13.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த எல்லையற்ற நாடகத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் நடிகர்கள். நீங்கள் இப்பொழுது திரும்பிச் செல்கின்ற இனிய மௌன இல்லமே உங்கள் வசிப்பிடமாகும்.
கேள்வி:
நாடகத்தை மிகச்சரியாகப் புரிந்து கொண்டவர்களின் உதடுகளில் இருந்து என்ன வார்த்தைகள் வெளிவரக்கூடாது?பதில்:
“இது இவ்வாறாக இல்லாவிட்டால், இது மேலும் சிறப்பாக இருந்திருக்கும்! இது நடந்திருக்கக் கூடாது.” நாடகத்தைப் புரிந்து கொண்டவர்கள் இத்தகைய வார்த்தைகளைப் பேச மாட்டார்கள். நாடகம் தொடர்ந்து ஒரு பேன் போன்று நகர்கின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நிகழ்கின்றவை எல்லாம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதில் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை.ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கும் பொழுது, குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் சொந்த அறிமுகத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகள் அனைவரும் நீண்ட காலமாக, சரீர உணர்விலேயே நிலைத்திருந்தார்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராகி இருந்தால், உங்களுக்குத் தந்தையின் மிகச்சரியான அறிமுகம் கிடைத்திருக்கும். எனினும், நாடகத்தில் அவ்வாறாக இருக்கவில்லை. கடவுளைக் கடவுள் என்றும், தந்தை என்றும், படைப்பவர் என்றும் அவர்கள் கூறியபோதிலும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. ஒரு பெரிய கோள வடிவமான சிவனின் ரூபமும் உள்ளது. ஆனால், அவர் அதைப் போன்று பெரிய அளவானவர் அல்ல. தந்தையை மிகச்சரியாக அறிந்து கொள்ளாததால், அவர்கள் அவரை மறந்து விடுகின்றார்கள். தந்தையே படைப்பவர் என்பதால், அவர் நிச்சயமாகப் புதிய உலகைப் படைப்பார். ஆகவே, குழந்தைகளாகிய நாங்கள் நிச்சயமாக எங்கள் ஆஸ்தியான புதிய உலக இராச்சியத்தைப் பெறவே வேண்டும். “சுவர்க்கம்” என்னும் பெயர் பாரதத்திலும் மிகவும் பிரபல்யமானது. ஆனால், மக்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவர் இறக்கும்போது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். இது எப்போதாவது நிகழ்ந்ததா? எங்கள் அனைவருக்கும் சீரழிந்த புத்தியே உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்ட போதிலும், இதுவும் வரிசைக்கிரமமானதே எனக் கூறப்பட்டுள்ளது. கடவுள், இவரது பல பிறவிகளின் இறுதிப்பிறவியிலே இவரில் பிரவேசிக்கின்றார் என்பதை விளங்கப்படுத்தும் பொழுது, இது முதலாவது பிரதானமானவரையே குறிப்பிடுகின்றது. இவர் முதல் இலக்கத்தவர் ஆவார். இப்பொழுது நீங்கள், அவரின் குழந்தைகளான, பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த விடயங்கள் யாவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீண்ட காலமாகத் தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். உண்மையில், தந்தையை இனங்கண்டு கொள்வது ஒரு வினாடிக்கான விடயம். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஒருமுறை நம்பிக்கையைக் கொண்டிருந்தால், எந்த விடயத்தைப் பற்றியும் எந்த விதமான கேள்வியும் எழக்கூடாது. நீங்கள் அமைதிதாமத்தில் இருந்தபோது, தூய்மையாக இருந்தீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இந்த விடயங்களை நீங்கள் தந்தையிடம் இருந்தே கேள்விப்படுகின்றீர்கள். அவற்றை வேறு எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. நாடகத்திலுள்ள நடிகர்கள், தாங்கள் இன்ன இடத்துவாசிகள் எனக் கூறுவது போன்று, நீங்கள் எங்கே வசித்தீர்கள் என ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் ஆடைகளை