31.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்கு, எப்போதும் உண்மையான தந்தையோடு நேர்மையாக இருங்கள். நீங்கள் ஒரு தவறு செய்தால், தந்தையிடம் அதற்காக மன்னிப்புக் கேளுங்கள். உங்கள் சொந்த மனத்தின் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள்.
கேள்வி:
விசேடமாக நேசிக்கப்படுகின்ற எந்தக் குழந்தைகள் ஒருபோதும் மறைந்திருக்க முடியாது?பதில்:
தெய்வீகக் குடும்பத்தை நேசிக்கின்ற சேவை செய்யும் குழந்தைகளும், இரவு பகலாகச் சேவை செய்வதில் அக்கறை கொண்டவர்களும், கீழ்ப்படிவானவர்களும், நம்பிக்கையுள்ளவர்களும், ஒருபோதுமே தமது சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றாதவர்களும், நேர்மையான இதயம் உடையவர்களும், தந்தையிடம் உண்மையாக இருப்பவர்களும் ஒருபோதும் மறைந்திருக்கவே முடியாது.பாடல்:
நீங்களே தாயும் நீங்களே தந்தையும்........ஓம் சாந்தி.
இப்பாடல் எந்த உத்தரவாதத்தை அளிக்கிறது? குழந்தைகள் உத்தரவாதம் கொடுக்கிறார்கள்: பாபா, எனக்கு உங்களைத் தவிர வேறெவரும் இல்லை. இது அத்தகைய உயர்ந்த இலக்காகும். அத்தகைய மேன்மையான தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற எவருமே நிச்சயமாக உயர்ந்ததோர் ஆஸ்தியைப் பெறுவார் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலக்கு மிகவும் உயர்ந்தது என்பதைப் புத்தி உணர்கிறது. ஆகையாலேயே பல மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவானவர்களே, மாலையின் மணிகள் ஆகுகிறார்கள். பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும் தந்தையும். ஆனால் மாயை அத்தனை சக்திவாய்ந்தவள் என்பதனால் அந்த உத்தரவாதத்தைப் பலரால் பின்பற்ற முடிவதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே வினவலாம்: நான் உண்மையிலேயே தாய் தந்தையருக்கு உரியவரா? தந்தை கூறுகிறார்: இல்லை, உங்களில் மிகச் சிலரே அவ்வாறானவர்கள். ஆகையாலேயே, மாலையில் எத்தனை மணிகள் உள்ளன என்பதை உங்களால் பார்க்க முடியும்! பல மில்லியன்களில், வெற்றி மாலையில் 8 பேரே உள்ளனர். சிலர் கூறுவது ஒன்றாகவும், செய்வது இன்னொன்றாகவும் இருக்கிறது. ஆகையாலேயே தந்தை கூறுகிறார்: இந்த அற்புதத்தைப் பாருங்கள்! பாபா மிகவும் அன்புடன் விளங்கப்படுத்துகிறார். ஆனால் வெகு சிலரே தகுதியானவர்கள் (மாலையின் மணிகள்). குழந்தைகளுக்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கு அத்தகைய சக்தி இல்லாதிருக்கிறது. ஆகையாலே அவர்கள் நிச்சயமாக இராவணனின் கட்டளைகளையே பின்பற்றுகிறார்கள். அதனால் அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற இயலாதிருக்கிறது. அரிதாக சிலரே மாலையில் மணிகள் ஆகுகிறார்கள். அத்தகைய விசேடமாக நேசிக்கப்படுகின்ற குழந்தைகள் மறைந்திருக்க முடியாது. அவர்கள் பாபாவின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சேவை செய்வது பற்றிய அக்கறையை மாத்திரமே இரவுபகலாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தெய்வீகக் குடும்பத்தில் அனைவரையும் அவர்கள் நேசிக்கிறார்கள், அவர்களது புத்திகள் வெளியில் எங்கும் இழுக்கப்படுவதில்லை. இந்த தெய்வீகக் குடும்பத்தின் மீது உங்களுக்கு அவ்வாறான அன்பு இருக்க வேண்டும். அறியாமைப் பாதையில் கூட, குழந்தைகள் தமது தந்தையின் மீது அதிகளவு அன்பு வைத்திருப்பார்கள். சகோதர சகோதரிகளும் ஒருவர் மீது ஒருவர் அதிகளவு அன்பு வைத்திருப்பார்கள். இங்கோ, சிலர் தந்தையோடு சிறிதளவு யோகம் கூட செய்வதில்லை. பலர் உத்தரவாதம் அளிக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் இதைப் பாடவும் செய்கிறார்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நேருக்கு நேர் தந்தையின் முன்னிலையில் இருக்கிறீர்கள். