11.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தூய்மையைக் கிரகிக்க வேண்டும். எல்லையற்ற தூய்மையைக் கிரகிப்பது என்றால் வேறு எவரையும் அன்றி, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதாகும்.

கேள்வி:
நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைக் கோருவதற்காக முயற்சி செய்யும்பொழுது நீங்கள் கொண்டிருக்கும் ஸ்திதிக்கும், நீங்கள் அதைக் கோரிய பின்னர் உங்களின் ஸ்திதிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?

பதில்:
தந்தையிடம் இருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோரும்பொழுது நீங்கள் அனைத்துச் சரீர சம்பந்தமான உறவினர்களையும் மறந்து ஒரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். உங்களுடைய ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர் தந்தையை மறக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய ஆஸ்தியைப் பெற வேண்டும். எனவே புதிய உறவுமுறைகளை உருவாக்காதீர்கள். மீறி உருவாக்கினால், அவர்களை மறப்பதற்கு நீங்கள் கஷ்டப்படுவீர்கள். இப்பொழுது, தந்தையை மாத்திரம் நினைவுசெய்து, ஏனைய அனைத்தையும் மறந்து விடுங்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவீர்கள்.

பாடல்:
இந்த நேரம் கடந்து செல்கின்றது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். யார் ஞானம் நிறைந்தவர்கள் (கியானி) எனவும், யார் அறியாமையில் உள்ளவர்கள் (அக்யானி) எனவும் அழைக்கப்படுகின்றார்கள் எனப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இந்த ஞானமே, இந்தக் கல்வி ஆகும். இதன் மூலமாக நாம் ஒவ்வொருவரும் ஆத்மா என்றும், அவர் பரமாத்மாவான பரமதந்தை என்றும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். உங்களுடைய வெவ்வேறு இடங்களில் இருந்து நீங்கள் மதுவனத்திற்கு வரும்போது, நிச்சயமாக உங்களை முதலில் நீங்கள் ஆத்மாவாகக் கருதுகிறீர்கள். “நாங்கள் எங்களுடைய தந்தையிடம் செல்கின்றோம்.” சிவபாபா, பாபா என அழைக்கப்படுகின்றார். பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் சிவபாபா இருக்கின்றார். அவரும் உங்களுடைய பாபாவே ஆவார். நீங்கள் வீட்டைவிட்டு மதுவனத்திற்கு வரும்போது, நீங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றீர்கள் எனப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் எழுதுகின்ற கடிதங்களில் கூட, “பாப்தாதா” சிவபாபாவும் பிரம்மதாதாவும் என்றே உள்ளது. நாங்கள் பாபாவிடம் செல்கின்றோம். பாபா ஒவ்வொரு சக்கரத்திலும் எங்களைச் சந்திக்க வருகின்றார். பாபா எல்லையற்ற வகையில் எங்களைத் தூய்மையாக்கி, எல்லையற்ற ஆஸ்தியை எங்களுக்குத் தருகின்றார். தூய்மை எல்லைக்கு உட்பட்டதாகவோ அல்லது எல்லை அற்றதாகவோ இருக்க முடியும். நீங்கள் எல்லையற்ற முறையில் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். நீங்கள் வேறு எவரையுமன்றி, எல்லையற்ற தந்தையை மாத்திரம் நினைவு செய்வதே எல்லையற்ற தூய்மையைக் கொண்டிருப்பது என்று அர்த்தம். அந்த பாபா மிகவும் இனிமையானவர். கடவுளே அதிமேலானவர். அவர் எல்லையற்ற தந்தையாவார். அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அவரை அடையாளங் கண்டுள்ளீர்கள். எல்லையற்ற தந்தை எப்பொழுதும் பாரதத்திற்கே வருகின்றார். அவர் வந்து எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்ளுமாறு தூண்டுகின்றார். துறவறமே பிரதான விடயம். அது ஆர்வமின்மை என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தை இந்த அழுக்கான பழைய உலகம் முழுவதிலும் விருப்பமின்மையைக் கொண்டிருப்பதற்கு உங்களைத் தூண்டுகின்றார். குழந்தைகளே, உங்களுடைய புத்தியின் யோகத்தை இந்த உலகிலிருந்து அகற்றுங்கள் என அவர் கூறுகின்றார். இந்த உலகம் துன்ப உலகமாகிய நரகம் என்று அழைக்கப்படுகின்றது. மக்களும் இவ்வாறு