மாற்றி, மேடைக்குச் செல்வார்கள். நீங்கள் இந்த இடத்துவாசிகள் அல்ல என்பதை இப்பொழுது புரிந்துகொண்டீர்கள். இது ஒரு நாடக அரங்கம். நீங்கள் இனிய மௌன இல்லம் என அழைக்கப்படுகின்ற, அசரீரி உலகவாசிகள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் பிரவேசித்து விட்டது. ஆத்மாக்கள் அனைவரும் சந்தோஷம் அற்றிருப்பதால், அங்கு செல்லவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆகவே, அவர்கள் வினவுகிறார்கள்: நாங்கள் மீண்டும் எவ்வாறு வீட்டிற்குத் திரும்பிச் செல்வோம்? வீட்டிற்குத் திரும்பச் செல்வதற்கான வழியை அறியாததனால், அவர்கள் அலைந்து திரின்றார்கள். இப்பொழுது நீங்கள் அலைந்து திரிவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உண்மையாக வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாவாகிய நான் சின்னஞ் சிறியதொரு புள்ளி. இதுவும் இயற்கையின் ஓர் அற்புதமே. அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளிகளுக்குள், அத்தகைய மிகப்பெரிய பாகங்கள் பதியப்பட்டுள்ளன. எவ்வாறு பரமாத்மாவாகிய பரமதந்தை தனது பாகத்தை நடிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் அறிந்துள்ளீர்கள். அவரே கதாநாயகர், அவரே கரன்கரவன்ஹாரும் ஆவார். இனிய குழந்தைகளாகிய நீங்கள் அமைதி தாமத்தில் இருந்து வந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஒரு புதிய ஆத்மா எங்கிருந்தோ வெளித்தோன்றி ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார் என்றில்லை. இல்லை. ஆத்மாக்கள் அனைவரும் இனிய வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து வருகின்றார்கள். அனைவருக்கும் நடிப்பதற்கான ஒரு பாகம் உண்டு. இது ஒரு நாடகம். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்றால் என்ன? இரவு பகலாக நடக்கின்ற நாடகத்திற்கு அவை ஒளி கொடுக்கின்றன. சிலர் கூறுகின்றார்கள்: சூரியதேவனுக்கு வணக்கங்கள். சந்திர தேவனுக்கு வணக்கங்கள். எனினும், சூரியனும், சந்திரனும் தேவர்கள் அல்ல. எவருக்குமே இந்த நாடகத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் சூரியனையும் சந்திரனையும் தேவர்கள் எனக் குறிப்பிட்டாலும், உண்மையில் அவைகளே முழு உலக நாடகத்திற்கும் ஒளி கொடுக்கின்றன. நாங்கள் இனிய மௌன இல்லத்தில் வசிப்பவர்கள். நாங்கள், எங்கள் பாகங்களை இங்கு நடிக்கின்றோம். இந்தச் சக்கரம் ஒரு பேன் போன்று தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. நடப்பது எல்லாம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறக்கூடாது: இது இவ்வாறாக இருந்திருக்கக் கூடாது. அது போன்று இது இருந்திருக்கலாம். இது ஒரு நாடகம். உதாரணமாக, உங்கள் அன்னை (மம்மா) உங்களை விட்டுச் செல்வார் என நீங்கள் என்றுமே நினைக்கவில்லை. நல்லது, அவர் தனது சரீரத்தை நீக்கி விட்டார். நாடகம்! இப்பொழுது அவர் தனது புதிய பாகத்தை நடிக்கின்றார். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இங்கே நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நடிகரே என்பது குழந்தைகளாகிய உங்கள் அனைவரது புத்தியிலும் உள்ளது. இது வெற்றி, தோல்விக்கான ஒரு நாடகமாகும். வெற்றி, தோல்வியுடைய இந்த நாடகம் மாயையை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்படும் போது, முழுமையாகவே தோற்றுப் போய்விடுவீர்கள். நீங்கள் மாயையை வெற்றி கொள்ளும் போது, அனைத்தையும் முற்றிலும் வெற்றி கொள்கிறீர்கள். இதனை அனைவரும் பாடினாலும், அவர்களின் புத்தியில் இந்த ஞானம் எதுவும் இருப்பதில்லை. மாயை என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். மாயையை