11.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடுங்கள். நீங்கள் தூய, தர்ம ஆத்மாக்கள் ஆகி, சுவர்க்க இராச்சியத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.
கேள்வி:
பிராமண வாழ்க்கையில் நீங்கள் அதீந்திரிய சுகத்தை அனுபவிக்காமல் இருந்தால், நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?பதில்:
சூட்சுமமாக ஏதோ ஒரு பாவம் நிச்சயமாக செய்யப்படுகிறது. நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகி, பாவங்களைச் செய்வதாலேயே அதிகளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுவதில்லை. இதனாலேயே, நீங்கள் உங்களைக் கோபியராகவும், கோபிகைகளாகவும் கருதிய போதிலும், அதீந்திரீய சுகத்தின் உணர்வு இல்லாமல் போகிறது. நிச்சயமாக ஏதோ ஒரு தவறு செய்யப்படுகிறது. ஆகவே, தந்தையிடம் உண்மையைக் கூறி ஸ்ரீமத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளுங்கள்.ஓம் சாந்தி.
அசரீரியான கடவுள் பேசுகிறார். பக்தி மார்க்கத்தில் மக்கள், அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்திருந்தாலும், அசரீரியான கடவுளே, சிவன் என்று அழைக்கப்படுகின்றார். பல பெயர்கள் இருப்பதாலேயே அதிகளவு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. தந்தை, தானே வந்து உங்களுக்குக் கூறுகிறார்: ஓ குழந்தைகளே, உங்களது தந்தையான சிவனை நீங்கள் நினைவு செய்கிறீர்கள்: 'ஓ தூய்மை ஆக்குபவரே!" என நீங்கள் கூறுகிறீர்கள். அவருக்கு நிச்சயமாக ஒரேயொரு பெயர் மாத்திரமே இருக்க வேண்டும். பல பெயர்கள் இருக்க முடியாது. அவர் கூறுகிறார்: சிவனுக்கு வந்தனங்கள், ஆகையாலே சிவன் என்ற பெயர் மட்டுமே இருக்கிறது. படைப்பவரும் ஒருவரே. அவருக்குப் பல பெயர்கள் இருந்திருந்தால், மக்கள் குழப்பம் அடைவார்கள். உதாரணமாக, உங்களது பெயர் புஷ்பம் ஆயின், எவரேனும் உங்களை ஷீலா என அழைத்தால், நீங்கள் பதில் அளிப்பீர்களா? இல்லை! வேறு எவரையோ அவர் அழைக்கிறார் என்றே நீங்கள் நினைப்பீர்கள். இதுவும் அவ்வாறானதே. அவருக்கும் ஒரேயொரு பெயரே உள்ளது. பக்திமார்க்கத்தில் அவருக்கு பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளதால் அவருக்கு வெவ்வேறு பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். இல்லாவிடின் ஒருவருக்கு ஒரு பெயரே உள்ளது. கங்கை நதியை, யமுனை நதி என நீங்கள் அழைக்க முடியாது. அனைத்தும் ஒரு பெயரினால் மட்டுமே பிரபல்யமாகிறது. சிவன் என்ற அவரது பெயரும் மிகவும் பிரபல்யமானது. 'சிவனுக்கு வந்தனங்கள்" என்பதும் நினைவு செய்யப்பட்டுள்ளது! அவர்கள் கூறுகிறார்கள்: 'பிரம்மதேவருக்கு வந்தனங்கள்! விஷ்ணுதேவருக்கு வந்தனங்கள்". அத்துடன் அவர்கள் கூறுகிறார்கள்: ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள் ஏனெனில் அவரே அதி மேலானவர்.’ அசரீரியான ஒரேயொருவரே, அதி மேலானவர் என்று அழைக்கப்படுகிறார் என்பது மக்களின் புத்திகளில் உள்ளது. அவருக்கு ஒரு பெயர் மட்டுமே உள்ளது. பிரம்மா, பிரம்மா என்றும் விஷ்ணு, விஷ்ணு என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவருக்குப் பல பெயர்கள் கொடுத்திருப்பதன் மூலம், மக்கள் குழம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குப் பதில் கிடைப்பதும் இல்லை. அவர்களுக்கு அவரது வடிவமும் தெரியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே வந்து, உங்களுடன் மாத்திரமே பேசுகிறார். ‘சிவனுக்கு வந்தனங்கள்’ எனக் கூறப்படுகிறது, ஆகையால் அந்த ஒரு பெயரே சிறந்தது. 'சிவசங்கரர்" எனக் கூறுவதும் பிழையே. இலக்ஷ்மி, நாராயணன் எனும் பெயர்கள் எவ்வாறு இரு வேறு பெயர்களாக இருக்கின்றனவோ அவ்வாறே 'சிவன், சங்கரர்" என்ற பெயர்களும் இரு வேறானவை. அங்கு அவர்கள் நாராயணனை, இலக்ஷ்மிநாரயணன் என்று அழைப்பதில்லை. இக்காலத்தில், மக்களுக்கு இரண்டு பெயர்கள் உள்ளன. தேவர்கள் இரட்டைப் பெயர்களைக் கொண்டிருப்பதில்லை. ராதையின் பெயர் கிருஷ்ணரது பெயரிலும் வேறுபட்டது. ஆனால் இங்கோ மக்களுக்கு, ராதாகிருஷ்ணர் என்றும் இலக்ஷ்மிநாரயணன் என்றும் இரட்டைப் பெயர்கள் நிலவுகின்றன. படைப்பவர் ஒருவரே இருக்கின்றார் என்றும், அவருக்கு ஒரு பெயர் மட்டுமே உள்ளது என்றும் தந்தை இங்கு வந்து அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். அவரை அறிந்து கொள்ள வேண்டும். 'நட்சத்திரம் போன்ற ஆத்மா நெற்றியின் நடுவில் பிரகாசிக்கிறார், ஆத்மாவே பரமாத்மா என்றும், அதாவது, பரமாத்மாவும் நட்சத்திரமே என அவர்கள் கூறுகிறார்கள்: ஆத்மாக்கள் சிறிதாகவோ பெரிதாகவோ இருப்பார்கள் என்றில்லை. இவை மிகவும் இலகுவான விடயங்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் அழைத்தீர்கள் : ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எவ்வாறாயினும், அவர் எவ்வாறு அனைவரையும் தூய்மை ஆக்குகிறார் என்பது ஒருவருக்கும் தெரியாது. கங்கையையே, தூய்மை ஆக்குபவர் என அவர்கள் கருதுகிறார்கள். ஒரேயொரு தந்தை மட்டுமே தூய்மை ஆக்குபவர். தந்தை கூறுகிறார்: நான் முன்னரும் உங்களுக்குக் கூறினேன்: ‘மன்மனாபவ! சதா என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள்!’ அவர்கள் பெயர்களை மாற்றி விட்டார்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம், ஆஸ்தி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதன் பின்னர் 'மன்மனாபவ!" என்று கூடக் கூற வேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறாயினும், நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் முற்றாக மறந்து விட்டீர்கள். இதனாலேயே உங்களது தந்தையான என்னையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுமாறு உங்களிடம் நான் கூறுகிறேன். தந்தையே சுவர்க்கத்தைப் படைத்தவர். ஆகையாலேயே, தந்தையை நினைவு செய்வதன் மூலம், சுவர்க்க இராச்சியத்தை நிச்சயமாக நாங்கள் பெறுவோம். ஒரு புத்திரன் பிறந்தவுடனேயே, அவரது தந்தை 'வாரிசு வந்து விட்டான்" என கூறுகிறார். ஒரு