29.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய தற்போதைய பிறவியானது அதி பெறுமதியான பிறவியாகும். இந்தப் பிறவியிலேயே நீங்;கள் தூய்மையாகி, சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.

கேள்வி:
தம்மைக் கடவுளின் குழந்தைகள் என அழைப்பவர்கள் கிரகிக்கின்ற பிரதான தெய்வீகக் குணம் என்ன?

பதில்:
அவர்கள் ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போல் வாழ்வார்கள். அவர்கள் ஒருபோதும் உப்புநீர் போல் ஆக மாட்டார்கள். சரீர உணர்வு உடையவர்களே பிழையான விடயங்களைப் பேசுவதுடன், தொடர்ந்தும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய பழக்கங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இங்கே, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, உங்கள் கர்மாதீத் ஸ்திதியை அடைய வேண்டும்.

ஓம் சாந்தி.
தந்தை முதலில் குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகிறார்: ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்களாக!உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். கீதை போன்றவற்றில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்தச் சமயநூல்கள் அனைத்துமே பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. தந்தை கூறுகின்றார்: நானே ஞானக் கடல். நான் குழந்தைகளாகிய உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுகின்றேன். நான் எந்த ஞானத்தைப் பேசுகின்றேன்? நான் உலக ஆரம்பம், மத்தி, இறுதியின், அதாவது, இந்த நாடகத்தின் ஞானத்தையே பேசுகின்றேன். இது வரலாற்றினதும், புவியியலினதும் கல்வியாகும். பக்தி மார்க்கத்தில் எவருமே வரலாற்றையும், புவியியல் கல்வியையும் கற்பதில்லை. அதனைப் பற்றி அவர்கள் குறிப்பிடுவதும் இல்லை. சாதுக்களும் புனிதர்களும் அமர்ந்திருந்து சமயநூல்களைக் கற்கிறார்கள். தந்தை உங்களோடு இந்த ஞானத்தைப் பேசுவதற்கு முன்னர், எந்தச் சமயநூல்களையும் கற்பதில்லை. அவர் இந்த ஞானத்தைக் கொண்டே உங்களைச் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்கே இங்கே வருகிறீர்கள். நீங்களும் மனிதர்கள், அவர்களும் மனிதர்களே. மக்கள் தந்தையை அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! தேவர்கள் தூய்மையானவர்கள் என்பதும், அவர்களின் (அவர்களது விக்கிரங்களின்) முன்னால் தலைவணங்கி நிற்கின்ற ஏனைய மனிதர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர்கள் தம்மைத் தூய்மை அற்றவர்கள் என்றும், தேவர்களைத் தூய்மையானவர்கள் என்றும் கருதுகிறார்கள். ஆனால் எவ்வாறு தேவர்கள் தூய்மை ஆகினார்கள்? அவர்களைத் தூய்மை ஆக்கியது யார்? எந்த மனிதருக்கும் இது தெரியாது. ஆகையால், தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். சரீர உணர்வைக் கொண்டிருக்காதீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், ஒவ்வோர் ஆத்மாவிலும் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக்கள் தமது நல்ல, தீய சம்ஸ்காரங்களைத் தம்முடன் எடுத்துச் செல்கிறார்கள். ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வுடன் இருங்கள்! எவருக்குமே தம்மைப் (ஆத்மா) பற்றித் தெரியாது. இருளான பாதை, இராவண இராச்சியம் ஆரம்பமாகும் போதே ஆரம்பம் ஆகின்றது. அனைவருமே சரீர உணர்வு உடையவர்கள் ஆகின்றார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் யாரிடம் வந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இவரிடம் வரவில்லை. நான் இவருக்குள் பிரவேசித்திருக்கின்றேன். இது இவரின் பல பிறவிகளில் இறுதியான தூய்மையற்ற பிறவியாகும். எவ்வகையான பல பிறவிகள்? அரைக் கல்பத்திற்குத் தூய பிறவிகளும், அரைக் கல்பத்திற்குத் தூய்மையற்ற பிறவிகளும் உள்ளன என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இவரும் தூய்மையற்றவரே. பிரம்மா தன்னைத் தேவன் என்றோ, கடவுள் என்றோ அழைப்பதில்லை. பிரஜாபிதா பிரம்மா ஒரு தேவர் என மக்கள் நம்புகிறார்கள். ஆகையாலேயே அவர்கள் கூறுகிறார்கள்: பிரம்ம தேவனுக்கு வந்தனம். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: தூய்மை அற்றிருந்த பிரம்மா, அவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் தூய்மையாகி, பின்னர் ஒரு தேவர் ஆகுகின்றார். நீங்கள் பிரம்மாகுமாரும் பிரம்மாகுமாரிகளும் ஆவீர்கள். நீங்களும் பிராமணர்கள், பிரம்மாவும் ஒரு பிராமணரே. அவரைத் தேவர் என அழைப்பது யார்? பிரம்மா ஒரு பிராமணர் என்றே அழைக்கப்படுகின்றார், ஒரு தேவர் என்றல்ல. இந்த பிரம்மா தூய்மை ஆகும்போது, இவர் விஷ்ணு அதாவது, இலக்ஷ்மி நாராயணன் ஆகும்வரையில் இவரைத் தேவர் என்று அழைக்க முடியாது. நீங்கள் பிராமணர்கள். நான் முதலில் உங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆக்குகின்றேன். அதன் பின்னர் உங்களைப் பிராமணர்களில் இருந்து தேவர்கள் ஆக்குகின்றேன். தற்போதைய உங்களுடைய இந்தப் பிறவியே அதி பெறுமதியானது. கர்ம வேதனை இருந்தபோதிலும், தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையான என்னைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள்! நீங்கள் பயிற்சி செய்யும்போது மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிய முடியும். உங்களை ஒரு சரீரதாரி என நீங்கள் கருதுவதால் உங்கள் பாவங்கள் அழிவதில்லை. ஆத்மாக்கள் பிராமணர்கள் அல்ல. அவர்களுக்கு சரீரம் இருக்கும்போதே, பிராமணர்களாகவும் தேவர்களாகவும் பின்னர் சூத்திரர் போன்றோராகவும் ஆகுகிறார்கள். தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி தேவை. இது இலகுயோகம் என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: இந்த யோகம் மிக இலகுவானது. உங்களில் சிலர் இதனை மிகக் கடினமாக அனுபவம் செய்கிறீர்கள். சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதால், நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறக்கிறீர்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்குக் காலம் எடுக்கின்றது. சதா தந்தையின் நினைவில் நிலைத்திருப்பது இப்போது சாத்தியம் அல்ல, இல்லை. நீங்கள் கர்மாதீத் ஸ்திதியை அடைந்த பின்னர், தற்போதைய உங்களது சரீரத்தில் உங்களால் நீடித்திருக்க முடியாது. ஆத்மாக்களாக நீங்கள் முழுமையாகத் தூய்மை ஆகும்போதே, நீங்கள் இலேசாகி, உடனடியாகவே சரீரத்தை விட்டு நீங்கிச் செல்வீர்கள். தூய ஆத்மா தூய்மையற்ற சரீரத்தில் நிலைத்திருக்க முடியாது. இந்த தாதா அக்கரையை அடைந்துவிட்டார் என்று அர்த்தமல்ல. அவரும் கூறுகின்றார்: நினைவு செய்வதற்கு அதிகளவு முயற்சி தேவை. சரீர உணர்வு உடையவர் ஆகுவதாலேயே நீங்கள் தொடர்ந்தும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, பிழையான வார்த்தைகளைப் பேசுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். அதனால், ஆத்மாக்களுக்கு எதுவும் நடக்க முடியாது. சரீர உணர்வு உடையவர் ஆகுவதாலேயே குழப்பம் ஏற்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். தேவர்கள் பாலும் சீனியும் போல் சேர்ந்து வாழ்வதைப் போல், நீங்களும் ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போன்று சேர்ந்து வாழ வேண்டும். எப்பொழுதுமே உப்பு நீர் போல் ஆகாதீர்கள். சரீர உணர்வுடைய மனிதர்கள் பிழையான விடயங்களைக் கூறி, தொடர்ந்தும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய பழக்கங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இங்கே, நீங்கள் தேவர்கள் ஆகுவதற்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். உங்கள் கர்மாதீத் ஸ்திதியை நீங்கள் அடைய வேண்டும். உங்கள் சரீரமும் இவ்வுலகமும் பழையதும் தமோபிரதான் என்பதும் உங்களுக்குப் புரிகிறது. பழைய விடயங்களிலும் பழைய உறவுகளிலும் ஆர்வமின்மையைக் கொண்டிருங்கள். சரீர உணர்வின் சகல விடயங்களையும் துறவுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதித் தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிந்துவிடும். பல குழந்தைகள் நினைவில் இருப்பதில் தோல்வி அடைகின்றார்கள். அவர்கள் இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவதில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைவு செய்வதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இது மிக முக்கியமான சோதனை. அரைக்கல்பத்திற்குப் பக்தர்களாக இருந்தவர்களாலேயே இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். தாமதமாகிப் பக்தி மார்க்கத்தி;ற்கு வந்தவர்களால் அந்தளவிற்குப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை இந்தச் சரீரத்தில் பிரவேசித்துக் கூறுகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். நாடகத்தில் நான் ஒருமுறை மாத்திரமே எனது பாகத்தை நடிக்க வருகின்றேன். இது அதே சங்கமயுகமாகும். இந்த யுத்தம் உங்கள் முன்னாலேயே இருக்கின்றது. இந்த நாடகம் 5000 வருடங்களுக்கு உரியது. 40000 வருடத்திற்கான சக்கரம் இன்னமும் இருக்குமாயின் என்ன நடக்கும்? கடவுளே வந்தாலும், சமயநூல்களின் பாதையைத் தாம் துறக்க மாட்டோம் என அவர்கள் கூறுகிறார்கள். 40000 வருடங்களின் பின்னர் எந்தக் கடவுள் வருவார் என்பதுமே அவர்களுக்குத் தெரியாது. சிலர் கிருஷ்ண பகவான் வருவார் என நம்புகிறார்கள். நீங்கள் முன்னேறிச் செல்கையில், உங்கள் பெயர் போற்றப்படும். எவ்வாறாயினும், நீங்கள் அதற்கேற்ற ஸ்திதியையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒருவரோடு ஒருவர் அன்போடு வாழ வேண்டும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். நீங்கள் கடவுளின் உதவியாளர் என நினைவு கூரப்படுகிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் தூய்மையற்ற பாரதத்தைத் தூய்மை ஆக்குகின்ற பாபாவின் உதவியாளர்கள் ஆவோம். பாபா, நாங்கள் உங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், ஒவ்வொரு கல்பத்திலும் ஆத்மஉணர்வு உடையவர்கள் ஆகி, யோக சக்தியினால் எங்கள் பாவத்தை முடிக்கின்றோம். யோகசக்தி என்றால் மௌன சக்தியாகும். மௌன சக்திக்கும் விஞ்ஞான சக்திக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உள்ளது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில், பல காட்சிகளைக் காண்பீர்கள். பல குழந்தைகள் ஆரம்பத்தில் காட்சிகளைக் கண்டார்கள், அவர்கள் அப்பாகங்களை நடித்தார்கள். இன்று, அவர்கள் இங்கே இல்லை. மாயை அவர்களைத் தின்று விட்டாள். நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்காது விட்டால், மாயை உங்களையும் தின்று விடுவாள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருப்பதால், ஒழுங்கு