12.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அதனால், நீங்கள் அலைந்து திரிவது இப்பொழுது நின்றுவிட்டது. நீங்கள் அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்கின்றீர்கள்.
கேள்வி:
தேவர்களிடம் உள்ள சக்தி என்ன? என்ன சிறப்பியல்பினால் அவர்கள் இந்த சக்தியைக் கொண்டுள்ளனர்?பதில்:
தேவர்களிடம் முழு உலகையும் ஆட்சி செய்யும் சக்தி உள்ளது. ஒரே வழிகாட்டலைப் பின்பற்றுகின்ற சிறப்பியல்பை அவர்கள் கொண்டிருப்பதாலேயே அவர்களிடம் இந்தச் சக்தி உள்ளது. அங்கே, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். அதனால், அங்கே ஆலோசகர்கள் போன்றோருக்கான அவசியம் இல்லை. 21 பிறவிகளுக்கு ஆட்சி செய்யும் அளவிற்குத் தேவர்கள் சங்கமயுகத்தில் தந்தையிடம் இருந்து அத்தகைய வழிகாட்டல்கைளப் பெறுகின்றார்கள். அங்கே, ஓர் அரசருக்கு ஒரு தெய்வீகக் குடும்பம் இருக்கும். அங்கே வேறு வழிகாட்டல்கள் எதுவும் இருப்பதில்லை.பாடல்:
ஓ பிரபுவே, குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கண்கள் (பார்வை) கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் உங்களுக்குக் கண்கள் இருக்கவில்லை. எந்தக் கண்களை நீங்கள் கொண்டிருக்கவில்லை? நீ;ங்கள் இந்த ஞானக் கண்ணைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் அறியாமை எனும் கண்ணைக் கொண்டிருந்தீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். வேறு எவரிடமும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. இந்த ஞானத்தின் மூலமே நீங்கள் சத்கதியைப் பெறுகின்றீர்கள். அதாவது, நீங்கள் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் செல்கின்றீர்கள். சந்தோஷ தாமம் எவ்வாறு துன்ப உலகமான மாயையின் உலகமாக மாறியது என்பதைக் காணக் கூடியளவிற்கு உங்கள் கண்கள் திறக்கப்பட்டுள்ளன. ‘குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்’ என நீங்கள் அழைக்க ஆரம்பித்தீர்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் யாகம் வளர்த்தல், தானதர்மம் செய்தல் போன்றவற்றைச் செய்தபோதிலும் அவர்கள் எவராலும் அமைதி தாமத்திற்கான அல்லது சந்தோஷ தாமத்திற்கான வழியைக் காணமுடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நானும் ஒரு பாகத்தைப் பெற்றிருக்கின்றேன். பக்தி மார்க்கத்தில், அவர்கள் அழைக்கின்றார்கள்: முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுங்கள். இதற்காகவே அவர்கள் அதிகளவு யாகம் வளர்த்து, தானதர்மம் செய்து, அலைந்து திரிகின்றார்கள். அமைதி தாமத்திலும் சந்தோஷ தாமத்திலும் அலைந்து திரிதல் இருப்பதில்லை. உங்களுக்கு மட்டுமே இது தெரியும். அந்த மக்களுக்கு உலகக் கல்வியையும் புராணங்களையும் படிப்பதைப் பற்றி மட்டுமே தெரியும். அவர்களுக்கு இந்த ஆன்மீகத் தந்தையை ஒருபோதும் தெரியாது. ஆன்மீகத் தந்தை வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அந்த வேளையில் அவர் அனைவருக்கும் சத்கதியைக் கொடுப்பதுடன், பழைய உலகமும் மாற்றப்படுகின்றது. நீங்கள் மனிதரிலிருந்து தேவர் ஆகும்போது முழு உலகும் தேவர்களின் இராச்சியமாக இருக்கும். அது சுவர்க்கம் என்று அழைக்கப்படும். பாரதத்திலேயே ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது என்று பாரத மக்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது அதி மங்களகரமான சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். தந்தையை நினைவு செய்பவர்களும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களும் சங்கம யுகத்தில் இருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கின்றார்கள். இந்த நேரத்தில் ஆட்சியுரிமையோ அல்லது இராச்சியமோ இல்லை. பல்வேறு