இராவணன் எனவும் அழைக்கின்றார்கள். செல்வம் என்றால் செழிப்பு எனவும் அழைக்கிறார்கள். அதனை மாயை எனக் கூற முடியாது. இன்னாரிடம் அதிகளவு செல்வம் இருக்கிறது என மக்கள் நினைப்பதனால், அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு மாயையின் போதை உள்ளது. எனினும், மாயையின் போதை இருக்க முடியுமா? மாயையை வெற்றி கொள்ள நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆகவே, உங்களுக்கு இந்த விடயங்கள் எதைப் பற்றியும் எவ்விதச் சந்தேகமும் என்றுமே இருக்கக்கூடாது. உங்களுடைய ஸ்திதி பலவீனமடையும் பொழுதே, சந்தேகங்கள் எழுகின்றன. இப்பொழுது கடவுள் பேசுகிறார். யாருடன்? ஆத்மாக்களாகிய உங்களுடன். சிவபாபா மாத்திரமே கடவுள். அவரால் மாத்திரமே ஆத்மாக்களுடன் பேச முடியும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சரீரதாரி. எவ்வாறு அவரால் ஆத்மாக்களுடன் பேச முடியும்? சரீரதாரிகளால் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. தந்தைக்குச் சரீரம் இல்லை. ஏனைய ஒவ்வொருவரிடமும் ஒரு சரீரம் உள்ளது. அதனையே பூஜிக்கிறார்கள். அவர்களை நினைவு செய்வது இலகுவானது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சிவன் கடவுள் என அழைக்கப்படுகின்றார். அதிமேலான கடவுளுக்கு ஒரு சரீரம் இல்லை. நீஙகள் அசரீரி உலகில் இருந்தபோது, உங்களுக்குச் சரீரங்கள் இல்லை என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் மாத்திரமே அங்கே உள்ளனர். அந்த பாபாவும் ஓர் ஆத்மாவே. ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால், அவர் பரமன். அவருடைய பாகம் போற்றப்படுகிறது. அவர் ஒரு பாகத்தை நடித்து விட்டுச் சென்று விடுவதால், அவர் பூஜிக்கப்பட்டார். எனினும், படைப்பவரான, பரமாத்மாவாகிய பரமதந்தை 5000 வருடங்களுக்கு முன்னர் இங்கே வந்துள்ளார் என்பதை அறிந்தவர் எவரேனும் இல்லை. அவரே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். அவர் சக்கரங்களின் சங்கமத்தில், ஒவ்வொரு 5000 வருடங்களிலும் வருகின்றார். ஆனால் சக்கரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைத்தையும் மறந்து விட்டார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்களே கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களைச் சந்தித்து, எங்கள் ஆஸ்தியை உங்களிடம் இருந்து பெறுகின்றோம். நீங்கள் அதனை எவ்வாறு இழக்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியிலும் இருக்கின்றது. பல வகையான ஞானம் உள்ளதாயினும், கடவுள் மாத்திரமே ஞானக்கடல் என அழைக்கப்பட முடியும். விநாசம் நிச்சயமாக இடம்பெறும் என்பதை அனைவரும் அறிவார்கள். முன்னரும் விநாசம் இடம்பெற்றது, ஆனால் எவ்வாறு இடம்பெற்றது என்பதை எவருமே அறிய மாட்டார்கள். சமயநூல்களில் விநாசத்தைப் பற்றி எழுதியுள்ள விடயங்களைப் பாருங்கள்! பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் எவ்வாறு யுத்தம் இடம்பெற முடியும்? பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். பிராமணர்கள் யுத்தம் புரிவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்களே எனது அகிம்சாவாதிக் குழந்தைகள், நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள். இப்பொழுது நீங்கள் விகாரம் அற்றவர்களாக ஆகுகின்றீர்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்களே தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றவர்கள், இதில் சிரமம் என்ற கேள்வியே இல்லை. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. 