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: பக்தி மார்க்கத்தில் மக்கள் எதைப் பாடினாலும், அவர்கள் மிகுந்த அன்புடன் கடவுளை நினைவு செய்கிறார்கள்! இங்கு அவர்கள் அவரை நினைவு செய்வதில்லை. பாபாவிற்கு நீங்கள் உரியவராகும்போது, மாயை உங்களது எதிரி ஆகுவதுடன், புத்திகள் வெளியே இழுக்கப்படுகின்றன. ஆகையால், மாயை உங்களை மிகக் கடினமாகக் கீழே விழ வைத்து விடுகிறாள். தாங்கள் செய்பவை, தங்களை விழச் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தங்களது சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால் அவர்கள் தொடர்ந்து வீழ்கிறார்கள். அவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியவே தெரியாது! குழந்தைகளுக்குப் பலவீனங்கள் இருக்கின்றன. அவர்கள் கூறுவது ஒன்று, ஆனால் செய்வது வேறொன்றாகும். அவ்வாறு இல்லாவிட்டால், அவர்களால் அத்தகையதொரு மேன்மையான ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறமுடியும்! நீங்கள் தந்தையின் சேவையில், மிகவும் நேர்மையோடு உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள், அதனால்தான் பலமில்லியன் மக்களில் ஒரு கைப்பிடி அளவினரே தந்தையை முழுமையாக இனங்காண்கிறார்கள். தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு சக்கரத்திலும் இதுவே நடைபெறுகிறது. அவர்கள் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் கீழ்ப்படிவாகவும் இல்லாததால், அந்த அப்பாவிகளின் அந்தஸ்து அவ்வாறாகி விடுகிறது. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் இராஜயோகத்தைக் கற்றுச் சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும் சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆகுவேன். நான் இராமராகவோ சீதையாகவோ ஆகப்போவதில்லை. அவர்கள் தங்கள் கைகளைக் கூட உயர்த்துகின்றார்கள். எவ்வாறாயினும் அதற்கு ஏற்ற செயற்பாடும் தேவையாகும். எல்லையற்ற தந்தை உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுக்கவே வந்திருக்கிறார். நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை எனச் சத்தியம் செய்த பலரும் இருக்கிறார்கள்! அவ்வாறானவர்கள் மறைந்திருக்க முடியாது. அது அவர்களது பாக்கியத்தில் இல்லாதபோது முதலில் சரீர உணர்வினாலும் பின்னர் காமத்தாலும் தாக்கப்படுகிறார்கள். காமம் இல்லாவிட்டால், அங்கு கோபமோ அல்லது பேராசையோ உள்ளது. இந்த விகாரங்கள் அனைத்தும் உங்களது எதிரிகள் ஆகும். பற்றும் அத்தகையதே, அது அனைத்து உண்மைகளையும் முற்றிலும் மறைத்து விடும். பேராசையும் குறைவானதல்ல. இவை மிகவும் சக்திவாய்ந்த எதிரிகள் ஆகும். சில சதங்கள் மட்டுமே பெறுமதியானவற்றைக் கூட அவர்கள் திருடுவார்கள். அதுவும் பேராசையே. திருட்டுப்பழக்கம் மிகவும் தீமையானது. நீங்கள் தொடர்ந்தும் பாவச்செயல்களைச் செய்து வருவீர்களாயின், உங்களின் மனச்சாட்சி உறுத்தும். எனவே, என்ன அந்தஸ்தை நீங்கள் பெறுவீர்கள்? சிவபாபாவின் யாகத்தீயினுள் வந்த பின்னர் எவ்வாறு உங்களால் அத்தகைய செயல்களைச் செய்ய முடியும்? மாயை அவர்களைப் பல பிழையான செயல்களைச் செய்ய வைக்கிறாள். அவர்களுக்கு எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும் அவர்களது பழக்கம் அற்றுப் போவதில்லை. சிலர் பெயரிலும், உருவத்திலும் அகப்பட்டுக் கொள்கிறார்கள். சரீர உணர்வினாலேயே, பெயரிலும் உருவத்திலும் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். பாபாவிற்கு அனைத்து நிலையங்களைப் பற்றியும் அனைத்தும் தெரியும். பாபாவால் என்ன செய்ய முடியும்? அவர் விளங்கப்படுத்தவே வேண்டும். பல நிலையங்கள் உள்ளன! பாபாவுக்குப் பல செய்திகள் கிடைப்பதால் அவருக்கு அக்கறை உண்டு. ஆகையால் அவர் விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. மாயையும் குறைந்தவள் அல்ல. அவள் உங்களைப் பெருமளவு தொந்தரவு செய்கிறாள். 'மிகவும் உயர்ந்த நிலையை அடைய விரும்பினால் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்" என மிக நல்ல குழந்தைகளுக்கு கூறப்படுகிறது. இங்கு துன்பத்திற்கான கேள்விக்கே இடமில்லை. முன்னைய கல்பத்திலும் இதுவே நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கடவுளுக்கு உரியவர்களான பின்னர் அவர்கள் மாயையின் பிடிக்குள் அகப்பட்டு, ஏதோ ஒரு பாவச்செயலைச் செய்கிறார்கள். ஆகையாலேயே தந்தை கூறுகிறார்: பல குழந்தைகள் பாபாவிற்கு சத்தியம் செய்கிறார்கள்: நான் நிச்சயமாக உங்களது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவேன். எவ்வாறாயினும், அவர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான், மாலை இவ்வளவு சிறியதாக உள்ளதைப் பாருங்கள்! ஏனைய அனைவரும் பிரஜைகளே. இலக்கு மிகவும் உயர்ந்தது. இதற்கு இதய சுத்தம் தேவையாகும். கூற்றொன்று உண்டு: சந்தோஷம் இருக்கும்போது, இதயம் நடனம் ஆடுகிறது. நீங்கள் தொடர்ந்து தந்தையுடன் நேர்மையாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக சத்தியயுகத்தில் கிருஷ்ணருடன் நடனம் ஆடுவீர்கள். கிருஷ்ணரின் சத்தியயுகத்து நடனம் மிகவும் பிரபல்யமானது. அவர்கள் ராதை கிருஷ்ணருடைய ராஸ்-லீலை நடனத்தைக் (தெய்வீகச் செயல்கள்) காட்டுகிறார்கள். அவர்கள் பின்னர் இராமர் சீதையினது தெய்வீகச் செயற்பாடுகளான இராம-லீலை நடனத்தைக் காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் இராதை கிருஷ்ணரது ராஸ்-லீலை முதல் தரமானது. ஏன்? ஏனெனில் அவர்கள் இந்நேரத்தில் தந்தையோடு மிகவும் நேர்மையாக இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள்! பல குழந்தைகள் தங்களின் கைகளை உயர்த்துகிறார்கள். எவ்வாறாயினும் மாயை எப்படியானவள்? மாயையின் தீய ஆவிகளை விரட்ட வேண்டும் என்று நீங்கள் செய்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் சரீர உணர்வினர் ஆகியபின்னர், ஏனைய அனைத்து தீய ஆவிகளும் உங்களைப் பற்றிக் கொள்கின்றன. பாபா கூறுகிறார்: ஆத்ம உணர்வு உடையவராகித் தந்தையை நினைவு செய்யுங்கள்! அதிலும் அதிகாலை வேளையில் அமர்ந்து, பாபாவுடன் உரையாடுங்கள். பாபாவைப் புகழுங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பலரை நினைவு செய்தாலும் அவை எவற்றிலுமே, எவரது உண்மையான புகழும் இல்லை. அவர்கள் கிருஷ்ணரை நினைவு செய்து, அவரது புகழைப் பாடுவதுடன், அவர் வெண்ணெயைத் திருடினார் எனவும், பெண்களைக் கடத்தினார் எனவும் அகாசுரன், பகாசுரன் போன்ற அசுரர்களைக் கொன்றதாகவும் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்றெல்லாம் கூறுகிறார்கள். அவர்கள் வேறு என்னவெல்லாம் கூறுகிறார்கள்? அவை