முன்னர் அவர்கள் உங்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதில்லை. அவர்கள் டிஞ்சர் போடுகிறார்கள். முதலில் அவர்கள் ஊதிப் பின்னர் டிஞ்சரைப் போடுகிறார்கள். எனவே நீங்களும் எல்லாவற்றுக்கும் முதலில் கருணை நிறைந்தவர்கள் ஆகிப் பின்னர் திருத்தத்தைக் கொடுக்க வேண்டும். இது அவர்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லாவிட்டால், நீங்கள் அவர்களைத் திருத்த ஆரம்பித்ததும், அவர்கள் ஏற்கனவே உங்களை விடத் திறமைசாலிகள். எனவே, ஓர் ஆசிரியர் இன்னோர் ஆசிரியரிடம் இருந்து திருத்தத்தைப் பெற மாட்டார். நீங்கள் இதைச் செய்யாதீர்கள், ஆனால் இதைச் செய்யுங்கள் என்ற ஒரு கருத்தைச் சொல்லும்போது, அவர்கள் உங்களை மறுப்பதற்கு 10 கருத்துக்களைச் செய்வார்கள். ஆகவே, மன்னிப்பும் திருத்தமும் ஒன்றாகச் செல்ல வேண்டும். எனவே, இந்த 70 ஆம் ஆண்டு விழாவின் தலைப்பு, எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதும் மற்றவர்களையும் எல்லாவற்றையும் தகுதி வாய்ந்த முறையில் பயன்படுத்தச் செய்வதும் வெற்றி சொரூபம் ஆகுவதும் ஆகும். எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் ஆக விரும்புகிறீர்கள். ஆகவே, எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். உங்களின் சம்ஸ்காரங்களையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். உங்களின் ஆதி சம்ஸ்காரங்களை, உங்களின் தேவ சம்ஸ்காரங்களையும் ஆத்மாவின் அநாதியான சம்ஸ்காரங்களையும் வெளிப்படச் செய்யுங்கள். தவறான சம்ஸ்காரங்களின் தகனம் செய்யும் விழாவைச் செய்யுங்கள். உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களை வெளிப்படச் செய்யுங்கள். குறிப்பாக எல்லோருக்கும் இந்த ஒரு முறைப்பாடே உள்ளது: என்னால் எனது சம்ஸ்காரங்களை மாற்ற முடியவில்லை, என்னால் எனது சம்ஸ்காரங்களை மாற்ற முடியவில்லை.
நீங்கள் எல்லோரும் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டிருப்பதற்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்தானே? (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்). ஒரு புகைப்படம் எடுங்கள். எனவே, இப்போது, ஒரு நிமிடத்திற்கு, இந்தச் சத்தியத்தைத் திடசங்கற்பத்துடன் உங்களின் இதயத்தில் கீழ்க்கோடிடுங்கள். அதை உங்களின் இதயத்தில் உறுதி ஆக்குங்கள். (அப்பியாசம்). அச்சா.