84 பிறவிகளின் சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது இந்த நாடகம் ஒரு முடிவிற்கு வருகின்றது, சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. செல்வந்தர்களுக்கும் உணவோ அல்லது நீரோ கிடைக்காத அந்த நேரம் இப்பொழுது வரப்போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே மலையளவு துன்பம் என அறியப்பட்டுள்ளது. காரணம் எதுவுமின்றி இரத்தக்களரி ஏற்படும், பலர் இறப்பார்கள். ஒருவர் தவறு செய்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும். அவர்கள் என்ன தவறைச் செய்தார்கள்? அவர்கள் தந்தையை மறக்கின்ற ஒரு தவறை மாத்திரமே செய்கிறார்கள். நீங்கள், உங்கள் இராச்சியத்தைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். எனினும், ஏனைய மனிதர்கள் அனைவரும் தாங்கள் மரணிக்கப் போகின்றோம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் இறப்பார்கள். நீங்கள் தொடர்ந்தும் வாழ்வீர்கள். நீங்கள் இந்தக் கல்வியின் பலத்தினால் அமரத்துவ பூமிக்கு மாற்றப்பட உள்ளீர்கள். கல்வியே வருமானத்தின் மூலாதாரம் எனப்படுகின்றது. இதிகாசங்களின் கல்வியும் உள்ளது, அதன் மூலமும் ஒரு வருமானம் உள்ளது. எனினும், அது பக்தி மார்க்கத்தின் கல்வியாகும். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களை இலக்ஷ்மி நாராயணன் போல ஆக்குகின்றேன். இப்பொழுது நீங்கள் சுத்தமான புத்தி உடையவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அதிமேலானவராக ஆகுகின்றீர்கள் என்பதும், மறுபிறவி எடுப்பதனால் நீங்கள் படிப்படியாகக் கீழிறங்கி, புதியதில் இருந்து பழையதாக மாறுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாக, ஏணிப்படியில் இருந்து கீழிறங்க வேண்டும். உலகின் ஸ்திதியும் இப்பொழுது கீழே இறங்குகின்றது. அதன் ஸ்திதி மேலேறியதும், அது தேவர்களின் இராச்சியமாக ஆகியது. அதுவே சுவர்க்கம். இப்பொழுது இது நரகமாகும். நீங்கள் இப்பொழுது சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு மீண்டுமொரு முறை முயற்சி செய்கின்றீர்கள். “பாபா! பாபா!” எனத் தொடர்ந்தும் நீங்கள் கூறுகின்றீர்கள். “ஓ தந்தையாகிய கடவுளே” என மக்கள் அவரைக் அழைத்தாலும், அதிமேலான அவர், ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆதலால், அவருடைய குழந்தைகளான அவர்கள் ஏன் சந்தோஷம் இல்லாமல் இருக்கின்றார்கள்? அனைவரும் சந்தோஷம் இல்லாதவர்கள் ஆக வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இந்த நாடகம் சந்தோஷம், துன்பம் என்பவற்றைப் பற்றியது. வெற்றியில் சந்தோஷம் உள்ளது. தோல்வியில் துன்பம் உள்ளது. தந்தை உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தார், அதனை இராவணன் உங்களிடமிருந்து அபகரித்து விட்டான். இப்பொழுது தந்தையிடம் இருந்து நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தொடர்ந்து பெறுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை வந்துள்ளார். இப்பொழுது தந்தையை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பல பிறவிகளின் பாவச்சுமை உங்கள் தலைமீதுள்ளது. நீங்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்யவில்லை என்றும் உங்களுக்குத் தெரியும். ஒரு சாக்கு மாவினுள் ஒரு சிட்டிகை உப்பு இடுவதைப் போன்று, சொற்ப சந்தோஷமே இருக்கின்றது. அதாவது சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது எனவும் அழைக்கப்படுகின்றது. ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சத்கதியை அருள்பவர் என உங்களுக்குத் தெரியும். அந்த ஒரேயொருவரே உலகின் குருவும் ஆவார். ஒருவர் தனது இளைப்பாறும் நிலையிலேயே குருவை ஏற்றுக் கொள்கின்றார். இப்பொழுது சிறு குழந்தைகளையும் ஒரு குருவை ஏற்கச் செய்கிறார்கள். ஏனென்றால், அதன் மூலம் இளம் வயதில் இறந்தால் அவர்கள் சற்கதி அடைவார்கள். தந்தை கூறுகின்றார்: உண்மையில் எவரையும் ஒரு குரு என அழைக்க முடியாது. குரு என்பவர் சற்கதி அளிப்பவர். ஒரேயொருவர் மாத்திரமே சத்கதியை அருள்பவர். கிறிஸ்து, புத்தர் போன்றோர் குருமார்கள் அல்ல. அவர்கள் வரும்போது அனைவரும் சற்கதி பெற்றார்களா? கிறிஸ்து வந்தபோது, அவருடைய மதத்திலுள்ள ஏனைய அனைவரும் அவரைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். ஆகவே, அவர் ஏனையோரை விழச் செய்வதற்காகவே கருவி ஆகினார் என்பதால், அவரை எவ்வாறு ஒரு குரு என அழைக்க முடியும்? ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மை ஆக்குபவர் என அழைக்கப்படுகிறார். அவர் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர் ஸ்தாபனையையும் மேற்கொள்கின்றார். அவர், அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றால், பிரளயம் ஏற்படும். எனினும், பிரளயம் இடம்பெறுவதில்லை. கீதையே சமயநூல்கள் அனைத்தினதும் தாய் என்றும், சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினம் என்றும், கடவுளின் வாசகங்கள் என்றும் நினைவு கூரப்படுகின்றது. நினைவுகூரப்பட்டுள்ளது: தர்மத்திற்கு அவதூறு ஏற்படும் பொழுது, நான் வருவேன். தந்தை பாரதத்திலேயே வருகின்றார். உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்ற தந்தையை மக்கள் சர்வவியாபி என அழைக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் புதிய உலகம் முழுவதும் உங்கள் இராச்சியம் மாத்திரமே இருக்கும் என்ற சந்தோஷம் இப்பொழுது உண்டு. அந்த இராச்சியத்தை உங்களிடம் இருந்து எவருமே அபகரிக்க முடியாது. இங்கே மக்கள் ஒரு சிறு துண்டு நிலத்திற்காக ஒருவரோடு ஒருவர் அதிகளவில் சண்டை இடுகிறார்கள். நீங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியில் துள்ளி, சந்தோஷ நடனம் ஆட வேண்டும். ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதால், பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். “என்னை நினைவுசெய்யுங்கள்!” எனத் தந்தை கூறுகின்ற போதிலும், நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்! நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, எனது யோகம் துண்டிக்கப்படுகின்றது. “யோகம்” என்ற வார்த்தையை அகற்றுமாறு பாபா உங்களிடம் கூறியுள்ளார். அந்த வார்த்தை புராணங்களுக்கு உரியது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! யோகம் எனும் வார்த்தை பக்திமார்க்கத்திற்கு உரியது. நீங்கள் தந்தையிடம் இருந்து உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். நினைவு செய்யாவிட்டால், உங்கள் பாவங்கள் எப்படி அழிக்கப்படும்? நீங்கள் உங்கள் இராச்சியத்தை எப்படிப் பெறுவீர்கள்? நினைவு செய்யாமல் விட்டால்\, உங்களின் அந்தஸ்தும் குறைக்கப்பட்டு, நீங்கள் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்பதை உணரும் விவேகம் உங்களிடம் இல்லாமல் உள்ளது. உங்களிடம் அத்தகைய விவேகம் இல்லை. நீங்கள் அந்தளவிற்கு விவேகம் அற்றவர்களாகி விட்டீர்கள்! நான் ஒவ்வொரு சக்கரத்திலும் கூறுகின்றேன்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். மரணித்து வாழுங்கள், இந்த உலகிற்கு மரணித்து விடுங்கள். தந்தையை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், வெற்றிமாலையில் நீங்கள் ஒரு மணியாகவும் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானது! சிவபாபா, பிரம்மபாபாவும் அதிமேலானவர்கள். இருவருமே அதிமேலானவர்கள். அந்த