முறையுடன் கற்க வேண்டும். இல்லாவிடின், நீங்கள் மிகவும் தாழ்வான அந்தஸ்தையே பெறுவீர்கள், அத்துடன் அதிகளவு தண்டனையையும் பெறுவீர்கள். அவர்கள் பாடுகிறார்கள்: நான் பல பிறவிகளுக்குப் பாவியாகவே இருந்து விட்டேன். இராவண இராச்சியம் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. ஆகையால், அங்கு எவ்வாறு எந்த விகாரத்தைப் பற்றிய பேச்சுக்கும் இடமிருக்க முடியும்? அது முற்றிலும் விகாரமற்ற இராச்சியம். அது இராம இராச்சியம், இது இராவண இராச்சியம். இந்த நேரத்தில் அனைவரும் தமோபிரதான் ஆவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய ஸ்திதியைச் சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களிடமே கேளுங்கள்: நான் எந்தளவிற்குத் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றேன்? நான் எந்தளவிற்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்திருக்கின்றேன்? உங்களுக்குள் எந்தக் குறைபாடும் இல்லை என்பதைச் சோதித்துப் பார்ப்பதே பிரதான விடயம். எனது உணவும் பானமும் எப்படிப்பட்டதாக இருந்தன? நான் பயனற்ற விடயங்களைப் பற்றிப் பேசுகின்றேனா? நான் நாள் முழுவதும் அநாவசியமாகப் பொய் பேசுகிறேனா? உங்கள் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் சிலவேளைகளில் பொய் பேச நேரிடலாம். மனிதர்கள் தானம் ஒன்றைச் செய்யும்போது, தமது பாவங்கள் அழியும் என நம்புகிறார்கள். ஒருவர் நல்ல செயல்களைச் செய்யும்போது, அவற்றிற்கான பலனைப் பெறுகின்றார். ஒருவர் ஒரு வைத்தியசாலையைத் திறக்கும்போது, அடுத்த பிறவியில் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார். ஒருவர் ஒரு கல்லூரியைக் கட்டும்போது, அவரால் நன்றாகக் கற்க முடியும். ஆனால் எப்படி அவரது பாவத்திற்கான பிராயச்சித்தத்தைச் செய்ய முடியும்? அதற்காகவே அவர்கள் கங்கைக்குச் சென்று நீராடுகிறார்கள். ஒருவர் பணத்தைத் தானமாக வழங்கும்போது, அதற்கான பிரதிபலன் அவருக்கு அடுத்த பிறவியில் கிடைக்கும். ஆனால் அதனால் அவரது பாவங்கள் அழியும் என்ற கேள்விக்கே இடமில்லை. அது செல்வத்தின் கொடுக்கல் வாங்கல் மட்டுமே. அது கடவுளின் பெயரால் கொடுக்கப்பட்டது, அதற்காக, கடவுள் தற்காலிக வெகுமதியைக் கொடுக்கின்றார். இங்கே, நீங்கள் தூய்மையாக வேண்டும். தூய்மை ஆகுவதற்குத் தந்தையை நினைவு செய்வதைத் தவிர்ந்த வேறு எந்த வழியும் இல்லை. தூய்மையானவர்கள் தூய்மையற்ற உலகில் இருக்க முடியாது. மக்கள் கடவுளின் பெயரில் மறைமுகமாகத் தானம் கொடுக்கின்றார்கள். கடவுள் கூறுகிறார்: நான் இப்பொழுது உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக நேரடியாக உங்களிடம் வந்திருக்கின்றேன். நானே அருள்பவர் ஆவேன். நீங்கள் எனக்குக் கொடுத்தவற்றிற்குப் பிரதிபலனைக் கொடுக்கின்றேன். நான் எனக்காக எதனையும் வைத்துக் கொள்வதில்லை. இந்தக் கட்டடங்கள் போன்றவை குழந்தைகளாகிய உங்களுக்காகக் கட்டப்பட்டவை. சந்நியாசிகள் தமக்காகப் பெரிய மாளிகைகள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். இங்கே, சிவபாபா தனக்காக எதனையுமே கட்டுவதில்லை. அவர் கூறுகிறார்: உங்கள் கொடுக்கல் வாங்கல் நேரடியானது என்பதால், நான் புதிய உலகில் 21 பிறவிகளுக்கு அதற்கான பிரதிபலனைக் கொடுக்கின்றேன். நீங்கள் கொடுக்கின்ற பணம் உங்களுக்காகவே பயன்படுகின்றது. நான் பக்திமார்க்கத்திலும் அருள்பவரே, இப்பொழுதும் அருள்பவரே. அது மறைமுகமானது, ஆனால் இது நேரடியானது. பாபா கூறுகின்றார்: உங்களிடம் உள்ள பணத்தை, ஒரு நிலையம் ஆரம்பிப்பதற்குப் பயன்படுத்திப் பிறருக்கு