புதல்வி பிறந்தவுடன் இவ்வாறு கூறுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் புத்திரர்களே. ஆத்மா ஒரு நட்சத்திரம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறாயின், ஆத்மா எவ்வாறு பெருவிரல் வடிவமாக இருக்க முடியும்? ஆத்மாக்கள் மிகவும் சூட்சுமமானவர்கள். ஆகையாலே, ஆத்மாக்களை இந்தக் கண்களால் பார்க்க முடியாது. ஆம், ஆத்மாவை தெய்வீகக் காட்சி மூலம் காணக் கூடிய சாத்தியம் உண்டு. ஏனெனில் ஆத்மா சூட்சுமமானவர். தெய்வீகக் காட்சி மூலம் நீங்கள் ஒருவரை உயிருள்ள வடிவாகவே பார்க்கலாம். ஆனால் அவர் பின்னர் மறைந்து விடுவார். அதன் மூலம் நீங்கள் எதையுமே பெற முடியாது. சந்தோஷத்தை மட்டுமே பெறுவீர்கள். அது பக்திமார்க்கத்தின் தற்காலிக சந்தோஷம் என அழைக்கப்படுகிறது. அது பக்தியின் பலனாகும். விதி முறைகளுக்கு அமைய, பக்தி செய்தவர்கள் இந்த ஞானத்தின் மூலம், இயல்பாகவே அதன் பலனைப் பெறுகிறார்கள். பிரம்மாவையும் விஷ்ணுவையும் சேர்த்தே காட்டுகிறார்கள். பிரம்மா, விஷ்ணு ஆகிறார்: பக்தியின் பலனான, இராச்சியம், விஷ்ணுவின் வடிவத்தில் பெறப்படுகிறது. விஷ்ணுவின் அல்லது ஸ்ரீகிருஷ்ணரின் பல காட்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். எவ்வாறாயினும் பக்தி மார்க்கத்தில் பல்வேறான பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. காட்சிகளை ஞானம் என்றோ யோகம் என்றோ அழைக்க முடியாது. தீவிர பக்தி செய்ததன் மூலம் அவர்களுக்கு காட்சிகள் கிடைத்தன. இப்போது, உங்களுக்கு காட்சி கிடைக்கா விட்டாலும், பரவாயில்லை! மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதே உங்களது இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களுள் ஒருவர் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் முயற்சி செய்வதற்காக, தந்தை கூறுகிறார்: உங்களது புத்தியின் யோகத்தை, அனைவரிடம் இருந்தும், உங்கள் சரீரத்திடம் இருந்தும் கூட அகற்றித் தந்தையை நினைவு செய்யுங்கள். ஓர் அன்புக்கினியவரும், அவரது காதலியும் தங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் இதயத்தால் இணைந்திருப்பார்கள். தந்தையும் கூறுகிறார்: சதா என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள்! இருந்தாலும் உங்களது புத்தி நாலாபுறமும் அலைகிறது! நீங்கள் கீழே இறங்குவதற்கு, ஒரு கல்பம் எடுத்தது என்பதையே நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். சத்திய யுகத்தில் இருந்து நீங்கள் ஏணியில்; இறங்குகிறீர்கள்: சிறிது சிறிதாக கலப்படம் உங்களுக்குள் கலக்கப்படுகின்றது. நீங்கள் சதோவிலிருந்து தமோவாக மாறுகிறீர்கள். இப்போது, தமோவிலிருந்து சதோ ஆகுவதற்கு, தந்தை உங்களை பாய்ந்து முன்னேறச் செய்கிறார்: ஒரு விநாடியில் தமோபிரதானில் இருந்து சதோபிரதான். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு தொடர்ந்து கற்பித்தல்களைக் கொடுக்கிறார். சில விவேகமான, நல்ல குழந்தைகள் இதை உண்மையிலேயே மிகவும் சிரமமாக அனுபவம் செய்கிறார்கள். சிலர் அனைத்தையும் பாபாவிடம் கூறுகிறார்கள். ஆனால் ஏனையோரோ அவரிடம் எதையுமே கூறுவதில்லை. உங்களது ஸ்திதியை நீங்கள் பாபாவிடம் கூறவேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிட்டால், எவ்வாறு ஆஸ்தியை பெற முடியும்? சிலர் தந்தையை சரியாக நினைவு செய்வதில்லை. எவ்வாறாயினும் தாங்கள் சிவபாபாவிற்கே உரியவர்கள் என்று நினைக்கிறார்கள். பாபாவை நினைவு செய்யாததால், நீங்கள் வீழ்ந்து விடுகிறீர்கள். தந்தையையே சதா நினைவு செய்வதால், கலப்படம் அகற்றப்படுகிறது. கவனம் செலுத்தப்பட வேண்டும். உங்களுக்கு சரீரம் இருக்கும் வரை நீங்கள் தொடர்ந்தும் முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்து பாபாவை நினைவு செய்ய மறந்து விடுவதாக புத்தியுமே கூறுகிறது. இந்த யோக சக்தியினால், நீங்கள் ஆட்சி உரிமையை பெறுகிறீர்கள். அனைவராலும் ஒரே மாதிரி ஓட முடியாது. அது நியதி அல்ல! ஓட்டப் பந்தயத்தில் கூட, எப்போதுமே சிறிதளவு வித்தியாசம் உள்ளது. முதலாவது இலக்கத்தைப் பெறுபவர் இருக்கிறார், அவருடன் உயர் புள்ளிகள் பெறுபவர்களும் இருக்கிறார்கள். இங்கும் கூட, இது குழந்தைகளின் ஓட்டப்பந்தயம் ஆகும். தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். நீங்கள் பாவாத்மாக்களில் இருந்து, தூய, தர்மாத்மாக்கள் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை இப்போது வழிகாட்டல்களைத் தந்திருக்கிறார்: இப்போது பாவம் செய்வதால், அது 100 மடங்காக அதிகரிக்கும். பாவம் செய்தும், ஆனால் அதைப்பற்றி பாபாவிடம் கூறாத பலரும் இருக்கிறார்கள். பின்னர் இது தொடர்ந்து அதிகரிப்பதால், இறுதியில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள். அவர்கள் பாபாவிடம் அதைப்பற்றிக் கூற கூச்சப்படுகிறார்கள். உண்மையைக் கூறாது விடுவதால், நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள். இவற்றைத் தம்மிடம் இருந்து செவிமடுக்கும் போது, பாபா என்ன கூறுவாரோ எனச் சிலர் பயப்படுகிறார்கள். சிலரோ அவர்கள் செய்கின்ற சிறிய தவறைப் பற்றிக் கூட கூற வருகிறார்கள். பாபா அவர்களிடம் கூறுகிறார்: பல மிக நல்ல குழந்தைகளே பெரிய பல தவறுகளைச் செய்கிறார்கள். பெரிய மகாரத்திகளைக் கூட மாயை விட்டு விடுவதில்லை! பலம் வாய்ந்தவர்களைக் கூட மாயை சுழலச் செய்கிறாள்! இதனையிட்டு நீங்கள் பெரும் துணிச்சல் கொண்டிருக்க வேண்டும். பொய்மை தொடர முடியாது. உண்மையைக் கூறுவதன் மூலம் நீங்கள் இலேசானவர்கள் ஆகுவீர்கள். எவ்வளவு தான் பாபா விளங்கப்படுத்தினாலும், ஏதேனும் ஒன்று தொடர்ந்தும் நிகழவே செய்கிறது! பல்வேறு வகையான கஷ்டமான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. நீங்கள் இப்போது இந்த இராச்சியத்தைத் தந்தையிடம் இருந்து பெற இருப்பதால், தந்தை கூறுகிறார்: ஏனைய அனைத்தில் இருந்தும் உங்களின் புத்திகளை அகற்றுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. உங்களது