ஒரேயொருவரே பரலோகத்தவர். ஆனால், இவரோ அலௌகீகமானவர். அவர் ஓர் எளிமையான ஆசிரியர். அந்த ஆசிரியர்கள் குழந்தைகளைத் தண்டிப்பார்கள். ஆனால், அந்த ஒரேயொருவர் மாத்திரம் அன்பைப் பொழிகின்றார். அவர் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்து சதோபிரதான் ஆகுங்கள். ஒரேயொரு தந்தையே தூய்மை ஆக்குபவர். அவர் குருவும் ஆவார். வேறு எவரும் ஒரு குருவாக முடியாது. புத்தர் சத்தத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு (நிர்வாணா) சென்று விட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பொய்யானவை. எவராலும் வீடு திரும்ப முடியாது. நாடகத்தில் நடிப்பதற்கு அனைவருக்கும் ஒரு பாகம் உள்ளது. நீங்கள் அத்தகைய பரந்த புத்தியைக் கொண்டிருப்பதுடன், பெருமளவு சந்தோஷத்தையும் கொண்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து இதுவரையான இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். சூத்திரர்களிடமோ அல்லது தேவர்களிடமோ இந்த ஞானம் இல்லை. இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் அவ்வாறு செய்வார்கள். புரிந்து கொள்ளாதவர்களுக்கு இது மரணம். அவர்களின் அந்தஸ்து குறைக்கப்படும். ஒரு பாடசாலையில், மாணவர்கள் கற்காது விட்டால், அவர்களின் அந்தஸ்து குறைக்கப்படும். பாபா என்றால் அல்பா, பீற்றா என்றால் இராச்சியம். மீண்டுமொரு முறை நாங்கள், எங்கள் சொந்த இராச்சியத்திற்குச் செல்கின்றோம். இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எங்களிடமிருந்து எவராலும் அபகரிக்க முடியாத, அத்தகையதொரு புதிய, உலக இராச்சியத்தைத் தந்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த மகிழ்ச்சியில் தொடர்ந்தும் துள்ளிச் சந்தோஷ நடனம் ஆடுங்கள்.2. வெற்றிமாலையின் ஒரு மணி ஆகுவதற்கு மரணித்து வாழுங்கள். அத்துடன் இப்பழைய உலகிற்கு மரணித்து விடுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சக்திவாய்ந்த ஸ்திதியின் மூலம் எல்லோருடைய தூய ஆசைகளையும் நிறைவேற்றும் மகாதானி ஆகுவீர்களாக.பிந்தி வருகின்ற ஆத்மாக்கள், சிறிதளவைப் பெறுவதிலேயே திருப்தி அடைவார்கள். ஏனென்றால், அவர்களின் பாகங்கள் சிறிதளவு தானியத்தைப் பெறுவதாகவே உள்ளன. இத்தகைய ஆத்மாக்கள் தமது பாவனாவின் (பக்தி உணர்வுகள்) பலனைப் பெறுவதற்கு, அவர்களின் எவரும் இதைத் தவற விடாமல் இருப்பதற்கு, நீங்களே இப்போது சகல சக்திகளையும் சேமிக்க வேண்டும். நீங்கள் ஒரு மகாதானி என்ற உங்களின் நிரம்பிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, மகா தானம் செய்யும் உங்களின் கடமையின் அடிப்படையிலும் உங்களின் நல்லாசிகள் என்ற ஆளியைப் போடுவதன் மூலமும் உங்களால் எந்தவோர் ஆத்மாவையும் உங்களின் பார்வையின் ஒத்துழைப்பால் அப்பால் எடுத்துச் செல்ல முடியும்.
சுலோகம்:
சதா இறை கோட்பாடுகளைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். நீங்கள் அதியுயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றும் அதி மேன்மையானவர் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
நீங்கள் சேவை செய்வதற்காக மேடைக்குச் செல்லும்போது, சேவை செய்வதற்காக அகநோக்கு மற்றும் ஆன்மீகக் குகையில் இருந்து நீண்ட காலத்தின் பின்னர் வந்துள்ள ஓர் ஆத்மா என மற்றவர்கள் உங்களை அனுபவம் செய்ய வேண்டும். எல்லையற்ற விருப்பமின்மையின் ரேகைகள் உங்களின் முகத்தில் புலப்படும். கருணைநிறைந்தவராக இருப்பதுடன்கூடவே, சக்தி ரூபத்தின் ஆன்மீக போதையும் புலப்பட வேண்டும். கருணை இருப்பதுடன் அதேயளவு ஆழ்ந்த ஆன்மீக போதையும் இருக்க வேண்டும். இத்தகைய சேவை செய்வதற்கான நேரம் இதுவே ஆகும்.