யாவும் பொய்யானவை. அதில் ஓர் அவுன்ஸ் உண்மையும் இல்லை! அவ்வாறாயின் அவரால் எவ்வாறு பாதையைக் காண்பிக்க முடியும்? அவர்களுக்கு முக்தியைப் பற்றி எதுவுமே தெரியாது. இந்நேரத்தில் இராவண இராச்சியம் முழு உலகிலும் நிலவுகிறது. அனைவரும் இந்நேரத்தில் தூய்மையற்று இருக்கிறார்கள். மனிதர்களுக்கு 'சீரழிவு" என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாது. சத்தியயுகத்தில் விகாரமற்ற தேவர்கள் இருந்ததையும் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் பாடுகிறார்கள்: நீங்கள் அனைத்து தெய்வீகப் பண்புகளும், பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்களாக இருக்கிறீர்கள். அப்படி இருந்தும் அங்கு இராவணன், கம்சன், ஜராசந் போன்றோரும் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தூய்மையைக் கடைப்பிடியுங்கள் என அவர்களிடம் கூறும்போது, தேவர்களுக்குமே குழந்தைகள் இருந்தார்கள் எனப் பதில் அளிக்கிறார்கள். ஓ! ஆனால் நீங்கள் பாடுகிறீர்கள்: நீங்கள் அனைத்து தெய்வீகப் பண்புகளும் நிறைந்தவர்கள், முற்றிலும் விகாரம் அற்றவர்கள். எனவே, அங்கு எவ்வாறு விகாரத்தின் கேள்விக்கு இடம் இருக்க முடியும்? விகாரம் அற்றவர்களாக ஆகுமாறு நீங்கள் அவர்களிடம் கூறும்போது, அவர்கள் பதில் அளிக்கிறார்கள்: எவ்வாறு உலக சனத்தொகை விருத்தி அடையும்? எவ்வாறு குழந்தைகள் பிறப்பார்கள்? அவர்கள் கோவிலில் புகழ் பாடுகிறார்கள், பின்னர் வீடு திரும்பியதும் அந்தப் புகழையும் கூட மறந்து விடுகிறார்கள். இதை நீங்களே போய்ப் பாருங்கள்! அவர்களது வீடுகளிற்குச் சென்று நீங்கள் விளங்கப்படுத்தினாலும் நீங்கள் கூறுவதை அவர்கள் செவிமடுப்பதில்லை. அவர்கள் அங்கு (கண்காட்சியில்) செவிமடுத்தவை யாவற்றையும் அங்கேயே கைவிட்டுச் சென்று விட்டார்கள்! தூய்மை ஆகுங்கள் என நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். அவர்கள் அதற்குப் பதில் அளிப்பார்கள்: அற்புதம், ஆனால் இது இல்லாது எவ்வாறு உலகம் தொடர முடியும்? எவ்வாறு விகாரமற்ற உலகம் இயங்குகிறது என்பதைக் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டதுடன் சத்தியமும் செய்தீர்கள்: நான் உங்களது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவேன், ஏனெனில் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் நன்மை உள்ளது. தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால், மரணம் ஏற்படும்! பின்னர் அனைத்து விடயங்களும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் இப்பாவங்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்களது சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றியதால் இதன் கறை ஒவ்வொரு கல்பத்திலும் இருக்கும். ஒரு முறை தோல்வி அடைந்தால் மீண்டும் இரண்டாம் அல்லது மூன்றாம் வருடத்தில் கற்கலாம் என்றில்லை. இல்லை, நீங்கள் இப்போது தோல்வி அடைந்தால், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் தோல்வி அடைகிறீர்கள். இதனாலேயே, நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உங்களுக்குள் எந்த அழுக்கும் இருக்கக் கூடாது. உங்கள் இதயத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்குமாறு நாரதருக்கும் கூடக் கூறப்பட்டது. அப்போது தான் ஒரு குரங்கைப் போன்று இருந்ததை அவர் பார்த்தார். அது உதாரணமே. உங்களையே வினவுங்கள்: எந்தளவிற்கு நான் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறேன்? எனது