அபிப்பிராயங்களின் அடிப்படையில் இராச்சியமானது ஆட்சி செய்யப்படுகின்றது. சத்திய யுகத்தில் ஒரு சக்கரவர்த்தியின் வழிகாட்டலிலேயே ஆட்சி செய்யப்படும். அங்கே ஆலோசகர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பெருமளவு சக்தி உள்ளது. பின்பு அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்போது ஆலோசகர்களை வைத்துக் கொள்கின்றார்கள். ஏனெனில் அவர்களிடம் அந்தச் சக்தி மேலும் இருப்பதில்லை. இப்பொழுது இது மக்கள் ஆட்சி ஆகும். சத்தியயுகத்தில் அவர்கள் ஒரே வழிகாட்டலைப் பின்பற்றுவதால் அவர்களிடம் சக்தி இருக்கின்றது. நீங்கள் அந்தச் சக்தியை இப்பொழுது பெற்று, பின்னர் 21 பிறவிகளுக்குச் சுதந்திரமாக ஆட்சி செய்வீர்கள். அது உங்கள் தெய்வீகக் குடும்பம். இது உங்கள் இறை குடும்பம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்களை ஓர் ஆத்மா என்று கருதித் தந்தையை நினைவு செய்யும்போது, இறை குடும்பத்துக்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சரீர உணர்வுக்கு வந்து தந்தையை மறந்தால், அசுர குடும்பத்துக்கு உரியவர்கள் ஆகுவீர்கள். ஒரு விநாடி நீங்கள் இறை குலத்துக்கு உரியவர்களாகவும் மறு விநாடி நீங்கள் அசுர குலத்துக்கு உரியவர்களாகவும் உள்ளீர்கள். உங்களை நீங்கள் ஆத்மாக்கள் என்று கருதித் தந்தையை நினைவு செய்வது மிகவும் இலகுவானது. ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அதை மிகவும் கடினமாகக் கருதுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்களை ஆத்மாக்கள் என்று கருதித் தந்தையை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் சரீரத்தின் மூலம் நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும். சரீரம் இல்லாமல் உங்களால் எந்தச் செயலையும் செய்ய முடியாது. அனைத்தையும் செய்யும்போதும், தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், இங்கே உங்களுக்கு வேறு எதுவும் செய்வதற்கு இல்லாமல் இருந்தாலும், உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாதுள்ளது, நீங்கள் மறந்து விடுகிறீர்கள். இதுவே முயற்சி ஆகும். பக்தி செய்யும் பொழுது, நாள் முழுவதும் பக்தி செய்யுங்கள் என்று கூறப்படுவதில்லை. அதற்கென நேரம் குறிக்கப்படுகின்றது, அதிகாலையிலோ அல்லது மாலையிலோ அல்லது இரவிலோ என்று குறிக்கப்படுகின்றது. உங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற மந்திரங்களை நீங்கள் புத்தியில் வைத்திருப்பீர்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல புராணங்களைப் படிக்கின்றார்கள். நீங்கள் புத்தகங்கள் போன்றவற்றைப் படிக்கவோ, எழுதவோ வேண்டியதில்லை. இந்த முரளி போன்றவை உங்களைப் புத்துணர்ச்சி ஊட்டுவதற்காகவே அச்சிடப்படுகின்றன. இல்லாவிடின் எந்தப் புத்தகம் போன்றவையும் இருக்க மாட்டாது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். ஒரு தந்தையிடம் மட்டுமே இந்த ஞானம் உள்ளது. அவர்கள் ஞானத்தையும், யோகத்தையும் அங்கே கற்பிப்பதைப் போல், ஒரு கட்டடத்துக்கு “கியான் விக்கியான் பவன்” என்று இப்பொழுது பெயரிட்டுள்ளனர். எந்த அர்த்தமும் இல்லாமல் அவர்கள் அத்தகைய பெயர்களைக் கொடுக்கிறார்கள். கியான், விக்கியான் என்றால் என்ன என்பதை அவர்கள் முற்றிலும் அறியமாட்டார்கள். உங்களுக்கு இப்பொழுது கியான், விக்கியான் என்றால் என்னவென்று தெரியும்: விக்கியான் என அழைக்கப்படுகின்ற யோகத்தின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்ற உலகின் வரலாறும், புவியியலுமான இது கியான் ஆகும். உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். எவ்வாறாயினும், அது ஓர் எல்லைக்கு உட்பட்ட கல்வி. இங்கே, நாங்கள் எவ்வாறு இராச்சியத்தைக் கோருகிறோம், எவ்வாறு, எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இராச்சியத்தை