21.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது இறை சேவையில் இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டி, ஒரு புலமைப்பரிசிலை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

கேள்வி:
இந்த ஞானத்தை நீங்கள் நன்றாகக் கிரகிக்கும் பொழுது, குழந்தைகளாகிய உங்களிடமிருந்து அகற்றப்படுகின்ற பயம் என்ன?

பதில்:
நீங்கள் இந்த ஞானத்திற்கு வந்து இந்த ஞானத்தைக் கிரகிக்கும்பொழுது, உங்கள் பக்தி மார்க்கத்தின் குரு உங்களைச் சபிப்பார் என்ற பயம் அகற்றப்படுகின்றது, ஏனெனில் இந்த ஞான மார்க்கத்தில் எவரும் உங்களைச் சபிக்க முடியாது. இராவணன் உங்களைச் சபிக்கின்றான், ஆனால் தந்தையோ உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். மந்திர சக்தியைக் கற்பவர்கள் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்து, துன்பம் விளைவிக்கும் விடயங்களை செய்கின்றார்கள். இந்த ஞான மார்க்கத்தில் உள்ள குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
அனைத்திற்கும் முதலில், நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்பதை ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். நீங்கள் பரந்தாமத்திலிருந்து வருகின்ற ஆத்மாக்கள் என்பதையும், உங்கள் பாகங்களை நடிப்பதற்கு சரீரங்களை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாவே ஒரு பாகத்தை நடிக்கின்றார். சரீரம் ஒரு பாகத்தை நடிக்கிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய தவறாகும். இதனாலேயே எவருக்கும் ஆத்மாவைத் தெரியாது. எவ்வாறு ஆத்மாக்களாகிய நாங்கள் வந்து, சக்கரத்தைச் சுற்றி வருகிறோம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இதனாலேயே தந்தை வந்து உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்க வேண்டும். எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. எவ்வாறு ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள் என்பதைத் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். மனிதர்கள் அதிகபட்சமாக 84 பிறவிகளையும், குறைந்தபட்சம் ஓரிரு பிறவிகளையும் எடுக்கிறார்கள். ஆத்மாக்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்க வேண்டும். பல பிறவிகளை எடுப்பவர்கள் பல மறுபிறவிகளையும் எடுக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. குறைந்த பிறவிகளை எடுப்பவர்கள், குறைந்த மறுபிறவிகளை எடுக்கிறார்கள். ஒரு நாடகத்திலும் சிலர் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரைக்கும் ஒரு பாகத்தையே நடிக்கிறார்கள், ஆனால் ஏனையோர் ஒரு சிறிய பாகத்தை மாத்திரமே நடிக்கிறார்கள். மனிதர்களுக்கு இது தெரியாது. ஆத்மாக்களுக்குத் தங்களையே தெரியாது, எனவே அவர்களால் எவ்வாறு தந்தையை அறிந்துகொள்ள முடியும்? இவை அனைத்தும் ஆத்மாக்களுக்கே பொருந்தும். தந்தை ஆத்மாக்களின் தந்தை ஆவார். ஸ்ரீகிருஷ்ணர் ஆத்மாக்களின் தந்தையாக இருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணரை ஆசரீரியானவர் என அழைக்க முடியாது. அவரை ஒரு பௌதீக ரூபத்தில் மாத்திரமே இனங்காண முடியும். ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா இருக்கிறார். ஒவ்வோர் ஆத்மாவிலும் ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது. உங்கள் மத்தியிலும், இவ்விடயங்களை விளங்கப்படுத்தக் கூடியவர்கள், நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே இருக்கிறீர்கள். எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளையும் எடுத்துள்ளீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்பதில்லை, இல்லை. எவ்வாறு ஆத்மாக்களாகிய நாங்கள் முதலில் தேவர்கள் ஆகுகிறோம் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தற்சமயம் நாங்கள் தூய்மை அற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் இருப்பதுடன், நாங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகவேண்டும். உலகம் பழையதாகும் பொழுதே, தந்தை