புத்தியின் யோகம் வெளியே அலைகிறதா? நான் சரீர உணர்வுடன் இல்லை. அவ்வாறு இருக்கிறேனா? ஆத்ம உணர்வுடன் இருப்பவர்கள் தங்களைச் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். அனைத்தும் யோகத்திலேயே தங்கி உள்ளது. பாரதத்தின் யோகம் மிகவும் பிரபல்யமானது. அசரீரியான தந்தை அசரீரியான குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். இது இலகுவான இராஜயோகம் என அழைக்கப்படுகிறது. அசரீரியான தந்தையே இலகுவான இராஜயோகத்தைக் கற்பித்தார் என எழுதப்பட்டுள்ளது. அவர்கள் கிருஷ்ணரது பெயரைப் புகுத்தி உள்ளார்கள். நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போல ஆக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாகவும், புண்ணியாத்மாக்களாகவும் ஆக வேண்டும். பாவம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, அவரது சேவையில் உங்களை ஈடுபடுத்துங்கள். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற விரும்பினால், நீங்கள் முயற்சி செய்வீர்கள், செய்ய மாட்டீர்களா? வீடுகளில், குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டே தாமரையைப் போலத் தூய்மையாக இருப்பது சாத்தியமில்லை என்று சந்நியாசிகள் கூறுகிறார்கள். முழுமை அடைவதில் இருந்து பல குழந்தைகள் தோல்வி அடைகிறார்கள். ஏனெனில் அவர்களால் நினைவுசெய்வதில் நிலைத்திருக்க முடிவதில்லை. தந்தை இப்போது உங்களுக்குப் புராதன யோகத்தைக் கற்பிக்கிறார். தந்தை கூறுகிறார்: நானே வந்து உங்களுக்கு யோகம் கற்பிக்கிறேன். இப்போது என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் என்னிடம் வரவே வேண்டும். இதுவே நினைவு யாத்திரை ஆகும். அது உங்களது இனிய மௌன வீடாகும் பாரதவாசிகளாகிய நீங்கள் பாரதத்திற்குச் சென்று, உங்களது முழு ஆஸ்தியையும் பெறுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்களது சத்தியத்தை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்! நீங்கள் எதாவது தவறு செய்தால் தந்தையிடம் மன்னிப்புக் கேளுங்கள். பாருங்கள், இக்குழந்தை பாபாவிடம் விசேடமாக ஒருநாளை ஒதுக்கி மன்னிப்புக் கேட்பதற்காகவே வந்திருக்கிறார். அவர் சிறிய தவறொன்றையே செய்தார். ஆகையாலே இங்கு ஓடி வந்திருக்கிறார். அவரது மனச்சாட்சி உறுத்தியதால், பாபாவிடம் நேரடியாகவே வந்து அனைத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என நினைத்தார். அவருக்குத் தந்தை மீது பெரும் மரியாதை உள்ளது! இதைவிட பெரும் பாவங்களைப் பல குழந்தைகள் செய்தாலும் அவர்கள் அவற்றை அறியாமலே இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அற்புதமான குழந்தை! நீங்கள் மிகவும் சிறப்பானவர்! நீங்கள் சிறிய தவறையே செய்திருந்தாலும், மன்னிப்புக் கேட்பதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். பாபா கூறுகிறார்: எப்போதுமே உங்கள் தவறுகளை நீங்கள் பாபாவிடம் கூறி அதற்கு மன்னிப்புக் கேளுங்கள். அவ்வாறு செய்யா விட்டால் அந்தப் பாவம் அதிகரித்து நீங்கள் பின்னர் வீழ்ந்து விடுவீர்கள். பிரதானமான விடயமான யோகத்தினால் மாத்திரமே நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். இந்த யோகத்தில் பெருமளவு பின்னடைவு உள்ளது. இந்த ஞானம் இலகுவானது. அது ஒரு கதையைப் போன்றதாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் அது யாருடைய இராச்சியமாக இருந்தது? எவ்வாறு அவர்கள் அதை ஆட்சி