28.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, முன்னேற வேண்டுமாயின், நீங்கள் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர், உங்கள் அட்டவணையைச் சோதியுங்கள். சோதியுங்கள்: நாள் முழுவதிலும் நான் எவருக்காவது துன்பம் விளைவித்தேனா?

கேள்வி:
மகா பாக்கியசாலிக் குழந்தைகளிடம் உள்ள துணிச்சல் என்ன?

பதில்:
கணவனும் மனைவியுமாக உள்ள மகா பாக்கியசாலிக் குழந்தைகள் சகோதரர்களாகச் சேர்ந்து வாழ்கிறார்கள். தாங்கள் கணவனும் மனைவியும் என்ற விழிப்புணர்வை அவர்கள் கொண்டிருப்பதில்லை. அவர்களின் புத்தி உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது. மகா பாக்கியசாலிக் குழந்தைகளே தாங்கள் இருவரும் மாணவர்கள் என்பதையும், தாங்கள் சகோதரனும் சகோதரியும் என்பதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஓர் ஆத்மா என்று கருதும்பொழுது மாத்திரமே இந்தத் தைரியம் இருக்க முடியும்.

பாடல்:
உங்கள் இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்.

ஓம் சாந்தி.
தந்தை இவ்விடயத்தைக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: தினமும் உறங்கச் செல்வதற்கு முன்னர், நீங்கள் எவருக்கேனும் துன்பத்தை விளைவித்தீர்களா எனவும், எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தீர்கள் எனவும் உங்கள் அட்டவணையை உள்ளார்த்தமாகச் சோதித்துப் பாருங்கள். இதுவே பிரதான விடயம். பாடலிலும் கூறப்படுகிறது: உங்களுக்குள் பாருங்கள்: எந்தளவிற்கு நான் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகியுள்ளேன்? நாள் முழுவதும், நான் என்னுடைய இனிய தந்தையை எந்தளவிற்கு நினைவுசெய்தேன்? சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். ஆத்மாக்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளது: உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள்! இப்பொழுது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். எங்கே? மௌன தாமத்தினூடாகப் புதிய உலகிற்கு. இது பழைய உலகம். தந்தை வரும்பொழுது மாத்திரமே சுவர்க்க வாசல்கள் திறக்கப்பட முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். சங்கமயுகத்திற்கு வரும் சிலர், நீராவிக் கப்பலில் ஏறிய பின்னர் கீழே இறங்கி விடுகிறார்கள் என்பது ஓர் அற்புதமே. சங்கமயுகத்தில் அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்காக, நீங்கள் அக்கரைக்குச் செல்வதற்குரிய படகில் ஏறியுள்ளீர்கள். ஆகவே, பழைய கலியுக உலகிலிருந்து நீங்கள், உங்கள் இதயத்தை அகற்ற வேண்டும். நீங்கள் உங்கள் சரீரங்களினூடாக உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் பெரும் சந்தோஷத்துடன் வீடு திரும்பிச் செல்லவுள்ளோம். மனிதர்கள் முக்தி அடைவதற்காக அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் “முக்தி” அல்லது “ஜீவன்முக்தி” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இவ்வார்த்தைகளை அவர்கள் சமயநூல்களில் இருந்து கேட்டுள்ளார்கள் அன்றி, அதைக் கொடுப்பவர் யார், அவர்கள் அதை எப்பொழுது பெற முடியும் என்பனவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. உங்கள் ஆஸ்தியான முக்தியையும் ஜீவன்முக்தியையும் உங்களுக்குக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருமுறை மாத்திரம் வருவதில்லை; அவர் பல தடவைகள் வந்துள்ளார். நீங்கள் எண்ணற்ற தடவைகள் முக்தியிலிருந்து ஜீவன்முக்திக்கும், பின்னர் பந்தன வாழ்வுக்கும் சென்றுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற புரிந்துணர்வு