எங்கும் உள்ள சுயமரியாதை உடைய குழந்தைகள் எல்லோருக்கும் தமது இதயங்களில் தந்தைக்கான அன்பை எப்போதும் கொண்டிருப்பவர்களுக்கும் எல்லோருக்கும் அன்பைக் கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் சதா சிரமப்படுவதில் இருந்து விடுபட்டு, ஜீவன்முக்தி வாழ்க்கையை அனுபவம் செய்யும் தீவிர முயற்சி செய்யும் குழந்தைகளுக்கும் தாம் செய்யும் சத்தியத்திற்கும் அந்தச் சத்தியத்தில் இருந்து தாம் எடுக்கும் நன்மைக்கும் இடையில் சதா சமநிலையைப் பேணும் ஆனந்தமான குழந்தைகளுக்கும் சதா மகிழ்ச்சியாக இருப்பதுடன் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்பவர்களுக்கும் இத்தகைய மேன்மையான பாக்கியத்தின் உரிமையைக் கொண்ட சங்கமயுகக் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் அத்துடன் இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரின் இதயத்தில் இருந்து ஆசீர்வாதங்களும். அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
தாதிகளிடம்: நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? உங்களைக் காண்பதில் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். தந்தையும் குழந்தைகளும் - உங்கள் இருவரையும் பார்ப்பதில் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். நீங்கள் இருவரும் சமமானவர்கள். நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுகிறீர்கள். எல்லோருக்கும் தாதிகளிடம் விசேடமான அன்பு உள்ளது. எல்லோருக்கும் அதிகளவு அன்பு உள்ளது. கருவிகளாக இருப்பவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. அதனால் அவர்களும் அதேயளவு அன்பைப் பெறுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் தமது வாழ்க்கைகளில் எல்லோரிடமிருந்தும் அன்பு மற்றும் ஆசீர்வாதத்தின் உயர்த்தியைப் பெறுகிறார்கள். கருவிகள் ஆகிய நீங்களும் உயர்த்தியைப் பெற்றுள்ளீர்கள். எவ்வாறாயினும், எல்லா வேளையும் நீங்கள் உயர்த்தி என்ற பரிசை உங்களுடன் வைத்திருக்கும்போது அதிகளவு நன்மை ஏற்பட முடியும். இவை நீங்கள் பெறுகின்ற மேலதிக ஆசீர்வாதங்கள் ஆகும். எந்தவொரு பணிக்கும், அது இறை பணியோ அல்லது யக்யத்தின் சேவையோ, விசேடமான கருவிகள் ஆகுபவர்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் அன்பின் உயர்த்தியைப் பெறுகிறார்கள். அன்பானது அற்புதங்களைச் செய்யக்கூடியது. இன்று, நீங்கள் இந்த உலகில் உள்ள எவரிடமும் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், எனக்கு அன்பு வேண்டும், எனக்கு அமைதி வேண்டும் என்றே அவர் சொல்லுவார். எவ்வாறாயினும், அதை அன்பினால் மட்டுமே பெற முடியும். எனவே, அன்பு, ஆத்ம உணர்வு அன்பே எல்லாவற்றிலும் அதிமேன்மையானது.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் சதா யோகியாகி, தந்தையை மறப்பதில் இருந்தும் தவறுகள் செய்வதில் இருந்தும் விடுபடுவீர்களாக.தந்தையுடன் தாம் ஒன்றிணைந்திருப்பதை அனுபவம் செய்யும் குழந்தைகள், இயல்பாகவே சதா யோகி ஆகுக! என்ற ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். இது ஏனென்றால், அவர்கள் எங்கே இருந்தாலும், தொடர்ந்து ஒரு சந்திப்பை அனுபவம் செய்கிறார்கள். அவரை மறக்கச் செய்வதற்கு யாராவது முயற்சி செய்தாலும் அவர்கள் அவரை மறப்பதில் இருந்து விடுபட்டே இருப்பார்கள். தந்தையை ஒருபோதும் மறக்காத இத்தகைய குழந்தைகள், தந்தைக்கு மிகவும் பிரியமானவர்கள். அதனால் அவர்கள் சதா யோகிகள். ஏனென்றால், அன்பின் அடையாளம், இயல்பான நினைவாகும். மாயையால் அவர்களின் எண்ணங்களின் ஒரு நகத்தைக் கூட (சிறியதொரு பாகத்தை) அசைக்க முடியாது.
சுலோகம்:
சாக்குப்போக்குகளைச் சொல்வதை விடுத்து, ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
அகநோக்கில் இருங்கள். இந்த ஞானத்தைக் கடையும் பயிற்சியால், சதா அலௌகீக போதையுடன் இருங்கள். அப்போது இந்த உலகின் எந்தவொரு பிரச்சனையும் உங்களைக் கவராது. எப்படி இராணுவத்தினர் தங்களைக் குண்டுகள் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நிலத்தின் கீழ் செல்கிறார்களோ, அவ்வாறே, உங்களின் ஆத்ம உணர்வு ஸ்திதியில் அகநோக்கில் இருப்பதையும் பாதாளத்தில் இருப்பதையும் பயிற்சி செய்யும்போது, புறநோக்கான விடயங்கள் உங்களைக் குழப்பாது.