கூறுகின்றனர். ஒருவர் இறக்கின்றபோது, “இன்னார், இன்னார் சுவர்க்கவாசியாகி விட்டார்” என அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையினால், அந்த நபர் நரகத்தில் இருந்தார் என்றே அர்த்தம். அவர்கள் கூறுவது பிழை என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை உங்களைச் சுவர்க்கவாசிகளாக ஆக்குவதற்கு, எது சரியென்பதைக் கூறுகின்றார். இந்த நேரத்திலேயே நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். வேறு எவருமன்றி, தந்தையால் மாத்திரமே உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கான முயற்சியை செய்யத் தூண்ட முடியும். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்குச் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். தந்தையே உங்களை இவ்வாறாக ஆக்குகின்றார். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என அழைக்கப்படுகின்றார். அவர் வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களை முதலில் அமைதி தாமத்திற்கே திரும்பவும் அழைத்துச் செல்கின்றேன். அவர் அதிபதி ஆவார். நீங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று, பின்னர், உங்களுடைய பாகத்தை நடிக்க சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். நாங்கள் அமைதி தாமத்திற்குச் செல்லும்போது, மற்றைய மதத்தவர்களும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். உங்களின் புத்தியில் நாடகச் சக்கரத்தின் முழு ஞானத்தையும் வைத்திருங்கள். நாங்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குச் சென்று, பின்னர் நாங்கள் முதலில் இங்கே இறங்கி வந்து எங்களது ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோரிக் கொள்வோம். நீங்கள் எவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்களோ, அந்த ஒருவரை நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் ஒருமுறை ஆஸ்தியைப் பெற்றவுடன் தந்தையை மறந்து விடுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மிக இலகுவாக உங்களின் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். தந்தை நேரடியாகவே கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீர சம்பந்தமான உறவுமுறைகள் அனைத்தையும் மறந்திடுங்கள். இப்பொழுது புதிய உறவுமுறையை உருவாக்காதீர்கள். நீங்கள் புதிய உறவுமுறையை உருவாக்கினால், நீங்கள் அந்த நபரையும் மறக்க வேண்டும். உதாரணமாக ஒரு மகளோ, அல்லது மகனோ பிறந்தால் அதுவும் கஷ்டமானதே. அது மேலதிகமாக மற்றவர்களின் நினைவாகும். தந்தை கூறுகின்றார்: அனைவரையும் மறந்து, ஒருவரை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் மாத்திரமே எங்களின் தாய், தந்தை, ஆசிரியர், குரு ஆவார். அவரே எங்களின் அனைத்துமாக இருக்கின்றார். நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகளான, சகோதர, சகோதரிகள். எங்களுக்குத் தாய்வழி, தந்தைவழி மாமன் போன்ற எந்த உறவுமுறைகளும் இல்லை. சகோதர, சகோதரிகள் என்ற உறவுமுறையை மாத்திரம் கொண்டிருக்கும் நேரம் இதுவாகும். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள், அத்துடன் சிவபாபாவின் குழந்தைகளும் ஆவீர்கள். ஆகையினால், நீங்கள் பேரன், பேத்திகள். உங்களால் இந்த விடயத்தை நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்கள் புத்தியில் உறுதியாக வைத்திருக்க முடியும். குழந்தைகளாகிய நீங்கள் நடக்கும்போதும் சுற்றித் திரியும்போதும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இப்பொழுது வாழும் கலங்கரை விளக்கங்கள். நீங்கள் ஒரு கண்ணில் அமைதி தாமத்தையும் மறு கண்ணில் சந்தோஷ தாமத்தையும் வைத்திருக்கின்றீர்கள். அந்தக் கலங்கரை விளக்கங்கள் உயிரற்றவை, ஆனால் நீங்கள் உயிருள்ளவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஞானக்கண்ணைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாகி, அனைவருக்கும் இந்தப் பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த