உங்களுக்கு உள்ளது. இப்பொழுது பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் பல விடயங்களைக் கற்பிக்கின்றார். பக்தி மார்க்கத்தில், நீங்கள் கடவுளை நினைவு செய்வதுண்டு, ஆனால், உங்களுக்கு அவருடைய அறிமுகம் இருக்கவில்லை. நான் இப்பொழுது உங்களுக்கு என்னுடைய அறிமுகத்தைக் கொடுத்து, உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதற்கு, என்னை எவ்வாறு நினைவுசெய்ய வேண்டும் என்பதையும் கற்பித்துள்ளேன். உங்கள் அட்டவணையை வைத்திருப்பதால், இதுவரை நீங்கள் எவ்வளவு பாவங்களைச் செய்துள்ளீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், இதைப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளுக்குச் சேவை செய்வதில் ஆர்வம் உள்ளது. அவர்கள் ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் ஆலோசனையைப் பெற்று, பின்னர் மக்களின் வாழ்வுகளை வைரங்கள் போன்று ஆக்குவதற்கு, வெளியே சேவை செய்வதற்காகச் செல்கிறார்கள். இது ஒரு மகா புண்ணியச் செயல். இதில் செலவு என்ற கேள்விக்கே இடமில்லை. வைரம் போன்று ஆகுவதற்கு, தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நினைவுகூரப்பட்டு வரும் தேவதைகளின் அந்தப் பெயர்கள் அனைத்தும் (புக்ராஜ்பரி, சப்ஜ்பரி) உங்களையே குறிப்பிடுகின்றன. நீங்கள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் வைரங்கள் போன்று ஆகுவீர்கள். சிலர் மாணிக்கக்கல் போன்றும், ஏனையோர் புஷ்பராகம் போன்றும் ஆகுவார்கள். நவ இரத்தினங்கள் உள்ளன. தீய சகுனங்கள் இருக்கும்பொழுது, மக்கள் நவ இரத்தினங்கள் பதித்த மோதிரத்தை அணிகிறார்கள். பக்தி மார்க்கத்தில் அத்தகைய பல உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே, ஏனைய அனைத்துச் சமயங்களுக்குமான ஒரேயொரு சுலோகமே உங்களிடம் உள்ளது: மன்மனாபவ! கடவுள் ஒரேயொருவரே. மனிதனிலிருந்து தேவராக மாறுவதற்கும், முக்தியும் ஜீவன்முக்தியும் அடைவதற்கும், இந்த ஒரேயொரு முயற்சியே தேவையாகும். தந்தையை நினைவு செய்யுங்கள்! வேறு எந்தச் சிரமமும் இல்லை. உங்களால் ஏன் பாபாவை நினைவுசெய்ய முடியாமல் உள்ளது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். நாள் முழுவதும் நான் ஏன் சிறிதளவு நேரமே பாபாவை நினைவுசெய்தேன்? நான் இந்த நினைவினூடாகச் சதா ஆரோக்கியமானவராகவும் நோய்களிலிருந்து விடுப்பட்டவராகவும் ஆக முடியுமானால், நான் ஏன் ஓர் அட்டவணையை வைத்திருந்து முன்னேறக்கூடாது? பலர் இரண்டு தொடக்கம் நான்கு நாட்கள் வரை ஓர் அட்டவணையை எழுதிய பின்னர், அதை மறந்து விடுகிறார்கள். எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. அவர்களிடம் கூறுங்கள்: புதிய உலகம் சத்தியயுகம் எனவும் பழைய உலகம் கலியுகம் எனவும் அழைக்கப்படுகிறது. கலியுகம் சத்தியயுகமாக மாறவுள்ளது. அது அவ்வாறு மாறவுள்ளதால், இவை அனைத்தையும் நாங்கள் விளங்கப்படுத்துகிறோம். பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்துள்ள அதே அசரீரியான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார் எனும் உறுதியான நம்பிக்கையேனும் சில குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நீங்கள் பிராமணர்கள், அப்படித்தானே? நீங்கள் பிரம்மாகுமார்கள், குமாரிகள் என அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் என்ன? யாரிடமிருந்து நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறவிருக்கிறீர்கள்? சில பேறுகள் கிடைக்கவுள்ள பொழுது மாத்திரமே, தத்தெடுத்தல் நடைபெறுகிறது. நீங்கள் ஏன் பிரம்மாவின் குழந்தைகளான, பிரம்மாகுமார்கள், குமாரிகள் ஆகியுள்ளீர்கள்? நீங்கள் உண்மையில் இவ்வாறு