பிறவிகளைப் பற்றி இப்போது உங்களுக்குத் தெரியும். சிலர் அங்கவீனர்களாகப் பிறக்கிறார்கள். மனிதர்கள் மனிதர்களே! தந்தை விளங்கப்படுத்துகிறார்: முதலில், தூய்மையாக இருங்கள்! இரண்டாவதாக, பொய் பேசவோ, பாவம் செய்யவோ வேண்டாம். இல்லாவிட்டால், பெருமளவு நட்டம் உண்டாகும்! பாருங்கள், சிறிய தவறு ஒன்றைச் செய்பவர், உடனடியாவே பாபாவிடம் வந்து கூறினார்: ‘பாபா, என்னை மன்னித்து விடுங்கள்! நான் இனி ஒருபோதுமே இவ்வாறு செய்ய மாட்டேன்!’ பாபா கூறினார்: பலர் அத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள். நீங்கள் உண்மையைக் கூறுகிறீர்கள், சிலரோ பாபாவிடம் அதைப் பற்றிக் கூறுவது கூட இல்லை. சில புதல்விகள் முதல் தரமானவர்கள். அவர்களது புத்தி ஒருபோதுமே எங்குமே இழுக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பம்பாயில் உள்ள டாக்டர் நிர்மலா முதல் தரமானவர். அவரிடம் மிகப் பரிசுத்தமான இதயம் உள்ளது. அவரது இதயத்தில் ஒரு போதுமே எந்தத் தவறான எண்ணங்களும் ஏற்படுவதில்லை. ஆகையாலே அவர் பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அவரைப் போன்ற வேறு புதல்விகளும் உள்ளனர். தந்தை கூறுகிறார்: நேர்மையான இதயத்துடன் தந்தையை நினைவு செய்யுங்கள். செயல்கள் செய்யப்பட வேண்டும். உங்களின் புத்தியின் யோகம் தந்தையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். உங்களது கைகள் மும்முரமாக இயங்க வேண்டும். ஆனால் இதயம் அன்புக்கினியவருடன் இருக்கட்டும். இறுதி நேரத்தில் நினைவு செய்யப்படுகின்ற ஸ்திதி இதுவே: ‘அதீந்திரிய சுகத்தைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், இந்த ஸ்திதியை அடைந்த, கோபிகைகளையும் கோபியரையும் கேளுங்கள்’. பாவம் செய்பவர்களால், இந்த ஸ்திதியை அடைய முடியாது. பாபா அனைத்தையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்கிறார். இதனாலேயே, பக்தி மார்க்கத்திலும் நல்ல, தீய செயல்களுக்கான பலன்கள் கிடைக்கின்றன. தந்தையே இவற்றைக் கொடுக்கின்றார். ஏனையோருக்குத் துன்பம் விளைப்பவர்கள், நிச்சயமாகத் துன்பத்தை அனுபவிப்பார்கள். ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் அதற்காக வேதனையை அனுபவிக்கவே வேண்டும். இங்கு, தந்தை தானே நேரடியாக வந்து, தொடர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், அவரே அரசாங்கம். தர்மராஜ் என்னுடன் இருக்கிறார். இந்த நேரத்தில் எதனையுமே என்னிடம் இருந்து மறைக்க வேண்டாம். ‘பாபாவிற்கு எல்லாமே தெரியும், இதயபூர்வமாக நான் சிவபாபாவிடம் மன்னிப்புக் கேட்கலாம்’ என நினைத்து விட வேண்டாம். இவ்வாறாக எதுவுமே மன்னிக்கப்படுவதில்லை. ஒருவரது பாவமும் மறைந்திருக்க முடியாது. பாவம் செய்வதால், ஆத்மாக்கள் நாளுக்கு நாள் பாவாத்மாக்கள் ஆகுகிறார்கள். அவர்களின் பாக்கியத்தில் அது இல்லாவிட்டால், இதுவே தொடர்ந்து நடக்கும். அவர்களின் பதிவேடு கெடுகிறது. ஒருவர் உண்மையைக் கூறாது ஒரு