உலகம் துன்பதாமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றோம். ஏனையவர்கள் கலியுகத்தில் இருக்கின்றார்கள். சங்கமயுகத்தில் தந்தை அவரது குழந்தைகளுடன் இங்கே இருந்து பேசுகின்றார். அவரது குழந்தைகள் மாத்திரம் இங்கே வருகின்றார்கள். சில குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் இன்னார், இன்னாரை உங்களிடம் அழைத்து வரலாமா? அவர் நல்லவர், தெய்வீகக் குணங்களை எடுத்துக் கொள்வார். அம்பு சிலவேளை அவருக்குத் தைக்கலாம். பாபா பின்னர் கருணை கொண்டு, அந்த ஆத்மா நன்மையடையக் கூடும் என நினைப்பார். இது அதி உன்னதமான சங்கமயுகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த நேத்திலேயே நீங்கள் அனைவரிலும் மேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். கலியுகத்தில் மனிதர்கள் அனைவரும் சீரழிந்தவர்கள். அவர்கள் மேன்மையான மனிதர்களான இலக்ஷ்மி, நாராயணனின் சிலைகளின் முன்னே சென்று வழிபடுகிறார்கள். சத்தியயுகத்தில் யாரும் எவரையும் வழிபடுவதில்லை. இங்கேயிருக்கும் விடயங்கள் அனைத்தும் அங்கேயிருக்க மாட்டாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தந்தையின் நினைவில் மிக நன்றாக நிலைத்திருந்து, சேவையும் செய்தீர்களானால், முன்னேறிச் செல்லும்போது காட்சிகளைக் காண்பீர்கள். நீங்கள் எவரையும் வழிபடுவதில்லை. தந்தை உங்களுக்கு இலகுவாகக் கற்பிக்கின்றார். வீட்டில் இருக்கும்பொழுதே உங்களால் காட்சிகளைக் காண முடியும். பலர் பிரம்மாவின் காட்சிகளைக் கண்டார்கள். அவருடைய காட்சியைக் காண்பதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டி இருக்கவில்லை. எல்லையற்ற தந்தை இவர் மூலமாகக் காட்சிகளை அருள்கின்றார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் யாரிடம் பக்தி உணர்வைக் கொண்டிருக்கிறார்களோ, அவரைக் காட்சியில் காண்பார்கள். இப்பொழுது உங்களுடைய பக்தியுணர்வு அதிமேலான தந்தையின் மீதே உள்ளது. நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டிய தேவை இல்லாமலே தந்தை காட்சிகளை அருள்கின்றார். ஆரம்ப காலத்தில் பலர் சாதாரணமாகவே திரான்சில் சென்றார்கள். அவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து திரான்சில் செல்வார்கள். அவர்கள் எந்தவிதமான பக்தியும் செய்ததில்லை. குழந்தைகள் வழிபாடு போன்றவற்றைச் செய்வார்களா? “நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வோம்” என்று ஒரு விளையாட்டை அவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திரான்சில் செல்வார்கள். கடந்த காலத்தில் நடந்தவை எல்லாம் மறுபடியும் நடைபெறும். நாங்கள் இந்தத் தர்மத்திற்குச் சொந்தமானவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே சத்தியயுகத்தின் முதலாவது தர்மமாகும். அது பெருமளவு சந்தோஷத்தை கொடுக்கின்றது. பின்னர் படிப்படியாகக் கலைகள் குறைவடைகின்றன. நீங்கள் புதிய வீட்டில் அனுபவிக்கின்ற அதே சந்தோஷத்தை பழைய வீட்டில் அனுபவிக்க முடியாது. சிறிது காலத்தின் பின்னர் அந்தப் பிரகாசம் குறைந்துவிடும். சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. நரகத்தையும் பாருங்கள், சுவர்க்கத்தையும் பாருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். தந்தை மீதான உங்களின் நினைவு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஆத்மா என்பதை மறந்தவுடன், சரீர உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் பொழுதே, நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். நீங்கள் சரீர உணர்வுக்கு வருகின்ற பொழுது, உங்களுடைய சரீர சம்பந்தமான உறவுமுறைகளை நினைவு செய்வீர்கள் என்பது ஒரு நியதியாகும். என்னுடையவர் ஒருவரேயன்றி, வேறு