வருகிறார். தந்தை வந்து பழைய உலகைப் புதியதாக ஆக்குகின்றார். அவர் புதிய உலகை ஸ்தாபிக்கிறார். புதிய உலகில் ஆதி, சனாதன, தேவிதேவதா தர்மம் உள்ளது. முன்னர் அவர்கள் கலியுகத்து, சூத்திர தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தார்கள் என நீங்கள் அவர்களையே கூறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய, பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் பிராமண குலத்திற்குள் வந்துவிட்டீர்கள். பிராமண குலத்தின் வம்சம் என எதுவும் இல்லை. ஓர் இராச்சியத்தைப் பிராமண குலம் ஆட்சி செய்வதில்லை. இந்நேரத்தில், பிராமண குலத்திற்கோ அல்லது சூத்திர குலத்திற்கோ பாரதத்தில் ஓர் இராச்சியம் இல்லை. அவர்களில் எவருக்குமே ஓர் இராச்சியம் இல்லை. இப்பொழுது மக்களே மக்களை ஆளும் அரசாங்கமே உள்ளது. பிராமணர்களாகிய உங்களுக்கு ஓர் இராச்சியம் இல்லை. நீங்கள் கற்கின்ற மாணவர்கள். எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கிறது என்பதைத் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களின் பின்னர் இச்சங்கமயுகம் உள்ளது. சங்கமயுகத்திற்கு உள்ள புகழ் வேறெந்த யுகத்திற்கும் இருக்க முடியாது. இதுவே அதிமேன்மையான சங்கமயுகமாகும். நீங்கள் சத்திய யுகத்திலிருந்து திரேதா யுகத்திற்குச் செல்லும் பொழுது, இரு கலைகள் குறைவடைவதனால், நீங்கள் எவ்வாறு அதைப் புகழ முடியும்? நீங்கள் குறைவடையும் ஸ்திதியைப் புகழமாட்டீர்கள். கலியுகம் பழைய உலகம் என அழைக்கப்படுகிறது. தேவர்களின் இராச்சியமுள்ள, புதிய உலகம், இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. அவர்களே அதிமேன்மையானவர்கள். பின்னர், படிப்படியாக, அவர்களுடைய கலைகள் குறைவடைவதனால், அவர்கள் சீரழிந்தவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் சூத்திர புத்தியை உடையவர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் கல்லுப் புத்தியை உடையவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் புத்தி கல்லைப் போன்று ஆகியதால், தாங்கள் வழிபடுபவர்களின் வாழ்க்கைச் சரிதங்களையேனும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. குழந்தைகள் தங்கள் தந்தையின் வாழ்க்கைச் சரிதத்தை அறிந்திராவிடின், எவ்வாறு அவர்களால் அவர்களின் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெற முடியும்? குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தையின் வாழ்க்கைச்-சரிதத்தை தெரியும். நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறீர்கள். பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்களிடமிருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறோம். ஆகவே, நிச்சயமாகத் தந்தை வந்து உங்களுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்திருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறேன். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மிக நன்றாக நிலைத்திருக்க வேண்டும். இதனாலேயே நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுவிட்டீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது சூத்திர்களிலிருந்து பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். கலியுகத்துப் பிராமணர்களும் இருக்கிறார்கள். அப்பிராமணர்கள் கலியுகத்தவர்கள் என்பதால், எப்பொழுது தங்கள் தர்மமும், குலமும் ஸ்தாபிக்கப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் நேரடிக் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் அதியுயர்வான குலத்திற்கு உரியவர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கும் சேவையைச் செய்து, உங்களைப் பராமரித்து, உங்களை அலங்கரிக்கிறார். நீங்கள் இறைசேவையில் மாத்திரமே இருக்கிறீர்கள். தந்தையாகிய