தடவை பொய் பேசுவாராயின், எப்பொழுதும் அவர் அவ்வாறே செய்வாரெனப் புரிந்து கொள்ளப்படுகிறது. பொய்மையை ஒருபோதுமே மறைக்க முடியாது. இருப்பினும் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு தொடர்ந்து விளங்கப்படுத்துகிறார். ‘ஒரு வைக்கோலைத் திருடுபவர், எதையும் திருடுவார்’ என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகையாலேயே நீங்கள் செய்கின்ற தவறுகளை நீங்கள் பாபாவிடம் கூறி விட வேண்டும். பாபா உங்களிடம் கேட்கும் போது 'ஆம் இந்தத் தவறை நான் செய்தேன்" எனக் கூறுகிறீர்கள். அவ்வாறாயின் நீங்களாகவே ஏன் பாபாவிடம் கூறக் கூடாது? பல விடயங்களை குழந்தைகள் மறைப்பது, பாபாவிற்குத் தெரியும். அவற்றை நீங்கள் பாபாவிடம் கூறினால், நீங்கள் ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுக்கு யாரிடம் இருந்தேனும் ஒரு கடிதம் வந்தால், நீங்கள் எவ்வாறு அதற்குப் பதிலளிப்பது என்பதை பாபாவிடம் வினவுங்கள். இதைப்பற்றி பாபாவிடம் நீங்கள் கூறுவதால், நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுவீர்கள். பலருக்கும் தீய பழக்கங்கள் இருப்பதால், அவர்கள் அவற்றை மறைக்கிறார்கள். சிலர் தங்களது லௌகீகக் குடும்பத்திடம் இருந்து பொருட்களைப் பெறுகிறார்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் அதை அணியலாம் என பாபா கூறினால், பின்னர் அதற்கு பாபாவே பொறுப்பாவார். அவர்களது ஸ்திதியை அவதானிக்கும் பாபா, சில வேளைகளில் அவர்கள் பெற்றுள்ள யாவற்றையும், யக்ஞத்துக்கு அனுப்புமாறு அவர்களிடம் கூறுகிறார். நீங்கள் யக்ஞத்திற்கு எதையாவது கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக யக்ஞத்திடம் இருந்து எதையாவது பெறுவீர்களாயின், அது மிகவும் நல்லது. அவ்வாறு இல்லாவிட்டால், நீங்கள் தொடர்ந்து அதையே நினைவு செய்வீர்கள். பாபா உங்களை அதிகளவு எச்சரிக்கிறார். பாதை மிகவும் உயர்வானது. ஒவ்வோர் அடியிலும் சத்திரசிகிச்சை நிபுணரிடம் இருந்து ஆலோசனையைப் பெற வேண்டும். உங்களது கடிதங்களில் அம்பு இலக்கைத் தாக்கும் விதத்தில் நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதற்கான ஆலோசனையை மட்டுமே பாபா உங்களுக்கு கூறுகிறார். எவ்வாறாயினும், பலருக்குச் சரீர உணர்வு உள்ளது. ஸ்ரீமத்தை பின்பற்றாததால் அவர்கள் தங்களது கணக்கை கெடுத்துக் கொள்கிறார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் சகல நிலைமைகளிலும் நன்மை உள்ளது. பாதை மிக மிக இலகுவானது! தந்தையை நினைவு செய்வதன் மூலமே, நீங்கள் உலகத்திற்கு அதிபதி ஆகுகிறீர்கள்! வயோதிப தாய்மார்களுக்குத் தந்தை கூறுகிறார்: தந்தையையும், ஆஸ்தியையும் மட்டுமே நினையுங்கள். பிரஜைகளை உருவாக்காதவர்கள் அரசராகவோ அல்லது அரசியாவோ ஆக முடியாது. எவ்வாறாயினும், விடயங்களை மறைப்பவர்களை விட அவர்களால் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதைப் பற்றி தங்களுக்குக் கூறப்படவில்லையே என எவருமே