ஆட்சி செய்கிறோம், நாங்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைப் பெறுகிறோம் என்னும் எல்லையற்ற வரலாறும் புவியியலும் உங்கள் புத்தியில் உள்ளது. இந்த விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. தந்தை மட்டுமே ஞானம்-நிறைந்தவர் ஆவார். எவ்வாறு உலகச்சக்கரம் சுழல்கிறது என்பதைத் தந்தை மட்டுமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தை அறியாத காரணத்தினால், இன்ன இன்னார் நிர்வாணாவுக்குச் சென்று விட்டார் அல்லது அவர் ஒளியினுள் இரண்டறக் கலந்து விட்டார் என மனிதர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் அனைவரும் இந்த உலகச் சக்கரத்தினுள் வருகிறார்கள் என்பதையும், எவரும் அதிலிருந்து விடுவிக்கப்பட முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒரு மனித ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இன்னுமொன்றை எடுக்கிறார். நாடகம் மிகவும் நீண்டது. அனைவரிலும் ஓர் ஆத்மா இருக்கிறார், ஆத்மாவினுள் ஓர் அழிவற்ற பாகம் பதியப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். அது நாடகம் என அழைக்கப்படுவதால், அதற்கு நிச்சயமாகவே ஒரு கால எல்லை இருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நாடகத்தின் கால எல்லை 5000 வருடங்கள் ஆகும். பக்தி மார்க்கத்துச் சமயநூல்களில், நாடகத்தின் கால எல்லை நூறாயிரக் கணக்கான வருடங்கள் என எழுதப்பட்டுள்ளது. கௌரவர்கள் காரிருளில் இருந்தார்கள் எனவும், பாண்டவர்கள் ஞானோதயம் பெற்றார்கள் எனவும் உள்ள கூற்றானது தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பித்த இந்த நேரத்தைப் பற்றியதே ஆகும். கலியுகம் இன்னமும் 40,000 வருடங்களுக்குத் தொடரப் போகிறது என அம்மக்கள் எண்ணுகிறார்கள். கடவுள் வந்துவிட்டார், இப்பழைய உலகின் மரணம் முன்னிலையில் உள்ளது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அனைவரும் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு யுத்தத்தைப் பார்க்கும் பொழுது, அது மகாபாரத யுத்தத்தின் ஓர் அறிகுறி என அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறும். பின்னர், படிப்படியாக, அவை நிறுத்தப்படும். இன்னமும் உங்கள் ஸ்தாபனை முழுமையாக இடம்பெறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை இலகு இராஜயோகத்தைக் கற்பித்து, இங்கே இராச்சியத்தை ஸ்தாபித்தார் எனக் கீதையில் குறிப்பிடப்படவில்லை. கீதையில் அவர்கள் பிரளயத்தைக் காட்டி உள்ளார்கள். அனைவரும் மரணித்து, பஞ்ச பாண்டவர்கள் காப்பாற்றப்பட்டார்கள், பின்னர் அவர்களும் மலைகளில் உருகி விட்டார்கள் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இராஜயோகத்தினூடாக என்ன நடைபெற்றது என்பதை முற்றாகவே அவர்கள் அறியாமல் உள்ளனர். தந்தை தொடர்ந்தும் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள். ஓர் எல்லைக்கு உட்பட்ட பிரம்மா (பௌதீகத் தந்தை) எல்லைக்கு உட்பட்ட படைத்தலையும் பராமரித்தலையும் செய்கிறார், ஆனால் அழிப்பதில்லை. ஒரு மனைவி ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தந்தையும் வந்து உங்களைத் தத்தெடுக்கிறார். அவர் கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்துக் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறேன். நான் இவரின் மூலம் குழந்தைகளாகிய உங்களைப் படைக்கிறேன். தந்தை இருக்கிறார், அத்துடன் குடும்பமும் உள்ளது. இவை மிகவும் ஆழமான விடயங்கள். இவை மிக அரிதாகவே எவரது புத்தியிலும் பிரவேசிக்கின்ற, மிகவும் ஆழமான, நுணுக்கமான விடயங்களாகும். தந்தை இப்பொழுது கூறுகிறார்: எல்லாவற்றுக்கும் முதலில், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு, இன்னுமொன்றை