கடவுள் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய வந்துள்ளேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்ட வேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது வீடு திரும்புங்கள்! முக்தியைப் பெறுவதற்காகவே மனிதர்கள் பக்தி செய்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாகப் பந்தன வாழ்க்கை உள்ளது. அத்துன்பம் அனைத்தில் இருந்தும் உங்களை விடுவிப்பதற்குத் தந்தை வருகின்றார். விரக்திக்குரல்கள் இருக்கும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். விரக்திக்குரல்களின் பின்னர் வெற்றிக்குரல்கள் ஒலிக்கும். இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் பொழுது, எந்தளவிற்கு விரக்தி இருக்கும் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஐரோப்பியர்களாகிய, யாதவர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பியர்களே யாதவர்கள் என அழைக்கப்படுகிறார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். எவ்வாறு ஏவுகணைகள் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்றன என்பதும், அவர்கள் எவ்வாறு ஒரு சாபத்தைக் கொடுத்தார்கள் என்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அங்கு ஒரு சாபம் என்ற கேள்வியே இல்லை. இது நாடகமாகும். தந்தை ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார், ஆனால் இராவணனோ உங்களைச் சபிக்கிறான். நாடகம் இவ்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாபத்தைக் கொடுக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். சாபங்களை அகற்றுகின்ற ஏனைய மனிதர்களும் இருக்கிறார்கள். தாங்கள் குருமார்களினால் சபிக்கப்படுவதையிட்டு, மக்கள் அச்சம் அடைகிறார்கள். உண்மையில், இந்த ஞானப் பாதையில் எவரும் உங்களைச் சபிக்க முடியாது. இந்த ஞான மார்க்கத்திலோ அல்லது பக்தி மார்க்கத்திலோ ஒரு சாபத்துக்கான கேள்வியே இல்லை. மந்திர சக்தியைக் கற்பவர்கள் சாபங்களைக் கொடுத்து மக்களுக்குப் பெருமளவு துன்பத்தையும் விளைவிக்கிறார்கள். அவர்கள் அவ்வாறாகவே பெருமளவு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். பக்தர்கள் அவ்வேலையைச் செய்வதில்லை. நீங்கள் சங்கமயுகத்துடன் “அதிமங்களகரமான” என்னும் வார்த்தையையும் நிச்சயமாக எழுதவேண்டும் என பாபாவும் விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் “திரிமூர்த்தி”, “பிரஜாபிதா” என்னும் வார்த்தைகளையும் எழுத வேண்டும், ஏனெனில் பலருக்கு “பிரம்மா” எனும் பெயர் உள்ளது. நீங்கள் “பிரஜாபிதா” எனும் வார்த்தையை எழுதும்பொழுது, மக்களின் தந்தை (பிரஜாபிதா) பௌதீக ரூபத்தில் இருக்க வேண்டும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் “பிரம்மா” என்பதை மாத்திரம் எழுதும் பொழுது, அவர்கள் அவரை சூட்சும உலகவாசி என்றே கருதுகிறார்கள். அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கடவுள் என அழைக்கிறார்கள். நீங்கள் “பிரஜாபிதா” எனக் கூறும்பொழுது, பிரஜாபிதா இங்கேயே இருக்கிறார் என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர் எவ்வாறு சூட்சும உலகில் இருக்க முடியும்? பிரம்மாவின் தொப்புள் கொடியிலிருந்து விஷ்ணு வெளிப்படுவதாக அவர்கள் காட்டுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஒரு தொப்புள் கொடியிலிருந்து வெளிப்படுவதற்கான கேள்வியே இல்லை. பிரம்மா எவ்வாறு விஷ்ணு ஆகுகிறார்? விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகுகின்றார்? படங்களைப் பயன்படுத்தி முழுச் சக்கரத்தின் ஞானம் அனைத்தையும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். படங்களைப் பயன்படுத்தாமல் விளங்கப்படுத்துவதற்கு பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு, பிரம்மா ஆகுகிறார். இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றிய பின்னர் சரஸ்வதியும், பிரம்மாவும் ஆகுகிறார்கள். ஆரம்பத்தில் “பத்தி” உருவாக்கப்பட்ட