செய்தார்கள்? எவ்வளவு காலத்திற்கு அவர்கள் அதை ஆட்சி செய்தார்கள்? இராச்சியத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது, எவ்வாறு விகாரங்களில் அகப்பட்டார்கள்? அவர்களை எவரும் வெற்றி கொள்ளவில்லை. அவர்கள் வைசியர்களான போதே அவர்களை வெற்றி கொண்டார்கள். இராவணன் அவர்களிடம் இருந்து இராச்சியத்தை அபகரித்துக் கொண்டான். நீங்கள் மீண்டும் ஒருமுறை இராவணனை வெற்றி கொண்டு உங்களது இராச்சியத்தை மீளப் பெறுகிறீர்கள். இது கூட மிக அரிதாகவே எவரது புத்தியிலும் பதிகிறது. சிலர் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், தந்தைக்குக் கீழ்ப்படிவானவர்களாகவும் இருக்கிறார்கள். அஞ்ஞானப் பாதையிலும் கூட சிலர் நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் கீழ்ப்படிவாகவும் இருக்கிறார்கள். சில வேலைக்காரர்கள் மிக்க நம்பிக்கைக்கு உரியவர்கள். பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் சிதறிக் கிடந்தாலும் அவர்கள் ஒரு ரூபாயைக் கூட எடுக்க மாட்டார்கள். அவர்கள் கூறுவார்கள்: முதலாளி, நீங்கள் உங்கள் சாவியை விட்டுவிட்டுச் சென்று விட்டீர்கள். எனவே நான் அதைக் கவனமாகத் திருப்பி உங்களிடம் கொடுக்கின்றேன். இன்னமும் அவ்வாறானவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். தந்தை தொடர்ந்து உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். அதனாலேயே கூறப்படுகிறது: இதனாலேயே சிலரால் மாலையின் மணியாக ஆக முடிவதில்லை. ஆகையினாhல் அவர்கள் அங்கு சென்று பின்னர் வேலைக்காரர்களாகவோ அல்லது பணிப்பெண்களாகவோ ஆகுகிறார்கள். அவர்கள் கற்காததால் நிச்சயமாக அவர்களது நிலைமை இவ்வாறாகி விடுகிறது. அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: யோகமே உங்களது இலக்காகும். மாயை உங்கள் மூக்கை முற்றாகப் பிடித்து, உங்களை யோகம் செய்ய அனுமதிப்பதில்லை. யோகம் இருக்குமாயின், அவர்களால் மிக நன்றாக சேவை செய்ய முடியும். பாவத்தைப் பற்றிய பயம் இருக்கும். இந்தக் குழந்தை மிகவும் நல்லவர். நேர்மை இருப்பின் இவ்வாறாகவே இருக்கும். இவரது அந்தஸ்து, சில நல்ல குழந்தைகளிலும் உயர்ந்ததாகும். சேவை செய்பவர்கள் எங்கேயாயினும் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பாபாவிடம் எதையுமே கூறுவதில்லை. அவர்கள் எதில் அகப்பட்டிருக்கிறார்களோ, அதை விட்டுவிடச் சொன்னாலும், அவர்கள் அதனைச் செய்வதில்லை. பாடலில் அவர்கள் சத்தியம் செய்தார்கள்: எது நடந்தாலும் பரவாயில்லை. மீண்டும் நான் அவ்வாறான தவறைச் செய்யவே மாட்டேன். சரீர உணர்வே பிரதானமாக உள்ளது. சரீர உணர்வினாலேயே நீங்கள் தவறுகள் செய்கிறீர்கள். பலர் தவறு செய்வதாலேயே நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். உங்களுக்கு விளங்கப்படுத்துவதே தந்தையின் கடமையாகும். அவர் அவ்வாறு விளங்கப்படுத்தாது விட்டால், நீங்கள் கூறுவீர்கள்: எங்களுக்கு இதைப் பற்றி எவருமே கூறவில்லை! இதன் அடிப்படையில் கதை ஒன்றுள்ளது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்! அல்லாவிட்டால் பெருமளவு தண்டனையை அனுபவிக்க வேண்டும். பின்னர் கூறாதீர்கள்: எங்களுக்கு இதைப்பற்றி ஏன் கூறவில்லை? பாபா ஒவ்வொரு விடயத்தையும் உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் சிறிய பாவம் ஒன்றைச் செய்தாலுமே அது பெருமளவு அதிகரிக்கிறது. அதன் பின்னர் தந்தையின் முன்னால் உங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. பொய் சொல்லாது, அதை ஒப்புக் கொண்டு, தந்தையிடம் மன்னிப்புக் கேளுங்கள்! சிவபாபாவினால் உங்களைப் பார்க்க முடியாது என்று நினைத்து விடாதீர்கள். அறியாமைப் பாதையிலும் கூட அவர் அனைத்து விடயங்களையும் அறிந்தவராக இருப்பதனாலேயே, அவர் பாவ, புண்ணியங்களுக்கான பலன்களைத் தருகிறார். அவர் உங்களுக்கு மிகத் தெளிவாகக் கூறுகிறார்: நீங்கள் பாவம் செய்தால் மிகக் கடுமையான தண்டனை இருக்கும். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்களது ஆஸ்தியைப் பெறுவதற்கே இங்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் காதுகள் இரண்டையும் அறுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் ஒன்றைக் கூறுகிறார்கள், ஆனால் வேறு எவரையோ நினைவு செய்கிறார்கள். தந்தையை நினைவு செய்யாதவர்களின் நிலைமை என்னவாகும்? தூய உணவு உண்ணுதல், உண்மை பேசுதல், எளிமையான ஆடைகளை அணிதல் போன்றவையும் இக்காலத்தையே குறிக்கின்றன. தந்தை வந்து உங்களுக்கு கற்பிப்பதால், நீங்கள் அவரிடம் ஒவ்வொரு விடயத்திலும் நேர்மையோடு இருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நேர்மையுடன் தந்தையின் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். முற்றிலும் நேர்மையாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருங்கள். இறை குடும்பத்தின் மீது உண்மையான அன்பு கொண்டிருங்கள்.2. ஸ்ரீமத்துடன் உங்களது மனத்தின் சொந்தக் கட்டளைகளையோ அல்லது இராவணனது கட்டளைகளையோ கலக்காதீர்கள். தந்தையைத் தவிர எவருக்கும் உரியவர்கள் இல்லை என்ற உத்தரவாதத்தை உறுதியாகக் கொண்டிருங்கள். உங்கள் இதயத்தைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக உபகாரியாகி, உங்களின் ஆன்மீக நறுமணத்தால் அனைவருக்கும் இறை செய்தியை வழங்குவீர்களாக.ஆன்மீகத்தின் சகல சக்திகளையும் கிரகியுங்கள். உங்களின் ஆன்மீக நறுமணம் இலகுவாக ஆத்மாக்கள் அனைவரையும் உங்களை நோக்கிக் கவரும். உங்களின் மனதின் சக்தியால், உங்களால் தமோபிரதான் சடப்பொருளை சதோபிரதானாக மாற்றக் கூடியதாக இருப்பதனால், உங்களின் ஆன்மீக சக்தியைத் தந்தையின் பிரதான செய்தியை, உங்களுக்கு முன்னால் வர முடியாத ஆத்மாக்களுக்கும் தொலைவில் இருந்தே வழங்குவதற்குப் பயன்படுத்துங்கள். இந்தச் சூட்சுமமான பொறிமுறையை நீங்கள் துரிதமாக்கும்போது, பரிதவிக்கும் ஆத்மாக்கள் பலரும் உங்களிடம் இருந்து ஏதாவதொன்றின் ஒரு துளியையேனும் பெற்றுக் கொள்வார்கள். அப்போது நீங்கள் உலக உபகாரி என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் தூய, மேன்மையான எண்ணங்கள் உங்களுக்குள் வெளிப்படட்டும், அப்போது வீணானவை இயல்பாகவே அமிழ்ந்துவிடும்.அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலை அற்றவராகவும் இருங்கள்.
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலை உங்களுக்கு முன்னால் வரும்போதும், தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இருப்பதை அனுபவம் செய்ய மாட்டீர்கள், ஆனால் உங்களுடன் ஏதொவொரு விசேடமான சக்தி இருப்பதை அனுபவம் செய்வீர்கள். எத்தனை புயல்கள் வந்தாலும், தந்தை உங்களுடன் இருக்கும்போது, அந்தப் புயல்கள் அனைத்தும் ஒரு பரிசாக மாறிவிடும். ஒரு வெற்றியாளர் ஆத்மாவாகி, நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டவர்கள் வெற்றியாளர்கள் என்ற பட்டத்தின் விழிப்புணர்வுடன் வெற்றி வருடத்தைக் கொண்டாடுங்கள்.