எவருமில்லை என்று நீங்கள் கூறி வந்தீர்கள். பாபா, நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். இப்பொழுதே அந்த நேரமாகும். ஆகையினால், ஒருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் கண்களால் எவரையும் பார்க்கலாம். நீங்கள் சுற்றுலா செல்லாம், ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும். உங்களுடைய வாழ்க்கைக்காக நீங்கள் செயல்களைச் செய்யலாம். ஆனால் உங்கள் கைகள் வேலையைச் செய்யட்டும், உங்களின் இதயம் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் அன்புக்குரியவரை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் ஒரு சினேகிதி மீது அன்பு செலுத்த தொடங்கினால், அவளை நீங்கள் எப்பொழுதும் நினைவுசெய்வீர்கள். பின்னர் அந்த இழையை (பற்றை) அகற்றுவது கஷ்டமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் ‘இது என்ன?’ என்று பாபாவை நீங்கள் கேட்பீர்கள். ஓ ஆனால் ஏன் உங்களை இன்னொருவரின் பெயர், ரூபத்தில் சிக்க விட்டீர்கள்? முதலில் நீங்கள் சரீர உணர்வுடைவர் ஆகுகின்றீர்கள். பின்னர் உங்களின் கடந்த காலக் கர்மக்கணக்குகள் உங்களை ஏமாற்றுகின்றன. தந்தை கூறுகின்றார்: உங்கள் கண்களால் பார்ப்பனவற்றை எல்லாம் உங்கள் புத்தியில் ஈர்க்க அனுமதிக்காதீர்கள். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இங்கே அமர்ந்திருக்கும் போதே பல குழந்தைகளால் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்க முடிவதில்லை. ஆகையினால், எந்தளவிற்குச் சிவபாபாவை நினைவு செய்கின்றீர்கள் என உங்களைச் சோதித்துப் பாருங்கள். இல்லாவிடின் உங்களுடைய அட்டவணை பாழாகிவிடும். கடவுள் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். அதைக் குறித்து வையுங்கள். நீங்கள் விரும்பும் போதெல்லாம் நினைவில் அமர்ந்திருங்கள். உணவை உண்ணுங்கள், உலாவச் செல்லுங்கள். பின்னர் வந்து 10 இல் இருந்து 15 நிமிடங்கள் நினைவில் அமர்ந்திருங்கள். இங்கே உங்களுக்குச் செய்வதற்குச் சொந்த வேலைகள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக, உங்களிற் சிலர் தொடர்ந்தும் உங்கள் புத்தியால் நீங்கள் விட்டுச்சென்ற வேலைகளையோ, வியாபாரத்தையோ நினைவு செய்கிறீர்கள். இந்த இலக்கு மிக உயர்ந்தது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்களைச் சோதியுங்கள்! இது இப்பொழுது உங்களுடைய மிகவும் பெறுமதியான நேரம் ஆகும். பக்தி மார்க்கத்தில் பெருமளவு நேரத்தை நீங்கள் வீணாக்கினீர்கள். நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் வீழ்ந்தீர்கள். ஒருவர் ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியைக் கண்டால், அவர் மிகுந்த சந்தோஷம் அடைவார். ஆனால் அவர் எதையுமே பெறுவதில்லை. நீங்கள் ஒரு தடவை மாத்திரமே தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறமுடியும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னுடைய நினைவில் நிலைத்திருங்கள். உங்களுடைய பல பிறவிப் பாவங்கள் அழிக்கப்படும். நினைவில் நிலைத்திருக்கும் குழந்தைகளால் மாத்திரமே அவர்களுடைய பாவங்களை அழித்து, கர்மாதீத நிலையை அடைந்து சுவர்க்கத்திற்கான கடவுச்சீட்டைப் பெறமுடியும். இல்லாவிடின், பெருமளவு தண்டனை அனுபவம் செய்ய வேண்டியிருக்கும். பாபா மேலும் உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார். கிரீடத்துடன் சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை (உங்களுடைய சட்டைப்பையில்) வைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் என்னவாக இருந்து, அவ்வாறாக மாறுகின்றீர்கள் என நினைவு செய்யக்கூடியதாக இருக்கும். எந்தளவிற்கு அந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் நினைவைக் கொண்டிருப்பீர்கள். பின்னர் நீங்கள் அந்தப் படத்தில் பற்றுள்ளவர் ஆகிவிடுவீர்கள். நான் இப்பொழுது சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுகின்றேன். நீங்கள் புகைப்படத்தைப் பார்க்கின்றபோது, பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன் சிவபாபாவையும் நினைவு செய்வீர்கள். இந்த விடயங்கள் எல்லாம் முயற்சி செய்வதற்கான வழிமுறைகள். சத்திய நாராயணனின் கதையை செவிமடுத்ததன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என எவரையாவது கேளுங்கள்! எங்களுடைய பாபா உண்மையான சத்திய நாராயணனின் கதையை எங்களுக்கு கூறுகின்றார். நீங்கள் எடுக்கின்ற 84 பிறவிகளின் கணக்கும் இருக்கின்றது. அனைவரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை. வெளி உலகிலுள்ள எவருமே இதைப் பற்றி எதையும் அறியமாட்டார்கள். அவர்கள் இந்த விடயங்களைப் பற்றிப் பேசுவார்கள். அது வெறும் விளக்கம் என அழைக்கப்படுகின்றது. இங்கே உங்களுடையவை நடைமுறையானவை. இப்பொழுது நடைமுறையில் நடப்பவற்றைக் கொண்டே பக்தி மார்க்கத்தில் வேதநூல்கள் உருவாக்கப்பட்டன. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகிப் பின்னர் விஷ்ணுதாமத்திற்குச் செல்கின்றீர்கள். இது புதிய விடயம். இது பொய்மையான இராவண இராச்சியம். பின்னர் அது சத்தியயுகமாகி இராம இராச்சியம் இருக்கும். இவை உங்களுடைய படங்களிலே மிகத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இது இப்பொழுது இந்தப் பழைய உலகின் முடிவாக உள்ளது. 5000 வருடங்களுக்கு முன்னரும் விநாசம் இடம்பெற்றது. இத்தகைய விடயங்களை உருவாக்கும் விஞ்ஞானிகளும் தங்களை அவற்றை எல்லாம் செய்யும்படி யாரோ தூண்டுவதாக நினைக்கிறார்கள். அந்தப் பொருட்களை உருவாக்குவதன் மூலம் தாம் அனைத்தையும் அழித்து விடுவோம் என்பதையும் அவர்கள் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்கின்றார்கள். எவ்வாறாயினும், அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாலுள்ளது. ஏனென்றால் அவர்கள் பயப்படுகின்றார்கள். தாம் வீட்டில் இருந்தவாறே வேறு இடங்களுக்கு குண்டுகளை அனுப்பி அனைத்தையும் அழித்து விடமுடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். விமானங்கள், பெற்றோல் போன்றவற்றிற்கு எந்தவிதத் தேவையும் இருக்க மாட்டாது. அழிவு நிச்சயமாக இடம்பெறவே வேண்டும். சத்தியயுகம் புதிய உலகமாக இருந்தது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது இதை அனைவரும் அறிந்து கொள்வார்கள். ஸ்தாபனை நிச்சயமாக இடம் பெறவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைப் பற்றிச் சிறிதளவும் சந்தேகம் இருக்கக் கூடாது. முன்னைய கல்பத்தில் நடந்தது போலவே இந்த நாடகம் தொடரும். நாடகம் நிச்சயமாக உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறது. நாடகத்தில் என்ன நடக்க இருக்கின்றதோ அது நடக்கும் என்றில்லை. சிலர் முயற்சி பெரியதா அல்லது வெகுமதி பெரியதா? எனக் கேட்டார்கள். முயற்சியே பெரியது, ஏனெனில் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்பவே வெகுமதி கிடைக்கும். முயற்சி செய்யாது இங்கே எவரும் இருக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். குழந்தைகள் எல்லா இடங்களிலும் இருந்தும் இங்கே வந்து தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். பாபா நான் உங்களை மறந்துவிட்டேன் என அவர்கள் கூறுகின்றார்கள். ஓ! சிவபாபா தன்னை நினைவுசெய்யுமாறு உங்களுக்குக் கூறுகின்றார்! யாருக்கு அவர் இதைக் கூறினார்? அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்கே கூறினார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடனேயே பேசுகின்றார். சிவபாபா மாத்திரமே தூய்மையாக்குபவர். ஆத்மாக்களாகிய நீங்கள் அவர் கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார் என்ற உறுதியான நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கவேண்டும். அவர் அதிமேலான தந்தை, அனைவரிலும் அதி