பொழுது, பாபா உங்களுக்குப் பெயர்களைக் கொடுத்தார். பின்னர் பலர் விலகிச் சென்றார்கள். இதனாலேயே பிராமணர்களின் மாலை உருவாக்கப்பட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் முயற்சியாளர்கள் என்பதனால், அவர்கள் தொடர்ந்தும் தளம்புகிறார்கள்;. தீய சகுனங்கள் உள்ளன. பாபா ஓரு நகை வியாபாரி. எவ்வாறு முத்து அட்டிகைகள் போன்றன உருவாக்கப்படுகின்றன என்பதில் அவர் அனுபவம் வாய்ந்தவர். பிராமணர்களின் மாலை இறுதியிலேயே உருவாக்கப்படுகிறது. பிராமணர்களாகிய நாங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துத் தேவர்கள் ஆகுகிறோம். பின்னர் நாங்கள் ஏணியில் கீழிறங்கி வரவேண்டும். இல்லாவிடின், வேறு எவ்வாறு நாங்கள் 84 பிறவிகளை எடுக்க முடியும்? 84 பிறவிகளின் கணக்குக்கேற்ப, நீங்கள் இதைக் கணக்கிட முடியும். உங்கள் நேரத்தின் அரைவாசி முடிவடைந்த பொழுது, ஏனைய சமயத்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஓர் அட்டிகையை உருவாக்குவதற்குப் பெருமளவு முயற்சி தேவை. முத்துக்கள் மேசையில் பெருங் கவனத்துடன் வைக்கப்படுவதனால், அவை உருண்டோடி விடாமல் இருக்கும். பின்னர் அவை ஓர் ஊசி மூலம் கோர்க்கப்படுகின்றன. சில சமயங்களில், அட்டிகை சிறந்ததாக இல்லாவிடின், அது உடைக்கப்பட வேண்டும். இந்த மாலை மிகவும் பெரியது. நீங்கள் புதிய உலகத்திற்காகக் கற்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சுலோகங்களை உருவாக்க வேண்டும் என்பதை பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: எவ்வாறு நாங்கள் சூத்திர்களிலிருந்து பிராமணர்களாகவும், பின்னர் தேவர்களாகவும் மாறுகிறோம் என்பதை வந்து புரிந்துகொள்ளுங்கள். இச்சக்கரத்தை அறிந்து கொள்வதால், நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். அத்தகைய சுலோகங்களை உருவாக்கிக் குழந்தைகளுக்குக் கற்பியுங்கள். பாபா உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகின்றார். உண்மையில், உங்களுக்குப் பெரும் மதிப்பு உள்ளது. நீங்கள் கதாநாயக, கதாநாயகிப் பாகங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் வைரங்களைப் (ஹீரோ) போன்று ஆகிய பின்னர் சக்கரத்தைச் சுற்றிச் சென்று, சிப்பிகளின் பெறுமதி உடையவர்களாக ஆகுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் வைரங்களைப் போன்ற பெறுமதி மிக்க ஒரு பிறவியைப் பெற்றுள்ளதால், நீங்கள் ஏன் சிப்பிகளின் பின்னால் துரத்திச் செல்கிறீர்கள்? நீங்கள் உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விட்டுச் செல்ல வேண்டும் என்பதல்ல. பாபா கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, ஒரு தாமரை மலர் போன்று தூய்மையாக இருக்க வேண்டும். பின்னர், உலகச்சக்கரத்தின் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதாலும், தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதாலும் நீங்கள் வைரங்களைப் போன்று ஆகுவீர்கள். உண்மையில், 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதம் ஒரு வைரத்தைப் போன்று இருந்தது. இப்படம் உங்கள் இலக்கும், குறிக்கோளும் ஆகும். நீங்கள் (இலக்ஷ்மி நாராயணனின்) இப்படத்துக்குப் பெருமளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளிலும், அருங்காட்சியகங்களிலும் பெருமளவு சேவை செய்ய வேண்டும். துரித கதியில் சேவை செய்யாமல் எவ்வாறு உங்களால் பிரஜைகளை உருவாக்க முடியும்? மக்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்தாலும், அரிதாகவே எவராவது ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறார்கள். அவர்களுக்கே கூறப்படுகிறது: “பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர்”. மிகச் சொற்ப அளவினரே ஒரு புலமைப்பரிசிலைக் கோருகிறார்கள். ஒரு பாடசாலையில் உள்ள 40 அல்லது 50 மாணவர்களில், ஒருவேளை அவர்களில் ஒருவர் ஒரு புலமைப்பரிசிலை