ஆகியுள்ளீர்களா? அல்லது, உங்களிற் சிலர் இன்னமும் இதைச் சந்தேகிக்கிறீர்களா? சகோதரர்களாக ஒன்றாக வசிக்கின்ற கணவனும் மனைவியுமே மகா பாக்கியசாலிக் குழந்தைகள்; அவர்கள் தாங்கள் கணவனும் மனைவியும் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதில்லை. புத்தியில் நம்பிக்கை உறுதியாக இல்லாவிட்டால், கணவன் மனைவி எனும் பார்வையை மாற்றுவதற்குக் காலம் எடுக்கிறது. மகா பாக்கியசாலிக் குழந்தைகள் மிக விரைவில் புரிந்து கொள்கிறார்கள்: நாங்கள் இருவரும் மாணவர்கள் என்பதனால் நாங்கள் சகோதர, சகோதரி ஆவோம். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதும்பொழுது மாத்திரமே, உங்களிடம் இந்தத் தைரியம் இருக்க முடியும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். பின்னர், நீங்கள் பிரம்மாகுமார்களும் குமாரிகளும் ஆகும்பொழுது, சகோதர, சகோதரிகள் ஆகுகிறீர்கள். சிலர் முழுமையாகவே பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பினும், அவர்கள் புத்தி சிறிதளவு ஈர்க்கப்படுகிறது. கர்மாதீத ஸ்திதியை அடைவதற்குக் காலம் எடுக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். எந்தச் சிக்கல்களும் இருக்கக்கூடாது. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் பழைய சரீரங்களை நீக்கி விட்டு, பாபாவிடம் செல்வோம். நீண்ட காலமாக நாங்கள் எங்கள் பாகங்களை நடித்து வருகிறோம். சக்கரம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. இவ்விதமாக உங்களுக்குள் பேசுங்கள். நீங்கள் உங்களுடன் அதிகமாகப் பேசுகையில், அதிகளவு முகமலர்ச்சியாக இருப்பதுடன், எந்தளவிற்கு இலக்ஷ்மியை அல்லது நாராயணனைத் திருமணம் செய்வதற்குத் தகுதியானவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும் பார்ப்பதற்கு, உங்கள் நடத்தையை உங்களால் சோதிக்க முடியும். குறுகிய காலத்திற்குள், நாங்கள் இந்தப் பழைய சரீரங்களை விட்டு நீங்க வேண்டும் என்பதைப் புத்தி புரிந்துகொள்கிறது. நீங்கள் நடிகர்கள். உங்களை நடிகர்களாகக் கருதுங்கள். முன்னர், நீங்கள் உங்களை அவ்வாறானவர்களாகக் கருதவில்லை. இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளதால், உங்களுக்குள் பெரும் சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் இந்தப் பழைய உலகின் மீது ஆர்வமின்மையும் விருப்பமின்மையும்; கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற சந்நியாசிகளும், இராஜயோகிகளும் ஆவீர்கள். உங்கள் பழைய சரீரங்களும் உங்கள் புத்தியால் துறக்கப்பட வேண்டும். நான் இந்தச் சரீரத்துடன் என்னுடைய புத்தியில் பற்று வைக்கக்கூடாது என ஆத்மா புரிந்து கொள்கிறார். நீங்கள் உங்கள் புத்தியிலிருந்து பழைய சரீரங்களையும் பழைய உலகையும் அகற்றி உள்ளீர்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையைச் சந்திப்பதற்கு வீடு திரும்பிச் செல்கிறோம். நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யும் பொழுது மாத்திரமே, அது இடம்பெற முடியும். நீங்கள் வேறு எவரையாவது நினைவு செய்தால், நிச்சயமாக அவர்களின் அந்த நினைவு இருக்கும். பின்னர், தண்டனை அனுபவம் செய்யப்பட்டு, உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். தாங்கள் நிச்சயமாக ஒரு புலமைப்பரிசிலைக் கோருவோம் எனச் சிறந்த மாணவர்கள் சத்தியம் செய்கிறார்கள். எனவே, இங்கும், தந்தையிடம் இருந்து உங்கள் இராச்சியமாகிய முழுப் பாக்கியத்தையும் பெறுவதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் நடத்தையும் அதற்கேற்ப இருக்க வேண்டும். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பாய்ந்து செல்லுங்கள். ஒவ்வொரு நாளும் மாலைவேளையில் உங்கள் ஸ்திதியை நீங்கள் சோதிக்கும் பொழுது மாத்திரமே, அது நடைபெற முடியும். பாபா அனைவருடைய செய்திகளையும் பெறுகிறார். பாபாவினால் ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ள முடியும், சிலருக்கு பாபாவும் கூறுவார்: உங்கள் முகத்தில் இருந்து, நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனாக ஆகுவீர்கள் என்பது புலப்படவில்லை. உங்கள் நடத்தையையும், நீங்கள் எதை உண்கிறீர்கள், எதை அருந்துகிறீர்கள் என்பதையும் பாருங்கள். நீங்கள் எந்தச் சேவையையும் செய்வதில்லை. நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? பின்னர், நீங்கள் எதையாவது செய்து பாபாவிற்குக் காண்பிக்க வேண்டும் என உங்கள் இதயத்தில் உணர்வீர்கள். உங்கள் பாக்கியத்தை மேன்மை ஆக்குவதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் சுயேச்சையாகக் கற்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாமல் விட்டால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் இன்று சித்தி அடையாது விட்டால், கல்பம் கல்பமாகச் சித்தியடைய முடியாது. நீங்கள் என்ன அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்பதற்கான காட்சிகளையும் காண்பீர்கள். உங்கள் (எதிர்கால) அந்தஸ்திற்கான காட்சிகளையும் நீங்கள் காண்பீர்கள். ஆரம்பத்தில், சிலர் இதற்கான காட்சிகளைக் கண்டார்கள். எவ்வாறாயினும், பின்னர் பாபா அவர்கள் அதைப் பற்றிப் பேசுவதைத் தடைசெய்தார். இறுதியில், நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என்பனவற்றை அறிந்து கொள்வீர்கள். அந்த நேரத்தில், அதைப் பற்றி உங்களால் எதையும் செய்ய இயலாதிருக்கும். அதுவே கல்பம் கல்பமாக உங்கள் அந்தஸ்தாக ஆகும். உங்களால் இரட்டைக் கிரீடத்தையோ அல்லது இரட்டை இராச்சிய பாக்கியத்தையோ கோர இயலாதிருக்கும். முயற்சி செய்வதற்கு இன்னமும் அதிகளவு (நேர) இடைவெளி உள்ளது. திரேதா யுகத்தின் இறுதிவரைக்குமான 16,108 மணிகளின் பெரிய மாலை உருவாக்கப்பட வேண்டும். மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான முயற்சியைச் செய்வதற்கே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு குறைந்த அந்தஸ்தைப் பெறும் காட்சி உங்களுக்குக் கிடைக்கும் பொழுது, நீங்கள் உங்களை வெறுப்பீர்கள். நீங்கள் எந்த முயற்சியும் செய்யாததால், தலை குனிய நேரிடும். உங்களுக்குப் பல தடவைகள் ஓர் அட்டவணையை வைத்திருக்கும்படியும், இதையும் அதையும் செய்யும்படியும் பாபா கூறியுள்ளார். இதனாலேயே இங்கே வருகின்ற குழந்தைகள் அனைவரினதும் புகைப்படத்தை எடுக்க வேண்டும் என பாபா கூறுவது வழக்கம். அது ஒரு குழுவாகவுள்ள புகைப்படமாகவும் இருக்கலாம். இங்கு நீங்கள் பல குழுக்களை அழைத்து வருகிறீர்கள், இல்லையா? நீங்கள் திகதி, படச்சுருளின் நெகடிவ்கள் போன்றவை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு வைத்திருக்கலாம். பின்னர் பாபாவினால் யார் வீழ்ந்து விட்டார்கள் என உங்களுக்குக் காண்பிக்க முடியும். பாபா அனைவருடைய செய்திகளையும் பெறுகிறார். ஆகவே, அவரால் உங்களுக்கு அனைத்தையும் கூற முடியும். மாயை அவர்களில் பலரை இழுத்து விட்டாள். அவர்கள் இப்பொழுது முழுமையாகவே முடிவடைந்து விட்டனர். பல புதல்விகளும் வீழ்கிறார்கள். அவர்கள் முழுமையாகச் சீரழிந்த நிலையை அடைந்து விட்டார்கள், கேட்கவும் வேண்டாம்! இதனாலேயே பாபா கூறுகிறார்: குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்! மாயை ஏதோவொரு வடிவத்தை எடுத்து உங்களைப் பற்றிப் பிடிக்கலாம். எவருடைய பெயரையும் ரூபத்தையும் பார்க்க வேண்டாம். உங்கள் கண்களால் நீங்கள் இவரைப் பார்த்த பொழுதிலும், உங்கள் புத்தியில் ஒரேயொரு தந்தையின் நினைவே இருக்க வேண்டும். நீங்கள் தந்தையை மாத்திரமே பார்த்து, அவரை மாத்திரமே நினைவுசெய்யும் வகையில், உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண் கொடுக்கப்பட்டுள்ளது. சரீர உணர்வைத் தொடர்ந்தும் துறந்திடுங்கள். நீங்கள் எவருடனும் பேசும்பொழுது, உங்கள் கண்களைத் தாழ்த்தியவாறு பேச வேண்டும் என்றில்லை. அந்தளவு பலவீனமாக இருக்காதீர்கள். அனைத்தையும் பார்க்கும் பொழுதும், உங்கள் புத்தியின் யோகம் உங்கள் அன்பிற்கினியவருடனேயே இணைந்திருக்க வேண்டும். இவ்வுலகைப் பார்க்கும் பொழுது, அது ஒரு மயான பூமியாக மாறவுள்ளது என்பதை நீங்கள் உள்ளாரப் புரிந்து கொள்ள வேண்டும். அதனுடன் நீங்கள் ஏன் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும்? உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதைக் கிரகித்து, அதை நடைமுறைப்படுத்துங்கள். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்தும் பொழுது, “பாபா, பாபா” என்னும் வார்த்தைகள் உங்கள் உதடுகளின் மூலம் ஆயிரம் தடவைகள் வெளிப்பட வேண்டும். நீங்கள் பாபாவை நினைவுசெய்வதால், அதிகளவிற்கு நன்மை அடைகிறீர்கள். சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டுவிடும். சிவபாபாவை நினைவு செய்வதால், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக ஆகுவீர்கள். பாபா கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இதை மறக்க வேண்டாம்! “மன்மனாபவ!” என்னும் பாபாவின் வழிகாட்டலை நீங்கள் பெற்றுள்ளீர்கள். தந்தை கூறியுள்ளார்: தொடர்ந்தும் உங்களுக்குள் “பாபா” என்னும் வார்த்தையை மிகவும் நன்றாக அரையுங்கள். நாள் முழுவதும் சதா “பாபா, பாபா” என்று மீண்டும் மீண்டும் கூறுங்கள். வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டாம். இதுவே பிரதானமான, முதலாவது விடயமாகும். முதலில் தந்தையைப் புரிந்து கொள்ளுங்கள். இதில் மாத்திரமே நன்மை இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானது. கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதில், குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் ஆர்வம் இருக்க வேண்டும். உங்களால் குறிப்பிட்ட ஒன்றை விளங்கப்படுத்த முடியாதிருப்பதை உணர்ந்தால், நிலையத்தில் உள்ள சிரேஷ்ட சகோதரியை அழைப்பதாக நீங்கள் அவர்களிடம் கூறலாம். ஏனெனில் இதுவும் ஒரு பாடசாலையே. சிலர் அதிகமாகக் கற்கின்றார்கள், சிலர் குறைவாகக் கற்கிறார்கள். இதைக் கூறுவதில், நீங்கள் சரீர உணர்விற்கு வரக்கூடாது. உங்கள் நிலையம் பெரிதாயின், ஒரு கண்காட்சியை நடத்துங்கள். அதில் “சுவர்க்க வாசல்” என்னும் படத்தைப் போடுங்கள், சுவர்க்க வாசல் இப்பொழுது திறக்கப்படுகிறது. இடம்பெறவுள்ள யுத்தத்திற்கு முன்னர், உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். மக்கள் தினமும் ஆலயத்திற்குச் செல்வதைப் போலவே, இங்கும், உங்கள் பாடசாலை உள்ளது. உங்களிடம் படங்கள் உள்ளன. ஆகவே, அவை போடப்பட்டால், உங்களுக்கு விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். எவ்வாறு உங்கள் கீதா பாடசாலையை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். அங்கு ஏதோவோர் ஆடம்பரம் இருக்கும்பொழுது, மக்கள் வருவார்கள். வைகுந்தத்திற்கான பாதையே ஒரு விநாடியில் புரிந்து கொள்ளக்கூடிய பாதை ஆகும். தந்தை கூறுகிறார்: தமோபிரதான் மனிதர்களால் வைகுந்தம் செல்ல முடியாது. புதிய உலகிற்குச் செல்வதற்கு, சதோபிரதான் ஆகுங்கள். அதில் செலவு கிடையாது. ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்றவற்றுக்குச் செல்வதற்கான தேவையும் இல்லை. நினைவில் நிலைத்திருப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாகி, நேரடியாகவே உங்கள் இனிய வீட்டிற்குச் செல்வீர்கள். நீங்கள் இவ்வாறாகவே தூய்மை அற்றதிலிருந்து தூய்மை ஆகுவீர்கள் என நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். சக்கரத்தின் படத்தில் ஒரு பெரிய வாசல் இருக்க வேண்டும். எவ்வாறு சுவர்க்க வாசல் திறக்கப்படுகின்றது என்பது மிகவும் தெளிவாக்கப்பட வேண்டும். நரக வாசல்கள் மூடப்படவுள்ளன. சுவர்க்கத்தில் நரகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை. மக்கள் கிருஷ்ணரை அதிகளவு நினைவுசெய்தாலும் அவர் எப்பொழுது வருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது; அவர்களுக்குத் தந்தையையும் தெரியாது. கடவுள் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் இந்தளவையேனும் நினைவுசெய்தால், அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் இறை தந்தையின் மாணவர்கள் என்னும் சந்தோஷம், உங்களுக்குள் இருக்க வேண்டும். நீங்கள் ஏன் இதை மறந்துவிடுகிறீர்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாள் முழுவதும் உங்கள் உதடுகளிலிருந்து “பாபா, பாபா” எனும் வார்த்தைகள் வெளிப்பட வேண்டும். கண்காட்சிகளில் விளங்கப்படுத்தும் பொழுது, “பாபா, பாபா” என்பது உங்கள் உதடுகளில் இருந்து குறைந்தபட்சம் ஆயிரம் தடவைகளாவது வெளிப்பட வேண்டும்.

2. உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் அனைத்தையும் பார்க்கும்பொழுது, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். ஏனையோருடன் பேசும்பொழுது, உங்கள் மூன்றாவது கண்ணைப் பயன்படுத்தி, ஒவ்வொருவரையும், அத்துடன் ஆத்மாக்களின் தந்தையையும், ஆத்மாக்கள் எனப் பார்ப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் விலைமதிப்பற்ற முறையில் பயன்படுத்தும் விலைமதிப்பற்ற இரத்தினம் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் மகத்தான பெறுமதி உடையது. எப்படி நீங்கள் ஒன்றுக்குப் பதிலாக நூறாயிரத்தைப் பெறுகிறீர்களோ, அப்படியே, ஒரு விநாடியேனும் வீணாக்கப்பட்டால், நூறாயிரம் வீணாக்கப்படும். எனவே, இந்தளவு கவனம் செலுத்தி, கவனயீனம் அனைத்தையும் முடித்துவிடுங்கள். தற்சமயம், எதையும் கணக்குவழக்குப் பார்க்க எவரும் இல்லை. ஆனால் சிறிது காலத்தின் பின்னர், வருந்துகை ஏற்படும். ஏனென்றால், இந்த நேரத்திற்கு அதிக பெறுமதி உள்ளது. ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் விலைமதிப்பற்ற முறையில் பயன்படுத்துபவர்கள், விலைமதிப்பற்ற இரத்தினங்கள் ஆகுவார்கள்.

சுலோகம்:
சதா யோகியுக்தாக இருப்பவர்கள், ஒத்துழைப்பைப் பெறுவதை அனுபவம் செய்வதுடன் வெற்றி இரத்தினங்கள் ஆகுகிறார்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். நீங்கள் ஆத்மா என்ற வார்த்தையை அறியும்போது, ஆன்மீகத்துடன் கூடவே, உங்களிடம் நல்லாசிகளும் இருக்கும். அத்துடன் உங்களின் பார்வையும் தூயதாகும். யாராவது உங்களை அவமதித்தாலும் சதா அந்த ஆத்மா ஒரு தமோகுணி பாகத்தை நடிப்பதை உணர்ந்தவராக இருங்கள். அப்போது நீங்கள் அந்த ஆத்மாவை வெறுக்க மாட்டீர்கள். ஆனால் அந்த ஆத்மாவிற்காக உங்களால் நல்லாசிகளைக் கொண்டிருக்க முடியும்.