நன்மை செய்யுங்கள். நானும் நிலையங்களை ஆரம்பிக்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் கொடுக்கிறீர்கள், குழந்தைகளாகிய உங்களுக்கே நான் உதவுகின்றேன். நான் என்னுடன் பணத்தை எடுத்து வருவதில்லை. நான் வந்து இவரின் சரீரத்திற்குள் பிரவேசிக்கின்றேன். இவரினூடாகவே எனது பணிகளை நான் நிறைவேற்றுகின்றேன். நான் சுவர்க்கத்திற்குச் செல்லப் போவதில்லை. இவை அனைத்தும் உங்களுக்கானது. நான் அபோக்தா (எதனையும் அனுபவம் செய்வதில் இருந்து விடுபட்டவர்) நான் எதனையும் எடுப்பதும் இல்லை, “எனது காலில் விழுங்கள்!” எனக் கூறுவதும் இல்லை. நானே குழந்தைகளாகிய உங்களுடைய அதி கீழ்ப்படிவான சேவகர். அவரே உங்கள் தாயும் தந்தையும் நண்பரும் அனைத்தும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் அசரீரி ஆவார். ஒரு குருவை நீங்கள் அவரே உங்கள் தாயும் தந்தையும் எனக் கூறமாட்டீர்கள். ஒரு குருவானவர் குரு என்றே அழைக்கப்படுகின்றார். ஓர் ஆசிரியர், ஆசிரியர் என்றே அழைக்கப்படுகின்றார். ஆனால் நீங்கள் அவரைத் தாயும் தந்தையும் என அழைக்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் ஒருமுறையே வருகின்றேன். நீங்கள் சிவஜெயந்தியை 12 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாடுகிறீர்கள். ஆனால் எப்பொழுது சிவபாபா வருகின்றார், அவர் வரும்போது என்ன செய்கிறார்? எவருக்குமே தெரியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் தொழில்களையும் அவர்கள் அறிய மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் சிவபாபாவை அந்த உருவத்தின் உச்சியில் இருந்து அகற்றி விட்டார்கள். சிவபாபா கரன்கரவன்ஹார். அவர் பிரம்மாவினூடாக செயற்படுகின்றார். பாபா எவ்வாறு இவரின் சரீரத்திற்குள் பிரவேசித்து, நடைமுறை ரீதியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்குக் காட்டுகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே இவரிடம் கூறுகின்றார்: நீங்களும் இவ்வாறே செய்ய வேண்டும். முதலில், நன்றாகப் படியுங்கள்! தந்தையை நினைவுசெய்து தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்! அந்த ஆத்மா கூறுவதைப் போன்றே, இவரும் கூறுகின்றார்: நானும் பாபாவை நினைவு செய்கின்றேன். பாபாவே என்னோடு இருப்பதைப் போன்றுள்ளது. நீங்கள் புதிய உலகிற்கு அதிபதியாகப் போகிறீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஆகையால், உங்கள் நடத்தையுடன் உங்கள் உணவும் பானமும் மாற வேண்டும். நீங்கள் விகாரங்களைத் துறக்க வேண்டும். இங்கேயே நீங்கள் சீராக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சரீரத்தை நீங்கிச் செல்லும்போது நீங்கள் எந்தளவிற்குச் சீராகி இருக்கிறீர்கள் என்பதற்கேற்ப, மிகவும் மேன்மையான குடும்பத்தில் பிறப்பு எடுப்பீர்கள். குடும்பங்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளன. இங்கும், சிலர் மிக நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு ஐந்து சகோதரர்கள் ஒன்றாக வாழ்ந்தபோதிலும், அவர்கள் சண்டை சச்சரவு செய்யாமல் இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மரணம் உங்களை உண்ணவே முடியாத அமரத்துவ உலகிற்குச் செல்கிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கோ பயம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. உங்களால் வெளியில் செல்ல முடியாதிருக்கும். அரிதாகச் சிலரே இக்கல்வியைக் கற்பார்கள். சிலர் மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள், இது