அன்பான தந்தை ஆவார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அவரை நினைவுசெய்தீர்கள். ‘உங்கள் வழிகளும், முறைகளும் தனித்துவமானவை’ என்று நினைவுகூரப்படுகின்றது. ஆகையினால் அவர் நிச்சயமாக உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுத்திருக்க வேண்டும். இப்பொழுது இந்த மனிதர்கள் அனைவருமே வீடு திரும்பவேண்டும் என்பது உங்களின் புத்தியில் இருக்கின்றது. எத்தனை ஆத்மாக்கள் இருக்கின்றார்கள் என நினைத்துப் பாருங்கள். அவர்கள் எல்லோருடைய வம்சாவளி விருட்சமும் இருக்கின்றது. ஆத்மாக்கள் அனைவரும் அங்கே சென்று வரிசைக்கிரமமாக இருப்பார்கள். ஒரு வகுப்பு அடுத்த வருடத்திற்கு மாற்றப்படும்போது, அந்த மாணவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக அமர்வார்கள். நீங்களும் வரிசைக்கிரமமாகவே திரும்புகின்றீர்கள். அனைத்துச் சிறிய புள்ளிகளான ஆத்மாக்களும் வரிசைக்கிரமமாகத் திரும்பிச்செல்வார்கள். பின்னர் வரிசைக்கிரமமாக கீழே வந்து தங்களுடைய பாகங்களை நடிப்பார்கள். இது உருத்திராட்ச மாலையாகும். தந்தை கூறுகின்றார்: பலகோடிக்கணக்கான ஆத்மாக்களின் மாலை எனது மாலையாகும். மலராகிய நான் மேலே இருக்கின்றேன். பின்னர், ஒவ்வொருவரும் தங்களுடைய பாகத்தை நடிப்பதற்காக கீழே வருவார்கள். இந்த நாடகம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது. கூறப்பட்டுள்ளது: இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. எவ்வாறு இந்த நாடகம் தொடர்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அனைவருக்கும் கூறுங்கள்: உங்களை ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். அதன்மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்களால் வீடு திரும்ப முடியும். இதற்கு முயற்சி தேவை! அனைவருக்கும் பாதையைக் காட்டுவது உங்களின் கடமை. நீங்கள் எவரையும் சரீரதாரிகளுடன் சிக்க வைப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் எரிந்துவிடும். தந்தை கொடுக்கின்ற வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இதில் எதைப் பற்றியும் கேட்பதற்கு எதுவுமில்லை. எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதில் பாபா என்ன கருணையைக் கொண்டிருக்க முடியும்? நீங்கள் பாபாவை நினைவுசெய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைக் கோரவேண்டும். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். ஆகையினால், நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இப்பொழுது இந்த மரம் பழையதாகி விட்டது என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆகையினால், நீங்கள் இந்தப் பழைய உலகின்மீது விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். இதுவே எல்லையற்ற விரும்பமின்மை என அழைக்கப்படுகின்றது. ஹத்தயோகிகள் எல்லைக்குட்பட்ட விருப்பமின்மையைக் கொண்டுள்ளார்கள். அவர்களால் உங்களுக்கு எல்லையற்ற விருப்பமின்மையைக் கற்பிக்க முடியாது. எல்லைக்குட்பட்ட விருப்பமின்மையைக் கொண்டுள்ளவர்களால், எவ்வாறு எல்லையற்ற விருப்பமின்மையைக் கற்பிக்க முடியும்? தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஓ எனது நீண்ட காலம் தொலைந்திருந்து, இப்பொழுது கண்டுகொண்ட குழந்தைகளே. ‘நீங்களும் எங்களின் நீண்ட காலம் தொலைந்து இப்பொழுது கண்டுகொண்ட தந்தையே’ எனப் பதில் அளிக்கின்றீர்கள். 63 பிறவிகளாக நீங்கள் தந்தையை நினைவுசெய்தீர்கள்: நாங்கள் வேறு எவருக்குமன்றி ஒரு தந்தைக்கே சொந்தமானவர்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் சுவர்க்கத்துக்கான கடவுச்சீட்டைக் கோருவதற்கு, தந்தையின் நினைவின் மூலம் உங்களது பாவங்களை அழித்து, உங்களின் ஸ்திதியைக் கர்மாதீத் ஆக்குங்கள். உங்களைத் தண்டனையில் இருந்து பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.