எடுக்கிறார். சரீரங்களுக்கே வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்களின் பெயர்கள், ரூபங்கள், முகச்சாயல்கள் போன்றவை அனைத்தும் வேறுபடுகின்றன. ஒருவருடைய முகச்சாயல் இன்னுமொருவர் போன்று இருக்க முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் ஓர் ஆத்மா தனக்கெனச் சொந்தமான முகச்சாயலைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருடைய செயலும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது எல்லையற்ற தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே, நாங்கள் ஏன் தந்தையை நினைவு செய்யக்கூடாது? இதற்கே முயற்சி தேவைப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கும்பொழுது, மாயையின் பல புயல்களும் வருகின்றன, யுத்தமும் இடம்பெறுகிறது, ஆனால் நீங்கள் பயப்படக்கூடாது. மாயை மீண்டும் மீண்டும் உங்கள் நினைவைத் துண்டிக்கிறாள். அப்பொழுது, உங்கள் புத்தியை முழுமையாகச் சீரழிக்கின்ற பாவ எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இலக்ஷ்மியாலும் நாராயணனாலும் எவ்வாறு தமது புலன்களைக் கட்டுப்படுத்த முடிந்தது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அவர்கள் முழுமையாக விகாரங்கள் இன்றி இருந்தார்கள். இந்தக் கற்பித்தல்களை அவர்கள் யாரிடமிருந்து பெற்றார்கள்? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவதற்குக் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். அவர்களிடம் எந்த விகாரமும் இல்லை. அங்கே, இராவண இராச்சியம் இல்லை. இராவண இராச்சியம் பின்னரே வருகிறது. இராவணன் யார் என்பதை எவரும் அறியார். நாடகத்துக்கேற்ப, இதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மக்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிய மாட்டார்கள். ஆகவே அவர்கள் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) எனக் கூறியவாறு உள்ளனர். இப்பொழுது நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகள். அவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் தலைவணங்குபவர்கள், தமோபிரதானான, சீரழிந்த மனிதர்கள் ஆவார்கள். தந்தை கூறுகிறார்: எல்லாவற்றுக்கும் முதலில், ஒரு விடயத்தை உறுதி ஆக்குங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்கே முயற்சி தேவை. நீங்கள் எட்டு மணிநேரத்திற்கு ஓர் அரசாங்க வேலை பார்ப்பது போல், இப்பொழுது நீங்கள் எல்லையற்ற அரசாங்கத்தின் உதவியாளர்களாக இருக்கிறீர்கள். குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் நினைவில் நிலைத்திருக்க நீங்கள் முயற்சி செய்யவேண்டும். உங்களுடைய இந்த ஸ்திதி பின்னர் நீங்கள் வேறு எவரையும் நினைவு செய்யாத அளவுக்கு மிகவும் உறுதியானதாக ஆகும். பின்னர் நீங்கள் தந்தையின் நினைவில் உங்கள் சரீரத்தை விட்டு நீங்குவீர்கள். பின்னர் நீங்கள் வெற்றி மாலையில் ஒருவர் ஆகுவீர்கள். ஓர் அரசருக்குப் பல பிரஜைகள் உள்ளார்கள். இங்கே பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவரான, வெற்றி மாலையின் ஒருவர் ஆகுவீர்கள். 16,108 மணிகளின் மாலையும் உள்ளது. அது ஒரு பெரிய பெட்டியினுள் இருக்கிறது. எட்டு மணிகளின் மாலையும், பின்னர் 108 மணிகளின் மாலையும், பின்னர் இறுதியில், 16,108 மணிகளின் மாலையும் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து இராஜயோகத்தைக் கற்று, முழு உலகையும் சுவர்க்கமாக ஆக்கினீர்கள். இதனாலேயே நீங்கள் பூஜிக்கப்படுகிறீர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதியானவர்களாக இருந்து, இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகி உள்ளீர்கள். இந்த தாதா கூறுகிறார்: நானும்கூட மாலையின் மணிகளை