மிகவும் சிறந்தது என்றும் எழுதுவார்கள். அத்தகைய குழந்தைகளும் நிச்சயமாக வருவார்கள். ஓர் இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். இன்னமும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. நினைவு யாத்திரையில் முன்னே ஓடிச் செல்கின்ற, முயற்சி செய்கின்ற குழந்தைகளைத் தந்தை அதிகளவு புகழ்கின்றார். நினைவுசெய்தலே பிரதான விடயம். இந்த நினைவைக் கொண்டிருப்பதாலேயே உங்கள் பழைய கணக்குகள் முழுவதும் தீர்க்கப்படுகின்றன. சில குழந்தைகள் பாபாவிற்கு எழுதி அறிவிக்கிறார்கள்: பாபா, நான் ஒவ்வொரு நாளும் இந்தளவு மணித்தியாலம் நினைவு செய்வதற்காக அமர்கின்றேன். அப்பொழுது, அவர் சிறந்ததொரு முயற்சியாளன் என பாபா நினைக்கின்றார். நீங்கள் முயற்சியும் செய்ய வேண்டும். ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: ஒருவரோடு ஒருவர் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். அதனையே மிருகங்கள் செய்கின்றன. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் சரீர உணர்வாகும். அதன் மூலம் நீங்கள் தந்தையின் பெயரை அவதூறு செய்கிறீர்கள். தந்தையைப் பற்றியே, சற்குருவை அவதூறு செய்பவர்களால் இலக்கை அடைய முடியாது எனக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் அதனைச் சாதுக்கள் தமக்காக்கிக் கொண்டார்கள். அவர்களால் தாம் சபிக்கப்பட்டு விடுவோமோ என்று பெண்கள் அவர்களை இட்டுப் பயப்படுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உண்மையான அமரத்துவ கதையைக் கேட்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் இப்பொழுது இந்த கல்விக்கூடத்திற்கு (பாடசாலை) ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்காக வருகின்றோம். இது வேறு எங்கும் கூறப்படவில்லை. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நினைவு செய்வதே இதற்குத் தேவையான பிரதான முயற்சி. அரைக்கல்பத்திற்கு நீங்கள் நினைவில் இருக்கவே இல்லை. இந்த ஒரு பிறவியில், நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இதுவேயாகும். நீங்கள் நினைவுசெய்து தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் செய்கின்ற எந்த ஒரு பாவச்செயலுக்கும் நூறு மடங்கு தண்டனை உள்ளது. நீங்கள் முயற்சி செய்து உங்களை முன்னேறச் செய்ய வேண்டும். ஆத்மாவே சரீரத்தினூடாகக் கற்று, ஒரு சட்டத்தரணியாகவோ அல்லது சத்திரசிகிச்சை நிபுணராகவோ ஆகுகின்றார். இலக்ஷ்மி நாராயணனின் அந்தஸ்து மிகவும் மேன்மையானது. பின்னர் நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள். நீங்களே அதிமேலான குலத்தைச் சேர்ந்த மேன்மையான பிராமணர்கள். நீங்களே சுயதரிசனச் சக்கரத்தை வைத்திருப்பதாகக் காட்டப்பட்டிருப்பவர்கள். நீங்கள் இந்த ஞானத்தை ஒரு கல்பத்தின் முன்னரும் கேட்டீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கேட்கிறீர்கள். நீங்கள் கேட்பதனால் ஓர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். பின்னர், இந்த ஞானம் மறைந்துவிடும். அந்தச் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களையே சோதித்துக் கேளுங்கள்: நான் எந்தளவிற்குத் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றேன்? எந்தளவிற்கு நான் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளேன்? எனக்குள் ஏதேனும் குறைபாடு உள்ளதா? எனது உணவு, பானம், செயற்பாடுகள் மற்றும் நடத்தை இராஜரீகமாக உள்ளதா? நான் பயனற்ற விடயங்களைப் பேசுகின்றேனா? நான் பொய் பேசுகிறேனா?