2. ஞானம் நிறைந்தவராகி, அனைவருக்கும் வீட்டிற்கான பாதையைக் காட்டுங்கள். வாழும் கலங்கரை விளக்கங்கள் ஆகுங்கள். ஒரு கண்ணில் அமைதி தாமமும், மறுகண்ணில் சந்தோஷ தாமமும் இருக்கட்டும். இந்தத் துன்ப தாமத்தை மறந்து விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருந்து, ஒவ்வோர் ஆத்மாவையும் ஈடேற்றும் உணர்வுடன் அவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்களாக.

ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் மேன்மையான உணர்வுகளை, அதாவது, ஒவ்வோர் ஆத்மாவையும் ஈடேற்றும் உணர்வுகளைக் கொண்டிருந்து, ஆத்மாக்களை முன்னேற்றுதல் என்றால், எல்லோருக்காகவும் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உங்களின் தூய மனோபாவத்தாலும் நலம்விரும்பி என்ற உங்களின் ஸ்திதியாலும் மற்றவர்களின் குறைபாடுகளை மாற்றுங்கள். மற்றவர்களின் பலவீனங்களை அல்லது குறைபாடுகளை உங்களுடையதாகக் கருதி, அவற்றைப் பற்றிப் பேசிப் பரப்புவதற்குப் பதிலாக, அவற்றை ஏற்றுக் கொண்டு மாற்றிவிடுங்கள். இதுவே மரியாதை கொடுப்பதாகும். பெரிய விடயத்தையும் சிறியதாக்குதல், மனவிரக்தி அடைந்துள்ள ஆத்மாக்களைச் சக்திசாலி ஆக்குதல், அவர்களின் சகவாசத்தின் நிறமூட்டப்படாது இருத்தல், ஆனால் அவர்களுக்குத் தொடர்ந்தும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குதலே மரியாதை கொடுப்பதாகும். இத்தகைய மரியாதை கொடுப்பவர்கள் மட்டுமே, மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள்.

சுலோகம்:
நீங்கள் செய்யும் தியாகத்தின் மூலம் பெற்ற பாக்கியத்தை உங்களின் பழைய சுபாவமும் சம்ஸ்காரங்களும் இல்லாமல் செய்துவிடும். ஆகவே, அவற்றையும் துறவுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
தந்தை பிரம்மாவிற்கு எப்போதும் ஏகாந்தத்தில் விருப்பம் இருந்தது. அதனால் எப்போதும் அகநோக்கில் இருந்தார். நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மா என்ற பாடத்தை அவர் எப்போதும் உறுதியாக்கிக் கொண்டார். அதனால் அவர் எப்போதும் அமைதிக் கடலிலும் சந்தோஷக் கடலிலும் திளைத்திருந்தார். அவரின் தூய எண்ணங்கள், அதிர்வலைகள், மனோபாவம், வார்த்தைகள், தொடர்புகள் மூலமாக அவர் தொடர்ந்தும் எல்லோருக்கும் அமைதியின், சந்தோஷத்தின் அனுபவங்களை வழங்கினார். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள்.