வெல்லலாம். சிலர் உயர் புள்ளிகளைப் பெறுவதால், அவர்களும் ஒரு புலமைப்பரிசிலை வெல்கிறார்கள். இங்கும் அது போன்றதே ஆகும். கூடுதலாகப புள்ளிகளைப் பெறுகின்ற பலர் இருக்கிறார்கள். எட்டு மணிகள் உள்ளார்கள், அவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. முதலில் அவர்களே இராச்சிய சிம்மாசனத்தில் அமர்வார்கள். பின்னர், கலைகள் தொடர்ந்தும் குறைவடையும். இலக்ஷ்மி நாராயணனின் படம் முதற்தரமானது. அவர்களின் வம்சமும் உள்ளது, ஆனால் (முதலாவது) இலக்ஷ்மி நாராயணனின் படம் மாத்திரமே காட்டப்பட்டுள்ளது. இங்கு, படங்கள் தொடர்ந்தும் மாற்றப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்களின் படங்களைக் காட்டுவதில் என்ன நன்மை உள்ளது? பெயர், ரூபம், காலம், இடம் அனைத்தும் மாறுகின்றன. ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஒரு கல்பத்தின் முன்னரும் தந்தை உங்களுக்கு இதை விளங்கப்படுத்தினார். ஸ்ரீகிருஷ்ணர் கோபியருக்கும், கோபிகைகளுக்கும் இந்த ஞானத்தைக் கூறினார் என்றில்லை. ஸ்ரீகிருஷ்ணருக்குக் கோபியர், கோபிகைகள் இருப்பதும் இல்லை, அவர்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்படவும் இல்லை. அவர் சத்தியயுகத்தின் ஓர் இளவரசர். அவர் எவ்வாறு அங்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும் அல்லது தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க முடியும்? நீங்கள் இப்பொழுது உங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை ஆசிரியரும் ஆவார். மாணவர்களால் ஒருபொழுதும் தங்கள் ஆசிரியரை மறந்துவிட முடியாது. குழந்தைகளால் தங்கள் தந்தையை அல்லது தங்கள் குருவை மறந்துவிட முடியாது. அவர்களுக்குப் பிறப்பிலிருந்தே ஒரு தந்தை உள்ளார். ஐந்து வயதின் பின்னர் அவர்கள் ஓர் ஆசிரியரைப் பெறுகிறார்கள், அவர்கள் ஓய்வுபெறும் ஸ்திதியை அடையும்பொழுது, ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். பிறப்பிலிருந்தே ஒரு குருவை ஏற்றுக்கொள்வதில் நன்மை இல்லை. அவர்கள் ஒரு குருவை ஏற்றுக்கொண்டு, மறுநாளே மரணிக்கக்கூடும். ஆகவே குருவால் என்ன செய்ய முடியும்? பாடப்பட்டும் உள்ளது: சற்குருவின்றி, உங்களால் சற்கதியை அடைய முடியாது. எவ்வாறாயினும், அவர்கள் சற்குருவை ஒதுக்கிவிட்டு, ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். பல குருமார்கள் இருக்கிறார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் எந்தப் பௌதீகக் குருமார்களையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் எவரிடம் இருந்தும் எதனையும் கேட்கக்கூடாது. கூறப்பட்டுள்ளது: எதையாவது யாசிப்பதை விட மரணிப்பதே மேல். தங்கள் பணத்தை எவ்வாறு பரிமாற்றம் செய்வது என் அனைவரும் கவலைப்படுகிறார்கள். கடவுளின் பெயரில் தங்கள் அடுத்த பிறவிக்காக அவர்கள் தானம் அளித்து, இப்பழைய உலகில் அதன் பிரதிபலனைத் தற்காலிகமாகப் பெறுகிறார்கள். இங்கு, புதிய உலகில், 21 பிறவிகளுக்கு உங்களுடைய அனைத்தும் இடம்மாற்றம் செய்யப்படுகின்றது. நீங்கள் கடவுளிடம் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணிக்க வேண்டும். அவர் வரும்பொழுது மாத்திரமே அதைச் செய்ய முடியும். எவருக்கும் கடவுளைத் தெரியாததால், அவர்கள் குருவைப் பற்றிப் பிடிக்கிறார்கள். தங்கள் செல்வம் போன்றவற்றைத் தங்கள் குருவிடம் அவர்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாரிசு இல்லாதபொழுது, அவர்கள் அனைத்தையும் தங்கள் குருவிடம் கொடுக்கிறார்கள். இந்நாட்களில், கடவுளின் பெயரில், எவரும் எதையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானே ஏழைகளின் பிரபு. இதனாலேயே நான் பாரதத்திற்குள் வருகிறேன். நான் வந்து உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். ஏதாவதொன்றை நேரடியாகச் செய்வதற்கும், மறைமுகமாகச் செய்வதற்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. அவர்களுக்கு