கூறமுடியாதவாறு, உங்களுக்குச் சகலவற்றிற்கான வழிகாட்டல்களையும் தருவது தந்தையின் கடமை ஆகும். நீங்கள் எந்தத் தவறைச் செய்தாலுமே தந்தையிடம் உடனடியாகக் கூறிவிடுங்கள். அது பரவாயில்லை, ஆனால் மீண்டும் அந்தச் செய்யாதீர்கள்! இதில் பயப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அனைத்தும் உங்களுக்கு அன்புடன் விளங்கப் படுத்தப்பட்டுள்ளது. அதைப்பற்றித் தந்தையிடம் கூறுவதால் நன்மை உள்ளது. பாபா உங்களுக்கு அதிகளவு அன்பு காட்டி, உங்களுக்கு அன்புடன் விளங்கப்படுத்துவார். இல்லாவிட்டால், நீங்கள் இதயத்தில் இருந்து, நீங்கி விடுவீர்கள். நீங்கள் இவரது இதயத்தில் இருந்து நீங்கி விட்டால், சிவபாபாவின் இதயத்தில் இருந்தும் நீங்கி விடுகிறீர்கள். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என நினைக்காதீர்கள். அவ்வாறு எதுவுமே நடப்பதில்லை. எவ்வளவு அதிகமாகத் தந்தையை நினைவு செய்யுமாறு உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக புத்தியும் வெளியே சென்று கொண்டிருக்கிறது. இவ் விடயங்களைத் தந்தை உங்களுக்கு நேரடியாக அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். இதிலிருந்தே பின்னர் சமயநூல்கள் உருவாக்கப்படுகின்றன. கீதையே பாரதத்தின் அதி மேன்மையான சமய நூலாகும். கடவுளால் உபதேசிக்கப்பட்ட கீதையே அனைத்து சமய நூல்களினதும் மணியாகும் என நினைவு கூரப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து சமயங்களும் பின்னரே வருகின்றன. கீதையே தாயும் தந்தையும் ஆகும். ஏனைய அனைத்தும் அதனது குழந்தைகளே. 'கடவுள் பேசுகிறார்" எனக் கீதையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் தேவதர்மத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மட்டுமே தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். கடவுள், தேவர்களை விட உயர்ந்தவர்! சிவனே பிரம்மாவையும், விஷ்ணுவையும், சங்கரரையும் படைத்தவர் ஆவார். இது தெட்டத் தெளிவானது! பிரம்மா மூலமாகவே ஸ்தாபனை நடைபெறுகிறது. 'ஸ்ரீகிருஷ்ணரின் மூலமாக ஸ்தாபனை" என என்றுமே கூறப்படவில்லை. பிரம்மாவின் வடிவத்தையே அவர்கள் காட்டி இருக்கிறார்கள். எதனது ஸ்தாபனை? விஷ்ணு பூமியின். இந்தப் படம் உங்களது இதயத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். இவரின் மூலமே நாங்கள் சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். தந்தை இல்லாமல், எங்களால் பாட்டானாரின் ஆஸ்தியைப் பெற முடியாது. நீங்கள் சந்திக்கின்ற அனைவரிடமும் தந்தை கூறுகிறார் எனக் கூறுங்கள்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இலக்கு மிகவும் உயர்வானது. ஆகையாலே, ஒவ்வோர் அடியிலும் சத்திரசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் மாத்திரமே நன்மை உள்ளது. தந்தையிடம் எதையும் மறைக்காதீர்கள்.2. உங்களது புத்தியின் யோகத்தை உங்களது சரீரத்திலும், சரீர உறவினர்களில் இருந்தும் அகற்றி, அதைத் தந்தையுடன் தொடர்பு கொள்ளச் செய்யுங்கள். செயல்களைச் செய்யும் போது கூட, ஒரு தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா நிலையான, முழுமையான மனோநிலையைக் கொண்டிருப்பதன் மூலம் முயற்சியின் வெகுமதியின் சொரூபம் ஆகுவீர்களாக.