உருட்டுவது வழக்கம். இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்தில், உண்மையில், உருத்திராட்ச மாலை இருக்க வேண்டும். முதலில் நீங்கள் உருத்திராட்ச மாலையில் ஒருவராகிப் பின்னர் உருண்டா (விஷ்ணு) மாலையில் ஒருவர் ஆகுவீர்கள். முதல் இலக்க மாலையானது சிவனும் உள்ளடங்குகின்ற, உருத்திராட்ச மாலையாகும். சிவன் எவ்வாறு உருண்டா மாலையில் இருக்கக்கூடும்? அது விஷ்ணுவின் மாலை. எவராலும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. நீங்கள் சிவபாபாவின் கழுத்து மாலையில் ஒருவராகப் போகிறீர்கள் என இப்பொழுது கூறுகிறீர்கள். பிராமணர்களின் மாலை உருவாக்கப்பட முடியாது. பிராமணர்களின் மாலை கிடையாது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு விரைவாகவே வந்து அங்கு இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். வேறு எங்கும் உங்களால் இந்தக் கற்பித்தல்களைப் பெற முடியாது. நீங்கள் இப்பொழுது உங்கள் பழைய சரீரங்களை விட்டு நீங்கிச் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். பாரத மக்கள் அனைவரும் சுவர்க்கவாசிகள் ஆகுவார்கள். குறிப்பாகப் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது 5000 வருடங்களுக்குரிய விடயம். அது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரிய விடயமாக இருக்க முடியாது. தேவர்கள் வாழ்ந்ததில் இருந்து 5000 வருடங்கள் ஆகிவிட்டன. மக்கள் சுவர்க்கத்தை மறந்து விட்டார்கள், அதனால் அவர்கள் அதனைப் பற்றி வெறுமனே அவ்வாறு பேசுகிறார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறில்லை. அத்தகையதொரு புராதன காலம் இருக்க முடியாது. சூரிய வம்சமும், பின்னர் சந்திர வம்சமும் இருந்தன. பின்னர் ஏனைய சமயங்கள் அனைத்தும் வருகின்றன. பழைய பொருட்களால் என்ன பயன்? மக்கள் அப்பொருட்களில் பலவற்றை வாங்குகிறார்கள். பழைய பொருட்களுக்கு அவர்கள் அதிகளவு பெறுமதியை இடுகிறார்கள். சிவபாபாவே அதிபெறுமதியானவர். அவர்கள் பல சிவலிங்கங்களை உருவாக்குகிறார்கள். ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளி என்பதை எவரும் அறிய மாட்டார்கள். ஆத்மாவிற்கு ஓர் ஆழமான சூட்சும வடிவம் உள்ளது. அத்தகையதொரு சின்னஞ் சிறிய ஆத்மாவில் பெரும் பாகம் பதியப்பட்டுள்ளது எனத் தந்தை மட்டுமே விளங்கப்படுத்துகிறார். இந்த நாடகம் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப இடம்பெறுகிறது. அங்கே உங்களுக்கு அந்த ஞானம் இருக்காது. அது மறைந்து விடுகிறது. ஆகவே, பின்னர் எவ்வாறு எவராவது உங்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? பக்தி மார்க்கத்துக்காகவே, அவர்கள் அமர்ந்திருந்து அவை அனைத்தையும் உருவாக்கினார்கள். பிராமண, தேவ, சத்திரிய தர்மங்கள் - மூன்று தர்மங்களும் இப்பொழுது தந்தையால் எதிர்காலப் புதிய உலகத்துக்காக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏனைய கல்விகள் இந்தப் பிறவிக்கு உரியது. நீங்கள் இக்கல்வியின் வெகுமதியைப் புதிய உலகில் பெறுவீர்கள். சங்கமயுகத்திலேயே இக்கல்வி இடம்பெறுகிறது. இதுவே அதிமங்களகரமான சங்கமயுகம். சங்கம யுகத்திலேயே நீங்கள் நிச்சயமாக மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். தந்தை இரகசியங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களால் சதா காலமும் இந்த நினைவில் நிலைத்திருக்க முடியாது என்பதை பாபா அறிவார். அது அசாத்தியமானது. ஆகவே, நீங்கள் எவ்வளவு நேரம் நினைவில் நிலைத்து இருக்கிறீர்கள் எனப் பார்ப்பதற்கு உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். சரீர உணர்வு இருப்பின், எவ்வாறு நினைவு இருக்கும்? உங்கள் தலைமீது பெரும் பாவச்சுமை உள்ளது. இதனாலேயே பாபா கூறுகிறார்: நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் சட்டைப் பையில் திரிமூர்த்தியின் படத்தை வைத்திருங்கள். எவ்வாறாயினும், நீங்கள் மீண்டும் மீண்டும் மறக்கிறீர்கள். அல்ஃபாவை நினைவு செய்வதால், பீற்றா போன்றவற்றையும் நினைவு செய்வீர்கள். நீங்கள் உங்களுடன் எப்பொழுதும் உங்கள் பட்ஜ் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். உங்களுடன் புத்தங்களையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதை ஆர்வமுள்ள நல்ல மனிதர்களுக்குக் கொடுக்கலாம். நல்ல மனிதர்கள் அதனை இலவசமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கேட்பார்கள்: இதன் விலை என்ன? அவர்களிடம் கூறுங்கள்: இது ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் விரும்பிய அளவைக் கொடுங்கள். இராஜரீகம் இருக்க வேண்டும். உலக மக்களிடமிருந்து, உங்களின் சம்பிரதாயங்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாமாகவே எதையாவது கொடுப்பார்கள். பிறரின் நன்மைக்காகவே நீங்கள் இதை அனைவருக்கும் கொடுக்கிறீர்கள். சிலர் இந்த ஞானத்தைக் கற்று உங்களுக்குப் பணம் அனுப்புவார்கள். நீங்களே செலவு செய்கின்றீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: பாரதத்திற்குச் சேவை செய்வதற்காகவே எங்கள் சரீரம், மனம், செல்வத்தை நாங்கள் பயன்படுத்துகின்றோம். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற அரசாங்கத்துக்கு உதவுவதற்கு, குறைந்தபட்சம் எட்டு மணிநேரமாவது நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள். நினைவு செய்வதில் மாயை விளைவிக்கும் தடைகளையிட்டுப் பயப்படாதீர்கள்.2. இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இறை சமுதாயத்துக்கு உரியவர்களாகி, இறை வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். செயல்களைச் செய்யும் பொழுது, தந்தை ஒருவரின் நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அகநோக்கு எனும் குகையில் இருப்பதன் மூலம் ஆத்ம உணர்வு உடையவராகி, உங்களின் சரீரத்தில் இருந்து பற்றற்றவர் ஆகுவீர்களாக.பாண்டவர்களின் குகை எனக் காட்டப்படுவது, அகநோக்குக் குகையே ஆகும். எந்தளவிற்கு நீங்கள் உங்களின் சரீரத்தில் இருந்து பற்றற்று இருக்கிறீர்களோ, எந்தளவிற்கு நீங்கள் அந்தக் குகையில் இருப்பதுடன் ஆத்ம உணர்வு ரூபத்தில் ஸ்திரமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு, நீங்கள் இந்த உலகச் சூழலுக்கு அப்பாற்பட்டு இருப்பதுடன் அதன் ஆதிக்கத்திற்கும் உட்பட மாட்டீர்கள். குகையில் இருப்பதன் மூலம், நீங்கள் வெளியுலகச் சூழலில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். அதேபோல், இந்த அகநோக்கெனும் குகை, உங்களை எல்லோரிடம் இருந்தும் பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்பானவராகவும் ஆக்குகிறது. தந்தையால் நேசிக்கப்படுபவர்கள் இயல்பாகவே முற்றிலும் தனித்துவமானவர்கள் ஆகுவார்கள்.
சுலோகம்:
ஆன்மீக முயற்சியே விதையும் வசதிகள் அதன் விரிவாக்கமும் ஆகும். ஆன்மீக முயற்சியை விரிவாக்கத்திற்குள் மறைத்து விடாதீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள். அகநோக்கில் இருங்கள்.
அகநோக்கில் இருப்பதன் அடையாளம், சதா கடலின் ஆழத்தில் மூழ்கி இருப்பதுடன் உண்மை மற்றும் முதிர்ச்சியின் ரூபமாகவும் இருப்பதாகும். ஆத்ம உணர்வு ஸ்திதியின் அடையாளங்கள் ஒருவரின் முகத்தில் புலப்படும். ஒருபுறம், கடைகின்ற முகம் இருக்கும். இன்னொரு புறம், களிப்பான, அதாவது, புன்னகை செய்கின்ற முகம் காணப்படும். இந்த இரண்டு குணவியல்புகளும் முகத்தில் தென்படும். அகநோக்கில் உள்ளதோர் ஆத்மா, சதா மலர்ச்சி நிறைந்தவராகவே தென்படுவார். ஏனென்றால், அங்கே மாயையின் எதிர்ப்புகள் முடிவடைந்து இருக்கும்.