எதுவும் தெரியாது, ஆனால் கடவுளின் பெயரில் அர்ப்பணிப்பதாகக் கூறுகிறார்கள். அவை அனைத்தும் அர்த்தமற்றவை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துணர்வைப் பெற்றுவிட்டீர்கள். ஆகவே, விவேகம் அற்றவர்களிலிருந்து, நீங்கள் விவேகிகள் ஆகிவிட்டீர்கள். தந்தை எவ்வாறு அற்புதங்களைப் புரிகிறார் என்பது உங்கள் புத்திக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் தாதாவின் மூலம் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தாதாவும் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைக் கோருகிறார். ஆஸ்தியைக் கொடுப்பவர் ஒரேயொருவர் மாத்திரமே ஆவார். நீங்கள் அவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் வந்து இவரில், இவருடைய பல பிறவிகளின் இறுதியில் பிரவேசித்து, அவரைத் தூய்மை ஆக்குவதனால், அவர் பின்னர் ஓரு தேவதை ஆகுகிறார். பட்ஜைப் பயன்படுத்தி உங்களால் பெருமளவு சேவையைச் செய்ய முடியும். உங்கள் பட்ஜ்கள் அனைத்தும் மிகவும் அர்த்தம் மிக்கவை. இப்படமே உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கும் ஒன்றாகும். எவரும் அதன் மதிப்பை உணர்ந்து கொள்வதில்லை. பாபா எப்பொழுதும் பெரிய விடயங்களை விரும்புகிறார், எவராலும் அவற்றைத் தொலைவில் இருந்தே தெளிவாக வாசிக்க முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதற்கு, விவேகிகளாகி, உங்கள் சரீரம், மனம், செல்வத்தை நேரடியாகத் தந்தைக்கு அர்ப்பணியுங்கள். 21 பிறவிகளுக்கு உங்களிடமுள்ள அனைத்தையும் 21 பிறவிகளுக்கு பரிமாற்றம் செய்யுங்கள்.

2. தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் சேவையைச் செய்து, உங்களைப் பராமரித்து, உங்களை அலங்கரிக்கிறார். ஆகவே, தந்தை செய்கின்ற அதே சேவையைச் செய்யுங்கள். அனைவரையும் அவர்களின் பந்தன வாழ்விலிருந்து விடுவித்து ஜீவன்முக்திக்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஆசீர்வாதம்:
தாகத்திலுள்ள ஆத்மாக்களின் தாகத்;தைத் தீர்ப்பதற்காக, இந்த ஞான அமிர்த கலசத்தை ஏந்துபவர் ஆகுவீர்களாக.

பெரும்பான்மையான ஆத்மாக்கள் இப்பொழுது சடப்பொருட்களின் தற்காலிக வசதிகளையிட்டும், ஆன்மிக அமைதியை அனுபவம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள எல்லைக்கு உட்பட்ட இடங்களையிட்டும், தாம் கடவுளைச் சந்திக்க பிறருக்கு உதவுவோம் எனக் கூறுபவர்களை இட்டும் களைப்பு அடைந்துள்ளார்கள், அவர்கள் களைப்படைந்தும் விரக்தியடைந்தும் உள்ளார்கள். அவர்கள் சத்தியம் வேறொன்றென நம்புகிறார்கள். அவர்கள் பேறுகளுக்கான தாகத்துடன் இருக்கிறார்கள். ஆத்மாக்களினதும் கடவுளினதும் உண்மையான அறிமுகத் துளிகளால், அத்தகைய தாகத்திலுள்ள ஆத்மாக்களை திருப்திபடுத்த முடியும். ஆகையால், அத்தகைய தாகத்துடன் இருக்கின்ற ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக இந்த ஞான கலசத்தை ஏந்துங்கள். சதா இந்த அமிர்த கலசத்தை உங்களுடனேயே வைத்திருங்கள். அமரத்துவமானவர் ஆகி, பிறரையும் அமரத்துவமானவர் ஆக்குங்கள்.

சுலோகம்:
உங்கள் இலக்கிற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் இலட்சியத்தைக் கொண்டிருங்கள், அப்போது நீங்கள் இலகுவாக முழுமை அடைவீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

நீங்கள் சரீரமற்றவர் ஆகுவதற்கு, தயாராகுகின்ற சக்தி அவசியமாகும். சரீர உணர்வுடைய எவ்விதமான எண்ணங்களையும், இந்த பௌதீக உலகின் பாதகமான சூழ்நிலைகளின் எவ்விதமான எண்ணங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். வீடு திரும்புகின்ற எண்ணத்தைத் தவிர வேறு எந்த எண்ணங்களின் விரிவாக்கத்தையும் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை மாத்திரமே கொண்டிருங்கள். ஆத்மாவான நீங்கள் ஆகாய தத்துவத்திற்கு அப்பால் பறந்து செல்கின்ற அனுபவத்தை கொண்டிருங்கள். இதற்கு, அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற பயற்சியை அதிகரியுங்கள்.