சில குழந்தைகளின் மனோநிலை அதிகளவில் மாறுவதை பாப்தாதா சூட்சும வதனத்தில் இருந்து அவதானிக்கிறார். சிலவேளைகளில், அவர்களிடம் ஆச்சரியப்படுகின்ற மனோநிலையும் சிலவேளைகளில், கேள்விக்குறிகளின் மனோநிலையும் காணப்படுகின்றன. சிலவேளைகளில், குழப்பத்திற்கான மனோநிலை காணப்படுகிறது. சிலவேளைகளில், பதட்டத்தின் ஊஞ்சலில் அவர்கள் இருக்கிறார்கள். சிலவேளைகளில், கவனம் செலுத்தும் ஊஞ்சலில் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், சங்கமயுகம் வெகுமதியை அனுபவம் செய்யும் யுகமாகும். முயற்சிக்கான யுகம் அல்ல. எனவே, தந்தையின் குணங்களே குழந்தைகளின் குணங்கள், தந்தையின் ஸ்திதியே குழந்தைகளின் ஸ்திதி ஆகும். இதுவே சங்கமயுகத்தின் வெகுமதி ஆகும்.
சுலோகம்:
உங்களின் புத்தியின் கரத்தை பாப்தாதாவின் கரத்தின் மீது வையுங்கள். நீங்கள் பரீட்சைகளின் கடலால் அசைய மாட்டீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
நம்பிக்கை நிறைந்தவராக இருப்பதன் முதல் அடையாளம், ஒவ்வொரு வினாடியும் ஒவ்வோர் அடியிலும் மிகச்சரியாக ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதாகும். மிகச்சரியான விக்கிரகம் ஆகுவது என்றால், உளியால் அடிக்கப்படுதல் என்று அர்த்தம். ஓர் உளியால் அடிக்கப்பட்டால் மட்டுமே அது மிகச்சரியாக வடிவமைக்கப்படும். நீங்கள் அனைவரும் உளியால் அடிக்கப்படும் அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். இது எதுவும் புதியதல்ல. அது ஒரு விளையாட்டுப் போன்றே உணரப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து அவதானிப்பதுடன், புன்னகை செய்து, ஆசீர்வாதங்களையும் வழங்குகிறீர்கள். ஒரு கதாநாயக நடிகர் தனது பாகத்தை மிகச்சரியாக நடிக்கிறார், நம்பிக்கை உள்ள புத்தியைக் கொண்டிருப்பதுடன் கவலையற்றவரும் ஆவார்.
குறிப்பு: இன்று, பாப்தாதாவின் கண்மணியான, பாப்தாதாவைத் தனது இதய சிம்மாசனத்தில் இருத்திக் கொண்ட, எமது இனிய தாதி குல்ஸார்ஜியின் நினைவு நாள். பிராமண குல அலங்காரமான சகோதர, சகோதரிகளான நாம் அனைவரும் அவ்யக்த பாப்தாதாவிடம் இருந்து நாம் பெற்ற பராமரிப்பின் பிரதிபலனை அவருக்கு வழங்குகின்ற தூய எண்ணத்தைக் கொண்டிருப்போம். தாதிஜி ஸ்ரீமத்திற்கேற்ப ஒவ்வோர் அடியையும் துல்லியமாக எடுத்து வைத்தார். அத்துடன் அவரின் புன்னகை செய்யும் முகத்தால் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கியதுடன், ஆசீர்வாதங்களையும் பெற்று, தனது பாகத்தை மிகச்சரியாக நடித்தார். நாமும் அவரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி, எமது அன்பான அஞ்சலியை தாதிஜிக்குச் செலுத்துவோம். இதுவே தாதி குல்ஸார்ஜிக்கான உண்மையான நினைவாஞ்சலி ஆகும். ஓம் சாந்தி.