2. உங்கள் நினைவு அட்டவணையை அதிகரித்துக் கொள்வதற்கு நீங்கள் சகோதரர்களான ஆத்மாக்கள் எனக் கருதுவதைப் பயிற்சி செய்யுங்கள். சரீர உணர்விலிருந்து அப்பால் இருங்கள். உங்கள் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆக்குவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையை வென்றவராகவும் சுய இராச்சிய உரிமை உடையவராகவும் ஆகி, பஞ்ச பூதங்களையும் ஐந்து விகாரங்களையும் உங்களின் சேவகர்கள் ஆக்குவீர்களாக.

சத்தியயுகத்தில், உலகச் சக்கரவர்த்தியினதும் உலகச் சக்கரவர்த்தியினதும் அரச ஆடைகளின் பின்புறமாக உள்ள நீண்ட மேலங்கியைப் பணிப்பெண்கள் பிடித்துக் கொண்டு செல்வார்கள். அதேபோல், சங்கமயுகத்தில், குழந்தைகளான நீங்கள் உங்களின் பட்டங்களான மாயையை வென்றவர்கள் மற்றும் சுய இராச்சிய உரிமை உள்ளவர் என்ற ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போது பஞ்ச பூதங்களும் ஐந்து விகாரங்களும் உங்களின் ஆடையைப் பின்னால் பிடித்துக் கொண்டு வரும். அதாவது, அவை உங்களின் அடிமைகளாக இருக்கும். இதற்கு, உங்களின் பட்டங்கள் என்ற ஆடையைத் திடசங்கற்பம் என்ற இடுப்புப் பட்டியால் இறுக்குங்கள், வெவ்வேறு ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுத் தந்தையுடன் இருங்கள். அப்போது அந்த விகாரங்களும் பஞ்சபூதங்களும் மாற்றப்பட்டு, உங்களின் ஒத்துழைக்கும் சகபாடிகள் ஆகிவிடும்.

சுலோகம்:
நீங்கள் விவரிக்கும் நற்குணங்களினதும் சக்திகளினதும் அனுபவத்தில் உங்களை மறந்திருங்கள். அனுபவமே மகத்தான அதிகாரம்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.

ந்தையுடன் உங்களை ஒன்றிணைந்தவராகக் கருதுவதன் மூலம், சர்வசக்திவான் உங்களின் சகபாடி ஆகுவார். அப்போது உங்களுக்குள் இனியும் ஓர் அழிகின்ற சகபாடியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் தோன்றாது. எப்படி சூரியனின் முன்னால் இருள் இருக்க முடியாதோ, அவ்வாறே மாயையின் எந்தவிதமான வீணான எண்ணமும் சர்வசக்திவானின் முன்னால் இருக்க முடியாது. எந்தவோர் எதிரியும் உங்களைத் தாக்குவதற்கு முன்னர் உங்களைத் தனிமைப்படுத்துவார். அதனால், ஒருபோதும் தனித்திருக்காதீர்கள்.